| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
காந்திப்போதல்
|
சோறு முதலியன கரிந்து போதல் .
|
|
காந்திமதி
|
ஒளியுள்ளவள் ; குபேரன் பட்டணம் .
|
|
காந்திமான்
|
ஒளியுள்ளவன் .
|
|
காந்திருவம்
|
காந்தருவம் ; கந்தருவலோகம் .
|
|
காந்துகம்
|
வெண்காந்தள் .
|
|
காந்துகன்
|
பந்தடிப்போன் ; பலகாரம் விற்பவன் .
|
|
காந்துதல்
|
எரிதல் ; வெப்பங்கொள்ளுதல் ; கருகிப்போதல் ; மனம் வேகுதல் ; ஒளிவீசுதல் ; பொறாமைப்படுதல் ; வீணாய் எரிதல் ; சினத்தல் ; சுடுதல் ; பல்லால் சுரண்டுதல் .
|
|
காந்தை
|
பெண் ; மனைவி ; தலைவி .
|
|
காந்தைக்கண்
|
இரண்டு இமைகளையும் விரித்து விழிக்கும் அபிநயக் கண் .
|
|
காப்பரிசி
|
பிறந்த குழந்தைகளுக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகு கலந்த அரிசி ; திருமணம் முதலிய காலங்களில் காப்புநாண் கட்டும்போது கையிலிடும் அரிசி ; கிறித்து பிறந்த பதின் மூன்றாம் நாள் திருவிழாவில் கோயிலில் வழங்கும் பாகுகலந்த அரிசி .
|
|
காப்பவிழ்த்தல்
|
திருமணம் முதலிய சடங்குகளில் காப்புக் களைதல் .
|
|
காப்பாடுதல்
|
மறைத்துக் காத்தல் .
|
|
காப்பாள்
|
காவல் வீரன் .
|
|
காப்பாற்றுதல்
|
பாதுகாத்தல் , ஆதரவளித்தல் .
|
|
காப்பி
|
ஒருவகைச் செடி ; குடிநீர் ; படி , நகல் .
|
|
காப்பிடுதல்
|
நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச் செய்தல் ; காப்புநாண் கட்டுதல் ; பிறந்த குழந்தைக்குக் காப்புப்பூட்டுதல் ; ஆவணங்களில் அரசு முத்திரை இடுதல் .
|
|
காப்பியக் கலித்துறை
|
நெடிலடி நான்காய் வரும் கலித்துறை .
|
|
காப்பியக்குடி
|
பழைய அந்தணர்குடி ; சீகாழிக்கு அயலிலுள்ள ஓர் ஊர் .
|
|
காப்பியன்
|
சுக்கிரன் .
|
|
காப்பிரிமிளகாய்
|
குடைமிளகாய் .
|
|
காப்பில்
|
மீன்பிடிக்க உதவும் கூரிய ஓர் ஆயுதம் ; தோணியின் உறுப்புகளுள் ஒன்று .
|
|
காப்பீடு
|
பாதுகாத்தல் ; காக்கப்படுவது .
|
|
காப்பு
|
பாதுகாவல் ; காவலாயுள்ளது ; காப்பு நாண் ; தெய்வ வணக்கம் ; காப்புப் பருவம் ; திருநீறு ; கைகால்களில் அணியும் வளை ; வேலி ; மதில் ; கதவு ; அரசமுத்திரை ; ஏட்டுக்கயிறு ; காவலான இடம் ; ஊர் ; திக்குப்பாலகர் ; சிறை ; மிதியடி ; அரசன் நுகர்பொருள் .
|
|
காந்தம்
|
காந்தக்கல் ; ஒருவகைப் பளிங்கு ; அழகு ; மின்சாரம் ; கந்தபுராணம் .
|
|
காந்தம்பிடித்தல்
|
காந்தம் இரும்பை இழுத்தல் .
|
|
காந்தம்வலித்தல்
|
காந்தம் இரும்பை இழுத்தல் .
|
|
காந்தமண்
|
காந்தச் சத்துள்ள செம்மண் .
|
|
காந்தமணி
|
காந்தக்கல் .
|
|
காந்தலை
|
பூமியின் வடகோடியில் காந்த மயமாகவுள்ளதாகக் கருதப்படும் மலை
|
|
காந்தர்ப்பம்
|
காந்தருவம் ; கந்தருவர் அம்பு .
|
|
காந்தருப்பம்
|
காந்தருவம் ; கந்தருவர் அம்பு .
|
|
காந்தர்ப்பர்
|
கந்தருவர் .
|
|
காந்தருவம்
|
காதலர் தம்முள் மனமொத்துக்கூடுங் கூட்டம் ; இசைப்பாட்டு ; காந்தருவவேதம் .
|
|
காந்தருவமணம்
|
தலைவியும் தலைவனும் தாமாகவே கூடும் கூட்டம் .
|
|
காந்தருவர்
|
கந்தருவர் ; பாடுவோர் .
|
|
காந்தருவவாதம்
|
அறுபத்து நான்கு கலையுள் ஒன்றான இசைக்கலை .
|
|
காந்தருவவிவாகம்
|
காண்க : காந்தருவமணம் .
|
|
காந்தருவவேதம்
|
இசைக்கலை .
|
|
காந்தருவி
|
பாடுபவள் .
|
|
காந்தல்
|
காந்துகை ; உமி , ஓலை முதலியவற்றின் எரிந்த கருகல் ; காய்ந்த பயிர் ; தீய்ந்து போதல் ; சினம் .
|
|
காந்தவண்டி
|
இருப்புப்பாதையில் செல்லும் மின்வண்டி .
|
|
காந்தவர்
|
காண்க : காந்தருவர் .
|
|
காந்தள்
|
கார்த்திகைப் பூ ; காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைக் கூறும் புறத்துறை ; முருகக் கடவுளுக்குரிய காந்தளைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை ; சவர்க்காரம் .
|
|
காந்தளிகம்
|
சின்னிமரம் .
|
|
காந்தற்சோறு
|
கரிந்த சோறு .
|
|
காந்தன்
|
அரசன் ; எப்பொருட்கும் இறைவன் ; கணவன் ; தலைவன் ; சந்திரன் ; மன்மதன் .
|
|
காந்தாரக்கிராமம்
|
தேவலோகத்து வழங்குவதாகக் கொள்ளப்படும் இசைச் சுரவகை .
|
|
காந்தாரபஞ்சமம்
|
பாலையாழ்த் திறங்களுள் ஒன்று ,
|
|
காந்தாரம்
|
வடமேற்கு இந்திய நாடுகளுள் ஒன்று , ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று ; ஏழிசையுள் ஒன்று ; பாலையாழ்த்திறம் ; காடு .
|
|
காந்தாரி
|
துரியோதனனின் தாய் ; கொடியவள் ; தசநாடியுள் ஒன்று ; சிவனார்வேம்பு ; சத்தி சாரம் ; ஒரு பண்வகை .
|
|
காந்தாரி மைந்தன்
|
துரியோதனன் .
|
|
காந்தாளம்
|
எரிச்சல் ; சினம் .
|
|
காந்தி
|
அழகு ; ஒளி ; கதிர் ; சிலாசத்து ; வைடூரியம் ; அணிவகை .
|
|
காந்திகொள்ளுதல்
|
உடம்பு சூடுகொள்ளுதல் .
|