| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
குருக்கள்
|
ஆசாரியார் ; சிவன்கோயில் பூசாரி ; பார்ப்பனர் அல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவ வேளாளர் ; கௌரவர் .
|
|
குருக்கன்
|
மெலிவிக்கும் நோய் .
|
|
குருக்கு
|
பிரமதண்டுச்செடி ; இளம்பனை முதலியவை நெருங்கிய தோப்பு .
|
|
குருக்குத்தி
|
பிரமதண்டுச்செடி ; பயிரில் விழும் நோய்வகை .
|
|
குருக்கொடுத்தல்
|
கோயிற்பூசை புரிதல் ; கொடுமைசெய்யத் தூண்டல் .
|
|
குருக்கொள்ளுதல்
|
குருவின் தன்மையை மேற்கொள்ளுதல் .
|
|
குருகு
|
விலங்கு முதலியவற்றின் இளமை ; குட்டி ; குருத்து ; வெண்மை ; பறவை ; நாரை ; அன்றில் ; கோழி ; மூலநாள் ; கொல்லுலை மூக்கு ; கைவளை ; குருக்கத்திமரம் ; கல்லால்வகை ; ஒரு நாடு ; இடைச்சங்க நூல்களுள் ஒன்று .
|
|
குருகுபெயர்க்குன்றம்
|
இமயமலை அடிவாரத்திலுள்ள குன்று .
|
|
குருகுமண்
|
வெண்மணல் .
|
|
குருகுமணல்
|
வெண்பொடி மணல் .
|
|
குருகுருத்தல்
|
நமைத்தல் ; நெஞ்சை உறுத்துதல் .
|
|
குருகுலம்
|
குரு மரபு ; குருவின் வாழ்விடம் .
|
|
குருகுலவாசம்
|
கல்வியின் பொருட்டு மாணாக்கர் ஆசிரியருடன் வாழ்தல் .
|
|
குருகூர்
|
நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி .
|
|
குருகை
|
நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி .
|
|
குருச்சி
|
சீனக்காரம் ; நாற்காலி .
|
|
குருசந்திரயோகம்
|
வியாழனுஞ் சந்திரனும் ஓர் இராசியிற் கூடியிருக்கும் யோகம் .
|
|
குருசம்
|
வெண்தோன்றிக்கிழங்கு .
|
|
குருசில்
|
காண்க : குரிசில் .
|
|
குருசு
|
சிலுவை .
|
|
குருசேவை
|
ஆசாரியனை வழிபடுகை .
|
|
குருட்டடியாய்
|
முன்னதாக நினையாதிருத்தல் ; தற்செயலாய் .
|
|
குருட்டாட்டம்
|
கண்மூடித்தனமான செய்கை .
|
|
குருட்டுக்கண்ணாடி
|
முகம் தெரியாத கண்ணாடி .
|
|
குருட்டுக்கல்
|
ஒளிமங்கின கல் .
|
|
குருட்டுச்சாயம்
|
மங்கலான சாயம் .
|
|
குருட்டுத்தனம்
|
அறியாமை , கண்மூடித்தனம் .
|
|
குருட்டுநாள்
|
செவ்வாயும் சனியும் .
|
|
குருட்டுநியாயம்
|
கண்மூடித்தனமான நியாயம் .
|
|
குருட்டுப்பத்தி
|
அறியாமையான பக்தி .
|
|
குருட்டுப்போக்காய்
|
கண்மூடித்தனமாய் ; தற்செயலாய் .
|
|
குருட்டுயோகம்
|
முயற்சியின்றிச் செல்வம் கிட்டுகை .
|
|
குருட்டுவழி
|
கண்மூடித்தனமான முறை .
|
|
குருட்டுவாக்கில்
|
தற்செயலாய் .
|
|
குருட்டெழுத்து
|
மங்கலான எழுத்து .
|
|
குருடன்
|
பார்வையில்லாதவன் ; சுக்கிரன் ; திருதராட்டிரன் .
|
|
குருடி
|
பார்வையில்லாதவள் .
|
|
குருடு
|
பார்வையின்மை ; ஒளியின்மை ; ஆடை முதலியவற்றின் முருட்டுப்பக்கம் ; மூடன் ; காதின் வெளிப்புறத்திலுள்ள செவிள் .
|
|
குருத்தடைத்தல்
|
நெல் முதலிய பயிர்கள் குருத்து விடாதிருத்தல் ; கதிர் பொதிநிரம்புதல் .
|
|
குருத்தல்
|
தோன்றுதல் ; வேர்க்குரு உண்டாதல் ; சினங்கொள்ளுதல் .
|
|
குரவரம்
|
குறிஞ்சாக்கொடி .
|
|
குரவன்
|
அரசன் ; ஆசிரியன் அல்லது குரு , தாய் , தந்தை , தமையன் என்னும் ஐங்குரவருள் ஒருவர் ; மந்திரி ; பிரமன் .
|
|
குரவு
|
குராமரம் ; குருத்தன்மை .
|
|
குரவை
|
மகளிர் கைகோத்தாடுங் கூத்து ; மகிழ்ச்சி ஒலி ; கடல் .
|
|
குரவைக்கூத்து
|
எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடும் ஒருவகைக் கூத்து .
|
|
குரவைப்பறை
|
ஒருவகைக் குறிஞ்சிப்பறை .
|
|
குரவையிடுதல்
|
நாவால் குழறி மகிழ்ச்சி ஒலி செய்தல் ; குலவையிடுதல் .
|
|
குரா
|
குராமரம் .
|
|
குராசானி
|
ஒருவகைப் பூண்டு .
|
|
குரால்
|
புகர்நிறம் ; ஈனாப் பருவத்து ஆடு ; பசு ; கோட்டான் .
|
|
குராற்பசு
|
கபிலைநிறப் பசு .
|
|
குரிகிற்றாளி
|
ஒரு கிழங்குவகை .
|
|
குரிசில்
|
பெருமையிற் சிறந்தோன் ; உபகாரி ; தலைவன் .
|
|
குரீஇ
|
குருவி ; பறவை .
|
|
குரீஇப்பூளை
|
சிறுபூளை .
|
|
குரு
|
அம்மை முதலிய கொப்புளங் காணும் நோய் ; புண் ; வேர்க்குரு ; புளகம் ; கொட்டை ; ஒளி ; முத்துக்குற்றங்களுள் ஒன்று ; துரிசு ; உலோகங்களைப் பேதிக்குஞ் சிந்தூரம் முதலியவை ; இரசம் ; ஞானாசாரியன் ; ஆசிரியன் ; புரோகிதன் ; தகப்பன் ; அரசன் ; வியாழன் ; பூசநாள் ; பாரம் ; பருமன் ; பெருமை ; நெடில் ; நெடிலும் நெடிலொற்றும் குறிலொற்றுமாகிய அசைகள் ; இரன்டு மாத்திரையின் அளவு ; எட்டு அட்சர காலங்கொண்ட தாள அங்கவகை ; குருவருடம் ; ஒரு தேசம் ; குருகுலத் தலைவன் .
|
|
குருக்கண்
|
முலை .
|
|
குருக்கத்தி
|
மாதவிக்கொடி .
|