| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
சத்தபுரி
|
மதுரை , அயோத்தி , மாயை ; காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை என்னும் ஏழு புண்ணிய நகரங்கள் .
|
|
சத்தம்
|
ஒலி ; சொல் ; எழுத்து சொற்களைப் பற்றிய நூல் ; சத்தப்பிரமாணம் ; ஏழு ; வாடகை ; வண்டிக்கூலி .
|
|
சத்தமண்டலம்
|
வாயு , வருணன் , சந்திரன் , சூரியன் , நட்சத்திரம் , அக்கினி , மேகம் என்னும் ஏழு உலகங்கள் .
|
|
சத்தமருத்து
|
கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு , மேல் , கீழ் , பலயோனியுயிர்கள் இவற்றினின்று வரும் ஏழுவகைக் காற்றுகள் .
|
|
சத்தமன்
|
யாவரினுஞ் சிறந்தவன் .
|
|
சத்தமாங்கிசம்
|
இராசியை ஏழாகப் பிரித்துக் கோள்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம் ; ஏழில் ஒரு கூறு .
|
|
சத்தமாதர்
|
காண்க : சத்தகன்னிகை .
|
|
சத்தமாதாக்கள்
|
காண்க : சத்தகன்னிகை .
|
|
சத்தமி
|
ஏழாந் திதி ; ஏழாம் வேற்றமை .
|
|
சத்தமுகில்
|
சம்வர்த்தம் , ஆவர்த்தம் , துரோணம் , புட்கலாவருத்தம் , காளமுகி , சங்காரித்தம் , நீலவருணம் என்னும் ஏழு மேகங்கள் .
|
|
சத்தமேகம்
|
சம்வர்த்தம் , ஆவர்த்தம் , துரோணம் , புட்கலாவருத்தம் , காளமுகி , சங்காரித்தம் , நீலவருணம் என்னும் ஏழு மேகங்கள் .
|
|
சத்தரிஷிகள்
|
இருடிகள் எழுவர் ; அகத்தியன் , புலத்தியன் , அங்கிரசு , கௌதமன் , வசிட்டன் , காசிபன் , மார்க்கண்டன் .
|
|
சத்தலோகம்
|
பொன் , வெள்ளி , இரும்பு , செம்பு , ஈயம் , தரா , கஞ்சம் என்னும் ஏழு வகை உலோகங்கள் .
|
|
சண்ணம்
|
ஆண்குறி .
|
|
சண்ணித்தல்
|
பூசுதல் ; சார்ந்திருத்தல் .
|
|
சண்ணுதல்
|
தாக்குதல் ; நீக்குதல் ; நிறைய உண்ணுதல் ; புணர்தல் ; செய்துமுடித்தல் .
|
|
சண்பகம்
|
ஒரு பூமரவகை .
|
|
சண்பங்காறை
|
தாலியின் உருவகை .
|
|
சண்பங்கோரை
|
ஒரு கோரைவகை .
|
|
சண்பனி
|
யோகினி .
|
|
சண்பு
|
கோரைவகை ; நெட்டி .
|
|
சண்பை
|
சீகாழிநகர் .
|
|
சண்மதம்
|
அறுவகைச் சமயம் .
|
|
சண்முகன்
|
ஆறுமுகன் , முருகன் .
|
|
சணகம்
|
புளியாரைக்கீரை ; கடலை ; சணல் .
|
|
சணப்பு
|
சணற்பயிர் ; கஞ்சா .
|
|
சணப்பை
|
சணல் .
|
|
சணப்பொழுது
|
நொடிநேரம் .
|
|
சணம்
|
சணல் ; நொடிநேரம் .
|
|
சணம்பு
|
நார் தரும் ஒரு செடிவகை .
|
|
சணல்
|
நார் தரும் ஒரு செடிவகை .
|
|
சணற்பனார்
|
சணல்நார் .
|
|
சணாய்
|
கடலை .
|
|
சணாய்த்தல்
|
காமங்கொள்ளல் ; கொழுத்தல் .
|
|
சணைத்தல்
|
கொழுத்தல் ; விரிந்துண்டாதல் .
|
|
சத்தக்கருவி
|
தோற்கருவி ; துளைக்கருவி , நரம்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக்கருவிகள் .
|
|
சத்தக்கூலி
|
வண்டிக்கூலி , வண்டிவாடகை .
|
|
சத்தகம்
|
ஏழு கூடியது ; சிறுகத்திவகை ; இறுதிக்கடன் .
|
|
சத்தகன்னிகை
|
அபிராமி , இந்திராணி , கௌமாரி , காளி , நாராயணி , மயேசுவரி , வராகி என்னும் ஏழு மாதர்கள் .
|
|
சத்தகுலாசலம்
|
பூமியைத் தாங்குவனவாகக் கூறப்படும் கைலை , இமயம் , மந்தரம் , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலகிரி என்னும் ஏழு மலைகள் .
|
|
சத்தங்காட்டுதல்
|
ஒலியிடுதல் ; தீங்கிழைக்கும் உயிரினங்கள் விலகும்படி கைதட்டுதல் ; ஆபத்துக்காலம் முதலியவற்றில் முறையிட்டுக் கூவுதல் .
|
|
சத்தங்கேட்டல்
|
வண்டிவாடகை பேசுதல் ; ஒலி கேட்டல் .
|
|
சத்தசமுத்திரம்
|
உப்பு , நீர் , பால் , தயிர் , நெய் , கருப்பஞ்சாறு , தேன் இவற்றையுடைய ஏழு கடல்கள் .
|
|
சத்தசிப்பி
|
கிளிஞ்சில் .
|
|
சத்தசுரம்
|
ஏழு சுரம் .
|
|
சத்ததாது
|
உடம்பின அமைப்பிலுள்ள இரதம் , குருதி , எலும்பு , தோல் , இறைச்சி , மூளை , சுக்கிலம் என்னும் ஏழுவகைப் பொருள்கள் .
|
|
சத்ததாளம்
|
துருவதாளம் , அடதாளம் , ஏகதாளம் , திரிபுடைதாளம் , ரூபகதாளம் , சம்பைதாளம் , மட்டியதாளம் என்னும் ஏழுவகைத் தாளங்கள் .
|
|
சத்ததீர்த்தம்
|
காண்க : சத்தநதி .
|
|
சத்ததீவு
|
நாவல் , இரவி , குசை , கிரவுஞ்சம் , இலவம் , தெங்கு , புட்கரம் என்னும் ஏழு தீவுகள் .
|
|
சத்தநதி
|
கங்கை , யமுனை , சரசுவதி , நருமதை , காவிரி , குமரி , கோதாவரி என்னும் ஏழு தீவுகள் .
|
|
சத்தப்பிரதி
|
கேள்விமூலம் தெரிவது .
|
|
சத்தப்பிரபஞ்சம்
|
சொல்உலகம் .
|
|
சத்தப்பிரமம்
|
ஒலியே தெய்வம் என்னும் நூல் ; அறுபத்துநான்கு கலையுள் சுரபேதம் அறியும் வித்தை .
|
|
சத்தப்பிரமவாதம்
|
நாதமே பிரமம் என்னும் கொள்கை .
|
|
சத்தப்பிரமாணம்
|
ஆகமப் பிரமாணம் , ஆப்தவசனமான வேதம் முதலியவற்றைக் கொண்டு அறியும் வித்தை .
|
|
சத்தபருணி
|
ஏழிலைப்பாலைமரம் .
|