| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
சோழியமணம்
|
இருபதினாயிரம் பாக்குக் கொண்ட அளவு .
|
|
சோழியன்
|
சோழநாட்டான் ; பார்ப்பனர் , வேளாளர் முதலியோருள் சில வகுப்பினர்க்கு வழங்கும் பெயர் ; ஒரு மண்வெட்டிவகை .
|
|
சோழியாவணம்
|
காண்க : சோழியமணம் .
|
|
சோளகம்
|
குடுமி வைக்கும் சடங்கு .
|
|
சோளம்
|
ஒரு தானியவகை ; சங்கஞ்செடி ; காண்க : சோழம் .
|
|
சோளன்
|
காண்க : சோழன் ; மக்காச்சோளம் ; ஒரு தானியவகை .
|
|
சோளி
|
காண்க : சோழியப்பை .
|
|
சோளிகை
|
காண்க : சோழியப்பை .
|
|
சோற்றமலை
|
காண்க : சோற்றுக்கட்டி .
|
|
சோற்றலகு
|
சிப்பல் ; மரத்தில் வயிரமில்லாத பாகம் .
|
|
சோற்றி
|
மரத்தினுட்சோறு ; வயிரமின்மை ; பழத்தின் சதைப்பாகம் ; பச்சிலைவகை ; சோறு .
|
|
சோற்றிலை
|
காண்க : சோற்றுக்கற்றாழை .
|
|
சோற்றுக்கட்டி
|
அன்னவுருண்டை .
|
|
சோற்றுக்கடன்
|
உண்ட சோற்றுக்குக் கைம்மாறாகச் செய்யும் செயல் ; கடமையாக மாத்திரம் இடும் சோறு .
|
|
சோற்றுக்கற்றாழை
|
வெள்ளிய உள்ளீடுடைய கற்றாழைவகை .
|
|
சோற்றுக்குவால்
|
அன்னக்குவியல் .
|
|
சோற்றுக்கை
|
சோற்றை எடுத்துதவும் வலக்கை .
|
|
சோற்றுத்தடி
|
காண்க : சோற்றுக்கட்டி .
|
|
சோற்றுத்துருத்தி
|
சோற்றால் நிரப்பிய துருத்தி ; உடம்பு .
|
|
சோற்றுப்பற்று
|
சோற்றுப்பருக்கை .
|
|
சோற்றுப்பனை
|
வயிரம் அற்ற பனை .
|
|
சோற்றுப்பானை
|
சோறாக்கும் மட்பாண்டம் ; பெருந்தீனிக்காரன் .
|
|
சோற்றுப்பை
|
இரைப்பை .
|
|
சோற்றுமயக்கம்
|
பேருணவு உண்டமையால் வரும் உறக்கம் .
|
|
சோற்றுமாடு
|
பயனற்றவன் ; சோறு தின்பதற்கு மாத்திரமுள்ள மாடு போன்றவன் .
|
|
சோறாக்குதல்
|
உணவு சமைத்தல் .
|
|
சோறு
|
அன்னம் ; மிருதங்கத்தின் நடுவில் பூசும் கலவைச்சாந்து ; கற்றாழை முதலியவற்றின் சோறு ; பனை முதலியவற்றின் உள்ளீடு ; முத்தி ; பரணிநாள் .
|
|
சோறுகொல்லி
|
பெருந்தீனிக்காரன் ; அன்னபேதி .
|
|
சோறுவடித்தல்
|
காண்க : சோறாக்குதல் ; சமைத்த சோற்றினின்று கஞ்சியை வடித்தல் .
|
|
சோறுவாய்த்தல்
|
செஞ்சோற்றுக் கடன் கழித்தல் .
|
|
சோறூட்டல்
|
குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் சடங்கு .
|
|
சோன்மதன்
|
பித்தன் .
|
|
சோனகம்
|
ஒரு நாடு ; ஒரு மொழி .
|
|
சோனகன்
|
யவன நாட்டான் .
|
|
சோனம்
|
மேகம் ; காண்க : சோனகம் .
|
|
சோனாமாரி
|
விடாமழை .
|
|
சோனாவாரி
|
விடாமழை .
|
|
சோனாமேகம்
|
பெருமழை பொழியும் முகில் .
|
|
சோனி
|
வளர்ச்சியற்றது ; மெலிந்தவன்(ள்) .
|
|
சோனை
|
கார்மேகம் ; விடாமழை ; விடாமழைப் பாட்டம் ; மழைச்சாரல் ; திருவோணநாள் ; கைப்பிடிச் சுவர் .
|
|
சோனைகட்டுதல்
|
மழைபெய்யுங் குறிப்பாக ஓரிடத்தில் மேகம் கூடியிருக்கை .
|
|
சோனைப்புல்
|
ஒருவகைப் புல்வகை .
|
|
சோனைமாரி
|
காண்க : சோனாமாரி , சோனாவாரி .
|
|
சோனைமேகம்
|
காண்க : சோனாமேகம் .
|
|
சௌ
|
ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+ஔ) ; சிறுமி ; சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்னும் சொல்லின் முதலெழுத்துக் குறிப்பு .
|
|
சௌக்கம்
|
பண்டங்களின் மலிவு .
|
|
சௌக்கியம்
|
ஆரோக்கியம் ; காண்க : சௌகரியம் ; மலங்கழிக்கை .
|
|
சௌகதன்
|
சூனியவாதி ; புத்தன் .
|
|
சௌகந்தம்
|
நறுமணம் .
|
|
சௌகந்தி
|
ஒரு மாணிக்கவகை ; கந்தக பாடாணம் .
|
|
சௌகந்திகம்
|
வெள்ளாம்பல் ; காண்க : சௌகந்தி ; நீலோற்பலம் ; செங்குவளை .
|
|
சௌகந்திகை
|
நறுமணமுடையது ; ஒருவகைத் தாமரை .
|
|
சௌகம்
|
நான்கு .
|
|
சௌகரியம்
|
ஏந்து ; வசதி ; மலிவு .
|
|
சௌசம்
|
தூய்மை ; கால்கழுவுதல் .
|
|
சௌசன்னியம்
|
அன்பு , இனிய குணம் , ஒற்றுமை .
|
|
சௌசிகன்
|
தையற்காரன் .
|
|
சௌசேயன்
|
வண்ணான் .
|