| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
தனிக்குடை
|
தனியரசாட்சி .
|
|
தனிக்கோல்
|
தனியரசாட்சி .
|
|
தனிகம்
|
கொத்துமல்லி .
|
|
தனிகன்
|
செல்வன் .
|
|
தனிகை
|
இளம்பெண் ; கற்புடையவள் .
|
|
தனிச்சி
|
கணவனைப் பிரிந்து தனித்திருப்பவள் .
|
|
தனிச்சித்தம்
|
அமைதியான மனம் .
|
|
தனிச்செய்கை
|
பிறருடன் சேராது தானே செய்யும் வேளாண்மை .
|
|
தனிச்சொல்
|
கலிப்பா முதலியவற்றில் ஆங்கு என்பதுபோலத் தனித்து வருஞ்சொல் ; தனிச்சீர் .
|
|
தனிசர்
|
கடன் வாங்கினோர் , கடன்காரராகிய குறும்பரசர் .
|
|
தனிசு
|
கடன் .
|
|
தனிட்டை
|
அவிட்டநாள் ; அவிட்டம் முதலிய ஐந்து நட்சத்திரங்கள் .
|
|
தனித்தகுடி
|
அநாதக் குடும்பம் .
|
|
தனித்தல்
|
ஒன்றியாதல் ; நிகரற்றிருத்தல் ; உதவியற்றிருத்தல் .
|
|
தனித்தன்மைப்பன்மை
|
தன்னொருவனையே குறிக்கும் தன்மைப்பன்மை .
|
|
தனித்தனி
|
ஒவ்வொன்றாய் அல்லது ஒவ்வொருவராய் .
|
|
தனித்தாள்
|
ஒன்றியாள் ; உதவியற்ற ஆள் ; ஒற்றைக் காகிதம் .
|
|
தனித்தி
|
தனியாக விடப்பட்டவள் .
|
|
தனித்திருத்தல்
|
தனிமையாயிருத்தல் ; ஒன்றியாயிருத்தல் .
|
|
தனிதம்
|
ஒலி ; முழக்கம் .
|
|
தனிதர்
|
ஒன்றியாயிருப்பவர் .
|
|
தனிநிலை
|
ஆய்த எழுத்து ; தனியே நின்று பொருள் முடியும் செய்யுள் ; ஒப்பற்ற நிலை ; தனித்து நிற்கை .
|
|
தனிநிலையொரியல்
|
தாளவிகற்பங்களுள் ஒன்று .
|
|
தனிப்படுதல்
|
பிரிந்து ஒன்றியாதல் .
|
|
தனிப்பாட்டு
|
விடுகவி .
|
|
தனிப்பாடல்
|
விடுகவி .
|
|
தனிப்பாடு
|
தனிமை ; முழுப் பொறுப்பு .
|
|
தனிப்புடம்
|
உட்காரும்வகை ஒன்பதனுள் ஒன்று .
|
|
தனிப்புறம்
|
ஒதுங்கின இடம் .
|
|
தனிப்பொருள்
|
ஒப்பு உயர்வற்ற பொருள் .
|
|
தனிமம்
|
தனிப்பொருள் , மூலகம் .
|
|
தனிமுடி
|
தனியரசு .
|
|
தனிமுதல்
|
கடவுள் ; தனிவாணிகம் ; கூட்டு வாணிகத்தில் ஒவ்வொரு பங்காளியும் இட்ட விடுமுதல் .
|
|
தனிமை
|
தனித்திருக்கும் நிலைமை ; உதவியின்மை ; ஒதுக்கம் ; ஒப்பின்மை .
|
|
தனிமைப்பாடு
|
ஒன்றியான நிலை ; உதவியற்றநிலை .
|
|
தனிமையாற்றல்
|
வணிகர் எண்குணத்துள் வாணிகத்தின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிந்திருக்கை .
|
|
தனிமொழி
|
தொகைப்படாது தனியே நிற்குஞ்சொல் ; பிறமொழியினின்று பிறக்காத மொழி .
|
|
தனியரசாட்சி
|
ஏகாதிபத்தியம் .
|
|
தனியன்
|
தனித்த ஆள் ; குரு வணக்கமான ஒற்றைச் செய்யுள் ; தனியானவன் ; இனத்தினின்றும் பிரிந்தமையால் மூர்க்கம்கொண்ட விலங்கு ; ஒரு நூலை அல்லது ஆக்கியோனைப் புகழ்ந்து கூறும் தனிச் செய்யுள் .
|
|
தனியா
|
கொத்துமல்லி ; அரைக்கச்சை .
|
|
தனியூர்
|
பெருநகர் .
|
|
தனிவலிப்பெருமாள்
|
குப்பைமேனிப்பூடு .
|
|
தனிவழி
|
துணையற்ற வழி .
|
|
தனிவீடு
|
தனிமையான வீடு ; ஒற்றைக் குடியுள்ள வீடு ; ஒரே சதுரமான வீடு ; வீடுபேறு .
|
|
தனு
|
உடல் ; வில் ; தனுராசி ; சிறுமை ; நான்கு கரங்கொண்ட நீட்டலளவை ; எருத்தின் முக்காரம் ; மார்கழி மாதம் ; ஊன்றிப் பேசுகை ; தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி .
|
|
தனுக்காஞ்சி
|
செவ்வழி யாழ்த்திறத்துள் ஒன்று .
|
|
தனுகாண்டன்
|
அம்பு ; வில் ; விற்போர் வல்லவன் .
|
|
தனுகூபம்
|
மயிர்த்துளை .
|
|
தனுசன்
|
மகன் ; தனுவினிடம் ; தோன்றிய அசுரன் .
|
|
தனுசாத்திரம்
|
வில்வித்தை .
|
|
தனுசாரி
|
இந்திரன் ; திருமால் .
|
|
தனுசு
|
வில் ; தனுராசி .
|
|
தனுசை
|
மகள் .
|
|
தனுத்திரம்
|
கவசம் .
|
|
தனுத்துருவம்
|
வில்லுக்குதவும் மரமான மூங்கில் .
|
|
தனுமணி
|
ஒரு போரில் ஆயிரம்பேரைக் கொன்ற வீரர் வில்லில் கட்டும் மணி .
|
|
தனுமானசி
|
பொருள்மேல் பற்றறுதலையுடைய மனநிலை .
|
|
தனுமேகசாய்கை
|
நீலக்கல் .
|
|
தனுர்
|
காண்க : தனுசு .
|
|
தனுர்மாதம்
|
மார்கழிமாதம் .
|
|
தனுர்வித்தை
|
வில்வித்தை .
|
|
தனுர்வேதம்
|
வில்வித்தை .
|
|
தனுரசம்
|
உடலின் ரசமாகிய வியர்வை .
|
|
தனுருகம்
|
மயிர் .
|
|
தனுரேகை
|
வில்வடிவான கைக்கோடு .
|
|
தனுவாரம்
|
போர்க்கவசம் .
|
|
தனுவேதம்
|
காண்க : தனுர்வேதம் .
|
|
தனுவேதி
|
வில்லாளி .
|
|
தனேசன்
|
குபேரன் .
|
|
தனை
|
அளவு குறிக்கப் பிற சொல்லின்பின் வரும் ஒரு சொல் .
|
|
தனையள்
|
மகள் .
|
|
தனையன்
|
மகன் .
|
|
தனையை
|
காண்க : தனையள் .
|