| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
சடங்குகழித்தல்
|
பெண்ணின் முதல் பூப்பில் உரிய சடங்கு செய்தல் ; சில செயல்களுக்குரிய முறைகளைச் செயதல் .
|
|
சடசடவெனல்
|
ஓர் ஒலிக்குறிப்பு .
|
|
சடசடெனல்
|
ஓர் ஒலிக்குறிப்பு .
|
|
சடசீதிமுகம்
|
ஆனி , புரட்டாசி , மார்கழி , பங்குனி மாதங்கள் பிறக்கும் நாள் ; சூரியன் தனுசு 26ஆம் பாகையிலும் ,மீனம் 22 ஆம் பாகையிலும் ; மிதுனம் 18ஆம் பாகையிலும் , கன்னி 14ஆம் பாகையிலும் செல்லும் காலம் .
|
|
சடப்பால்
|
முலைப்பால் .
|
|
சடபதார்த்தம்
|
அறிவில்பொருள் .
|
|
சடபுடெனல்
|
ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு .
|
|
சடம்
|
அறிவில்பொருள் ; அறியாமை ; உடல் ; பொய் ; வஞ்சகம் ; கொடுமை ; சோம்பல் ; பிறக்கும்போது ஆன்மாவில் மோதி அதன் அறிவைக் கெடுக்கும் ஒரு வாயுவகை ; ஆறு என்னும் எண் .
|
|
சடம்பு
|
சணல் .
|
|
சடரம்
|
வயிறு .
|
|
சடராக்கினி
|
வயிற்றுத் தீ , மூலாக்கினி .
|
|
சடலபுடலம்
|
பருத்திருப்பது .
|
|
சடலம்
|
உடம்பு ; பருத்த உடல் ; அறிவில் பொருள் .
|
|
சடலை
|
பருத்திருப்பது ; வீண்செயல் .
|
|
சடவுப்பு
|
அமரியுப்பு ; சமாதியுப்பு .
|
|
சடன்
|
மூடன் , அறிவற்றவன் .
|
|
சடாக்கரம்
|
காண்க : ஆறெழுத்து .
|
|
சடாக்கரி
|
காண்க : சடாட்சரி .
|
|
சடாகம்
|
அருநெல்லிமரம் .
|
|
சடாட்சரம்
|
காண்க : ஆறெழுத்து .
|
|
சடாட்சரி
|
உமை .
|
|
சடாடவி
|
சடைத்திரள் , அடர்ந்த சடை .
|
|
சடாதரம்
|
காண்க : சடாகம் .
|
|
சடாதரன்
|
சடைதரித்த சிவன் ; வீரபத்திரன் .
|
|
சடாதரி
|
பார்வதி .
|
|
சடாதாரம்
|
ஆறு ஆதாரம் ; அவை : மூலாதாரம் , சுவாதிட்டானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை .
|
|
சடாதாரி
|
சடைதரிதத்வன் , சிவன் ; பார்வதி ; கொடியாள்கூந்தல் ; வரிக்கூத்துவகை .
|
|
சடாபாரம்
|
சடைக்கற்றை
|
|
சடாமகுடம்
|
சடைமுடி .
|
|
சடாமகுடன்
|
சிவன் .
|
|
சடாமாஞ்சி
|
செடிவகை ; ஒரு மருந்துவகை .
|
|
சடாமாஞ்சில்
|
செடிவகை ; ஒரு மருந்துவகை .
|
|
சடாமுடி
|
சடைமுடி , மயிர்த்திரள் .
|
|
சடாமுனி
|
பேய்வகை .
|
|
சடாய்
|
சடாயு என்னும் கழுகுவேந்தன் ; காற்சோடுவகை .
|
|
சடாய்த்தல்
|
துப்பாக்கி கெட்டித்தல் ; பெருமிதமாகப் பேசுதல் ; அதட்டுதல் .
|
|
சடாரி
|
கவசம் ; சடகோபன் , நம்மாழ்வார் .
|
|
சடாரிடல்
|
ஓர் ஒலிக்குறிப்பு .
|
|
சடாரெனல்
|
ஓர் ஒலிக்குறிப்பு .
|
|
சடாலம்
|
ஆலமரம் ; தேன்கூடு .
|
|
சடாவல்லவன்
|
சடைமுறையில் வேதப் பகுதிகளைச் சொல்வதில் வல்லவன் .
|
|
சடானன்
|
ஆறு முகத்தையுடைய முருகன் .
|
|
சடிதி
|
விரைவு , சீக்கிரம் ; ஏலத்தோல் .
|
|
சடிதிவு
|
ஏலத்தோல் .
|
|
சடிலம்
|
செறிவு , நெருக்கம் ; வேர் ; குதிரை ; சடையாக அமைந்த மயிர்முடி .
|
|
சடினம்
|
வசம்பு நெட்டிவேர் .
|
|
சடுகுடு
|
ஒருவகை விளையாட்டு .
|
|
சடுத்தம்
|
போட்டி ; போராட்டம் ; வீரவாதம் ; வற்புறுத்தல் .
|
|
சடுத்தாசனம்
|
பூசையில் சிவனது இலிங்கம் அமைவதற்குரிய அனந்தர் , தன்மம் , ஞானம் , வைராக்கியம் , ஐசுவரியம் , பதுமம் என்ற அறுவகை இருக்கை .
|
|
சடுத்தி
|
சோதனை .
|
|
சடுதி
|
விரைவு ; சோதனை .
|
|
சடக்கோதன்
|
வசம்பு .
|
|
சடகம்
|
ஊர்க்குருவி ; கரிக்குருவி ; வட்டில் .
|
|
சடகோபம்
|
திருமால் கோயில்களில் தரிசிப்போர் முடிமீது வைக்கப்படும் திருமாலின் திருவடிநிலை .
|
|
சடகோபன்
|
சடம் என்னும் வாயுவை வென்ற நம்மாழ்வார் .
|
|
சடங்கப்படுதல்
|
மூட்டையாகக் கட்டப்படுதல் ; வேலை செய்துகொண்டிருத்தல் .
|
|
சடங்கப்பூட்டு
|
குண்டுக்கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை .
|
|
சடங்கம்
|
வேதத்திற்கு அங்கமான அறுவகைச் சாத்திரம் ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் ; பயணமூட்டை ; வருத்தம் ; வேலை ; பதினாறு தூக்களவு .
|
|
சடங்கம்போடுதல்
|
மூட்டையாகக் கட்டுதல் .
|
|
சடங்கர்
|
மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன் .
|
|
சடங்கவி
|
மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன் .
|
|
சடங்காதல்
|
பெண்மகள் பூப்படைதல் .
|
|
சடங்கு
|
சாத்திரமும் வழக்கமும்பற்றிய முறையை நடத்தும் கிரியை ; முதற்பூப்புச் சடங்கு ; சாந்திக் கலியாணம் ; குண்டுக் கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை .
|