| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
சின்னிபொம்மை
|
பின்னல்மயிருள்ள தலையும் மரத்தால் செய்யப்பட்ட கைகளும் நீண்டு தொங்கும் சட்டையும் கொண்டதாய் ஒருசில பிச்சைக்காரிகள் தம் பாட்டுக்கு ஏற்பத் தாளம் இடும்படி செய்து கையில் வைத்தாட்டும் ஒருவகைப் பொம்மை .
|
|
சின்னீர்
|
கலங்கலான நீர் ; மூத்திரம் .
|
|
சின்னூல்
|
சிறு நூல் ; நேமிநாதம் என்னும் இலக்கண நூல் .
|
|
சின்னெறி
|
கள்ளச் சிறுவழி .
|
|
சின்னை
|
பெரிய கடல்மீன்வகை .
|
|
சினகர்
|
சைனர் , சமணர் .
|
|
சினகரம்
|
கோயில் ; சமணக்கோயில் ; சிறுகோயில் ; அரண்மனை .
|
|
சினத்தல்
|
கோபித்தல் ; புண் முதலியன சிவத்தல் .
|
|
சினந்தவிர்ந்தோன்
|
கோபம் தவிர்ந்தவனாகிய புத்தன் ; அருகன் .
|
|
சினப்பு
|
கோபம் ; புண் முதலியவற்றின் வீக்கம் ; வேனற்கட்டி ; வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு .
|
|
சினம்
|
கோபம் ; நெருப்பு ; போர் ; வெம்மை .
|
|
சினவர்
|
பகைவர் .
|
|
சினவரன்
|
சினத்தை அடக்கியவன் ; புத்தன் ; அருகன் .
|
|
சினவல்
|
போர் .
|
|
சினவுதல்
|
கோபிதல் ; கொதித்தெழுதல் ; பொருதல் .
|
|
சினவுநர்
|
பகைவர் .
|
|
சினன்
|
புத்தன் ; அருகன் .
|
|
சினா
|
வட்டத்திருப்பிச்செடி ; பங்கம்பாளைச்செடி .
|
|
சினாடி
|
மூக்கிரட்டைக்கொடி .
|
|
சினாடிகா
|
மூக்கிரட்டைக்கொடி .
|
|
சினாது
|
மெலிந்தது ; மெலிவு .
|
|
சினாவில்
|
தும்பைப்பூண்டு .
|
|
சினீவாலி
|
சந்திரகலை தோன்றும் அமாவாசை நாள் .
|
|
சினேகபலம்
|
தைலத்தைக் கொண்ட எள் .
|
|
சினேகம்
|
நட்பு ; எண்ணெய் .
|
|
சினேசம்
|
சாதிக்காய் .
|
|
சினேந்திரன்
|
புத்தன் ; அருகன் .
|
|
சினை
|
விலங்கு முதலியவை கருக்கொண்டிருத்தல் ; கருப்பம் ; முட்டை ; பூவரும்பு ; உறுப்பு ; மூங்கில் ; மொட்டு ; மரக்கிளை .
|
|
சினைகொள்ளுதல்
|
கருக்கொள்ளுதல் .
|
|
சினைத்தல்
|
தோன்றுதல் ; பூ அரும்புதல் ; தழைத்தல் ; சிரங்கு புடைத்தல் ; கருக்கொள்ளுதல் ; பருத்தல் .
|
|
சினைப்படுத்துதல்
|
காண்க : சினையாக்குதல் .
|
|
சினைப்படுதல்
|
காண்க : சினைகொள்ளுதல் .
|
|
சினைப்பருவம்
|
கருக்கொள்ளும் பருவம் ; நெற்கதிரில் மணிபிடிக்கும் பருவம் .
|
|
சினைப்பு
|
வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு ; கருக்கொள்ளுகை ; அரும்புகை ; கொழுப்பு .
|
|
சினைப்பூ
|
மரக்கொம்புகளில் தோன்றும் பூ .
|
|
சினைப்பெயர்
|
உறுப்பைக் குறிக்கும் பெயர் ; உறுப்புக் காரணமாய் வரும் பெயர் .
|
|
சினையாக்குதல்
|
கருவுண்டாக்குதல் ; தொல்லைதருதல் .
|
|
சினையாகுபெயர்
|
சினைப்பெயர் அதன் முதலுக்கு ஆகும் பெயர் .
|
|
சினையாறுபடுகை
|
வெள்ளம்வருதற் குறியாக ஆற்றுநீர் கசிதல் .
|
|
சினைவினை
|
சினையின் தொழிலைக் காட்டி நிற்கும் வினைச்சொல் .
|
|
சீ
|
ஓர் உயிர்மெய்யெழுத்து(ச் + ஈ) ; திருமகள் ; சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி ; சீழ் ; சளி ; இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு .
|
|
சீக்கட்டுதல்
|
சீழ்பிடித்தல் .
|
|
சீக்கல்
|
நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலியாகிய சீழ்க்கை ; கல்வகை .
|
|
சீக்காச்சா
|
நாய்ப்புடல்கொடி .
|
|
சீக்காய்
|
பழுக்காத பனங்காய் ; காண்க : சீழ்க்கை ; சீயக்காய் .
|
|
சீக்கிரப்படுதல்
|
விரைவுபடுதல் ; எளிதிற் சினங்கொள்ளுதல் .
|
|
சீக்கிரபுத்தி
|
அவசரபுத்தி .
|
|
சீக்கிரம்
|
விரைவு ; நோய் முதலியவற்றின் வீறு ; உறைப்பு ; கோபம் ; குதிரை பூட்டிய பெட்டி வண்டி ; அம்பு .
|
|
சீக்கிரான்
|
உசிலமரம் .
|
|
சீக்கிரி
|
உசிலமரம் .
|
|
சீக்கிரியன்
|
உசிலமரம் .
|
|
சீக்கிரியான்
|
உசிலமரம் .
|
|
சீக்குரு
|
முருங்கைமரம் .
|
|
சீக்கூட்டுதல்
|
காண்க : சீக்கட்டுதல் .
|
|
சீக்கை
|
கோழை .
|
|
சீகத்தம்
|
அழகிய கை .
|
|
சீகம்
|
தமரத்தைமரம் .
|