| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
ஞானநாயகன்
|
கடவுள் ; மெய்யறிவால் சிறந்தவன் .
|
|
ஞானநிட்டை
|
இறைவனோடு ஆன்மா ஒன்றி நிற்கும் அனுபவநிலை .
|
|
ஞானநிலை
|
காண்க : ஞானமார்க்கம் ; ஆத்தும ஞான நிச்சயம் .
|
|
ஞானப்பல்
|
கடைசிக் கடைவாய்ப்பல் .
|
|
ஞானப்புதல்வன்
|
மாணாக்கன் .
|
|
ஞானப்பூங்கோதை
|
திருக்காளத்தியில் உள்ள உமாதேவி .
|
|
ஞானப்பைத்தியம்
|
ஞானத்தால் உண்டாகும் அறிவுமயக்கம் .
|
|
ஞானபரன்
|
ஞானத்தால் சிறந்த கடவுள் .
|
|
ஞானபாதம்
|
சிவாகமம் நாற்பாதங்களுள் பதி , பசு , பாசங்களாகிய முப்பொருளைப்பற்றிக் கூறும் முதற்பகுதி ; காண்க : ஞானமார்க்கம் ; அருகக் கடவுளது திருமொழி .
|
|
ஞானபாரகன்
|
ஞானவறிவிலே தெளிவடைந்தவன் .
|
|
ஞானபுத்திரன்
|
காண்க : ஞானப்புதல்வன் .
|
|
ஞானபூசை
|
அறிவுநிலையில் நின்று அறிவு நூல்களை ஓதல் ; ஓதுவித்தல் முதலிய பூசனை .
|
|
ஞானபூரணன்
|
அறிவு நிறைந்தவன் .
|
|
ஞானம்
|
அறிவு ; கல்வி ; பரஞானம் ; பூமி ; தத்துவநூல் ; தசபாரமிதைகளுள் ஞானம் நிரம்புகை ; மதிஞானம் , சுருதஞானம் , அவதிஞானம் , மனப்பரியய ஞானம் , கேவலஞானம் என்னும் ஐவகை ஞானங்கள் ; சிவனைச் சகளமும் நிட்களமும் கடந்த திருமேனி உடையவராகக் கேட்டல் முதலிய ஞான முறைப்படி அறிவால் வழிபடுகை ; பூசையில் சிவலிங்கம் அமைவதற்குரிய சலாசனங்களுள் ஒன்று .
|
|
ஞானமார்க்கம்
|
ஞானநெறி , முத்தி எய்தற்குரிய தலைசிறந்த ஞானபாதம் .
|
|
ஞானமூர்த்தி
|
அறிவு உருவமான கடவுள் ; சிவன் ; அறிவுக்கு இறைவியாம் கலைமகள் .
|
|
ஞானவல்லியம்
|
பார்வதி ; கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பைக் கூறும் கூவநூல் .
|
|
ஞானவான்
|
காண்க : ஞானி .
|
|
ஞானவிரல்
|
மோதிரவிரல் .
|
|
ஞானவிருத்தன்
|
அறிவால் முதிர்ந்தவன் .
|
|
ஞானவீரன்
|
பரஞானத்தில் வீரனாயுள்ளவன் .
|
|
ஞானன்
|
அறிவு முதிர்ந்தவனான பிரமன் .
|
|
ஞானாகரன்
|
அறிவிற்கு இருப்பிடமானவன் .
|
|
ஞானாகாசம்
|
ஞானியனைத்தையும் ஒருங்கு உணர்தற்குரிய பரவெளி .
|
|
ஞானாசாரம்
|
முத்திமார்க்கத்தில் சிறந்ததாகிய ஞானபாதத்திற்குரிய ஒழுக்கம் .
|
|
ஞானாசாரியன்
|
மெய்யறிவு கொளுத்தும் ஆசிரியன் .
|
|
ஞானார்த்தம்
|
மெய்ப்பொருள் .
|
|
ஞானாரணியம்
|
அறிவை மறைப்பதான கருமம் .
|
|
ஞானானந்தம்
|
பேரின்பம் .
|
|
ஞானானந்தன்
|
கடவுள் .
|
|
ஞானி
|
ஞானமுள்ளவன் ; நாலாம் பாதத்தோன் ; பேரறிவுடையவன் ; அருகன் ; நான்முகன் ; கேது ; சேவல் .
|
|
ஞானேந்திரியம்
|
உணர்தற்குரிய மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்பன .
|
|
ஞானோதயம்
|
மெய்யறிவு தோன்றுகை .
|
|
ஞானோபதேசம்
|
ஞானபோதனை ; ஞானாசிரியரிடத்தே உபதேசம் பெறுகை .
|
|
ஞானோபதேயம்
|
ஞானபோதனை ; ஞானாசிரியரிடத்தே உபதேசம் பெறுகை .
|
|
ஞிமிர்
|
ஒலி .
|
|
ஞிமிர்தல்
|
வண்டு முதலியன ஒலித்தல் ; நிமிர்தல் .
|
|
ஞிமிறு
|
தேனீ ; வண்டு .
|
|
ஞெகிழ்தல்
|
கழலுதல் ; தளர்தல் ; மனமிளகுதல் ; மலர்தல் ; உருகுதல் ; மெலிதல் ; சோம்புதல் .
|
|
ஞெகிழம்
|
சிலம்பு .
|
|
ஞெகிழி
|
கொள்ளிக்கட்டை ; தீக்கடைகோல் ; தீ ; காண்க : கொடிவேலி ; சிலம்பு .
|
|
ஞெண்டு
|
காண்க : ஞண்டு .
|
|
ஞெண்டுகம்
|
காண்க : பெருவாகை .
|
|
ஞெண்டுதல்
|
கிண்டுதல் .
|
|
ஞெப்தி
|
நினைவு ; அறிவு .
|
|
ஞெமர்தல்
|
பரத்தல் ; நிறைதல் .
|
|
ஞெமல்
|
சருகு .
|
|
ஞெமவ்தல்
|
திரிதல் .
|
|
ஞெமலுதல்
|
திரிதல் .
|
|
ஞெமலி
|
மகநாள் .
|
|
ஞெமன்கோல்
|
துலாக்கோல் .
|
|
ஞெமிடுதல்
|
கசக்குதல் .
|
|
ஞெமிதல்
|
நெரிதல் .
|
|
ஞெமிர்த்தல்
|
ஒடித்தல் ; நெரித்தல் ; அழுத்தல் ; பரப்புதல் .
|
|
ஞெமிர்தல்
|
பரத்தல் ; முற்றுதல் ; தங்குதல் ; ஒடிதல் ; நெரிதல் .
|