| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
கோள்முடித்தல்
|
புறந்தூற்றுதல் ; கோட்சொல்லி இருவருக்குள் கலகம் விளைவித்தல் .
|
|
கோள்வாய்
|
புதுப்புண் .
|
|
கோளக்கட்டி
|
புண்வகை .
|
|
கோளகம்
|
மிளகு ; திப்பிலி ; தாளகம் ; மண்டலிப் பாம்பு .
|
|
கோளகை
|
வட்டவடிவம் ; யானையின் தந்தப் பூண் ; மண்டலிப்பாம்பு ; உறை .
|
|
கோளம்
|
உருண்டை ; உயிரிகளின் உடலுக்குள் நீர் ஊறும் தசைப்பற்று .
|
|
கோளயோகம்
|
ஓர் இராசியிலே ஏழு கோள்கள் நிற்க வரும் யோகம் .
|
|
கோளரி
|
சிங்கம் .
|
|
கோளரிக்கொடியோன்
|
சிங்கக்கொடியை உடைய வீமன் .
|
|
கோளவங்கம்
|
ஈயமணல் .
|
|
கோளன்
|
கோள் சொல்லுவோன் ; கைம்பெண் பெற்ற மகன் .
|
|
கோளாங்கல்
|
கூழாங்கல் .
|
|
கோளாம்பி
|
படிக்கம் .
|
|
கோளார்த்தம்
|
நிலவுருண்டையின் பாதி .
|
|
கோளாளன்
|
நூற்பொருள் முதலியவற்றை மறவாது பற்றுவோன் .
|
|
கோளாறு
|
தாறுமாறு ; குற்றம் ; சண்டை ; வழி வகை .
|
|
கோளி
|
கொள்வோன் ; ஆலமரம் ; அத்திமரம் ; பூவாது காய்க்கும் மரம் ; கொழிஞ்சிமரம் ; நான்காம் வேற்றுமை ; கைம்பெண் பெற்ற மகன் ; குதிரை கழுதைகளின் பெட்டை .
|
|
கோளிகை
|
குதிரை கழுதைகளின் பெட்டை .
|
|
கோளிழைத்தல்
|
கொல்லுதல் .
|
|
கோளுரை
|
கோட்சொல்லல் .
|
|
கோளேசம்
|
குங்குமப்பூ .
|
|
கோளை
|
எலி ; குவளை ; தோழி ; கோதாவரி ; மனோசிலை ; நீர்ச்சால் .
|
|
கோற்காரன்
|
ஊர் ஊழியக்காரன் ; ஓடந்தள்ளுவோன் .
|
|
கோற்குத்து
|
கோல்முனையால் குத்தப்படும் அளவுள்ள நிலம் .
|
|
கோற்குறிப்பு
|
நிலவளவுக் கணக்கு .
|
|
கோற்கூத்து
|
வரிக்கூத்துவகை .
|
|
கோற்கொடி
|
இலந்தைமரம் ; சுரைக்கொடி .
|
|
கோற்புழு
|
உலண்டு .
|
|
கோற்றேன்
|
கொம்புத்தேன் .
|
|
கோற்றொடி
|
வேலைத் திறனமைந்த கைவளையல் .
|
|
கோற்றொழில்
|
அரசாட்சி செய்கை ; அரிய வேலைப்பாடு .
|
|
கோற்றொழிலவன்
|
அரண்மனை வாயிலில் கோல்கொண்டு காவல் செய்பவன் .
|
|
கோற்றொழிலாளர்
|
தண்டத்தைக் கையேந்தி அரசர்க்குமுன் வழிவிலக்குவோர் .
|
|
கோறணி
|
கேலிக்கூத்து ; முகங்காட்டுகை ; திமிர்வாதம் ; முணுமுணுப்பு .
|
|
கோறம்பு
|
ஒரு நெற்றியணிவகை .
|
|
கோறல்
|
கொல்லுதல் .
|
|
கோறின்னல்
|
கோலை மெல்லுகை ; பல் விளக்கல் .
|
|
கோறை
|
பழுது ; சிராய்த்த காயம் ; தொளை ; மணிபதிக்குங் குழி .
|
|
கோன்
|
அரசன் ; தலைவன் ; இடையர் ; பட்டப் பெயர் .
|
|
கோன்மை
|
அரசாட்சி .
|
|
கோனடிதொடுதல்
|
அரசன் அடிமேல் ஆணையிடுதல் .
|
|
கோனான்
|
இடையர் பட்டப்பெயர் .
|
|
கோனிச்சி
|
இடைச்சி .
|
|
கோனோலை
|
அரசனாணை எழுதப்பட்ட திருமுகம் .
|
|
கோழிக்குடி
|
அசோகமரம் .
|
|
கோழிக்கூடு
|
கோழியை அடைத்துவைக்கும் இடம் .
|
|
கோழிக்கொடியோன்
|
கோழியைக் கொடியில் கொண்ட முருகன் ; ஐயனார் .
|
|
கோழிகூவுநேரம்
|
கோழி கூவும் சமயம் , விடியற்காலம் .
|
|
கோழிச்சேவல்
|
ஆண்கோழி .
|
|
கோழித்தலைக் கந்தகம்
|
சிவந்த கந்தகம் .
|
|
கோழிநெஞ்சு
|
அஞ்சிநடுங்கும் மனம் .
|
|
கோழிப்பசளை
|
உமரிக்கீரை .
|
|
கோழிப்போகம்
|
விரைவில் விந்து வெளியேறும் புணர்ச்சி .
|
|
கோழிமுட்டை
|
சுன்னம் , சுழியம் , கோழியினது முட்டை .
|
|
கோழிமுள்
|
கோழிக்காலிலுள்ள கூரிய நகம் .
|
|
கோழிமுளையான்
|
ஒரு பூண்டுவகை .
|
|
கோழியவரை
|
பெருங் கோழியவரைக் கொடி , அவரைவகை .
|
|
கோழியாகக் கூவுதல்
|
கோழிபோலக் கூவுதல் ; மன்றாடுதல் .
|
|
கோழியான்
|
முருகக்கடவுள் .
|
|
கோழியுள்ளான்
|
ஒரு உள்ளான்குருவிவகை .
|
|
கோழிவென்றி
|
சேவலின் போர்வெற்றியைக் கூறும் புறத்துறை .
|
|
கோழிவேந்தன்
|
உறையூர் அரசனான சோழன் .
|
|
கோழை
|
கபம் , உமிழ்நீர் ; மனத்திட்பமின்மை , இரக்கம் ; சிறுபிள்ளை .
|
|
கோழைத்தனம்
|
மனத்திட்பமின்மை , அச்சத்தன்மை .
|
|
கோழைதீர்தல்
|
மனத்திடம் பெறுதல் .
|
|
கோழைபடுதல்
|
கீழ்மையடைதல் , தாழ்வடைதல் .
|
|
கோழைபோக்கி
|
நறுந்தாளி .
|
|
கோழையன்
|
மனத்திடமற்றவன் .
|
|
கோழையிருமல்
|
கபக்கட்டால் வரும் இருமல் .
|
|
கோழைவிந்து
|
துளசி .
|
|
கோள்
|
கொள்ளுகை , துணிவு ; மதிப்பு ; வலிமை ; அனுபவம் ; புறங்கூறுதல் ; பொய் ; இடையூறு ; தீமை ; கொலை ; பாம்பு ; நஞ்சு ; இராகு ; கோள் ; மேகம் ; ஒளி ; பரிவேடம் ; குலை ; இயற்கை ; காவட்டம்புல் ; கொழு ; முன்னிலைப் பன்மை விகுதி .
|
|
கோள்பிராது
|
காண்க : கோளுரை .
|