| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
ஐவகைமன்றம்
|
சிவன் நடமிடும் ஐந்து சபைகள் : திருவாலங்காட்டு மணியம்பலம் , தில்லைப் பொன்னம்பலம் , மதுரை வெள்ளியம்பலம் , திருநெல்வேலித் தாமிர அம்பலம் , குற்றாலம் சித்திர அம்பலம் ; புகாரிலிருந்த வெள்ளிடை மன்றம் , இலஞ்சி மன்றம் , நெடுங்கல் மன்றம் , பூதசதுக்கம் , பாவை மன்றம் .
|
|
ஐவகைமெய்க்குற்றம்
|
குறுகுறுத்தல் , கொட்டாவி விடுதல் , நெட்டை , கூன்கிடை , நட்டுவிழுதல் .
|
|
ஐவகையாகம்
|
ஐந்துவகை வேள்விகள் : கருமயாகம் , தவயாகம் , செபயாகம் , தியானயாகம் , ஞானயாகம் .
|
|
ஐவகைவினா
|
அறியான் வினாவல் , அறிவு ஒப்புப் பார்த்தல் , ஐயமறுத்தல் , அவனறிவுதான்கொளல் , அவனுக்கு உண்மை காட்டல் .
|
|
ஐவகைவேள்வி
|
கடவுள் வேள்வி , பிரம வேள்வி , பூத வேள்வி , மானிட வேள்வி , தென்புலத்தார் வேள்வி .
|
|
ஐயபூமி
|
பருமணல் .
|
|
ஐயம்
|
சந்தேகம் ; அகப்பொருள் துறைகளுள் ஒன்று , ஐயக்காட்சி ; ஐயவணி ; இரப்போர் கலம் ; பிச்சை ; சிலேட்டுமம் ; சிறுபொழுது ; குற்றம் ; மோர் .
|
|
ஐயம்புகுதல்
|
இரத்தல் , பிச்சையெடுத்தல் .
|
|
ஐயமறுத்தல்வினா
|
சந்தேகம் போக்குவதற்காகக் கேட்கப்படும் கேள்வி .
|
|
ஐயர்
|
தந்தையர் ; பார்ப்பார் ; முனிவர் ; உயர்ந்தோர் ; வானோர் ; பெருமையிற் சிறந்தோர் ; பெரியோர் ; வீரசைவர் பட்டப் பெயர் ; வேதியர் பட்டப் பெயர் ; பாதிரிமார் பட்டப் பெயர் .
|
|
ஐயவி
|
கடுகு ; வெண்சிறு கடுகு ; ஒரு நிறை ; துலாமரம் ; கடுக்காய் ; அம்புகளின் கட்டு .
|
|
ஐயவித்துலாம்
|
தலைதிருகு மதிற்பொறி , தலைகளைப் பிடித்துத் திருகும்படி நெருக்கும் ஒரு மதிற்பொறி .
|
|
ஐயவிலக்கு
|
ஓர் அணி , ஐயுற்றதனை விலக்குதல் .
|
|
ஐயவினா
|
காண்க : ஐயமறுத்தல் வினா .
|
|
ஐயவுணர்வு
|
உறுதியில்லாத அறிவு .
|
|
ஐயவுவமை
|
ஓர் அணி , அஃது உவமையையும் பொருளையும் ஐயுற்றுரைப்பது .
|
|
ஐயள்
|
வியத்தற்குரிய அழகுடையவள் .
|
|
ஐயறிவுயிர்
|
ஐம்புலன்களாலும் அறியும் உயிர் .
|
|
ஐயன்
|
தலைவன் , மூத்தோன் ; முனிவன் ; ஆசான் ; உயர்ந்தோன் ; தந்தை ; அரசன் ; கடவுள் ; ஐயனார் ; பார்ப்பான் .
|
|
ஐயன்பாழி
|
சாத்தன்கோயில் .
|
|
ஐயனார்
|
அரியர புதல்வன் ; சாத்தன் ; ஐயப்பன் .
|
|
ஐயா
|
மரியாதை விளிப்பெயர் ; தலைவன் , ஐயன் ; ஓர் இரக்கக் குறிப்புச் சொல் .
|
|
ஐயானனம்
|
சிங்கம் ; சிங்கராசி .
|
|
ஐயிதழ்
|
ஒரு துத்திப் பூண்டு .
|
|
ஐயுணர்வு
|
ஐயவுணர்வு ; ஐம்புலவறிவு ; புலன்கள் வேறுபாட்டால் ஐந்தாகிய உணர்வு .
|
|
ஐயுறவு
|
ஐயப்பாடு , சந்தேகம் .
|
|
ஐயுறுதல்
|
சந்தேகித்தல் .
|
|
ஐயெனல்
|
வியப்புக் குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; வருத்தக் குறிப்பு ; உடன்படற் குறிப்பு ; அதட்டற் குறிப்பு .
|
|
ஐயே
|
ஐயன் என்பதன் விளி ; ஓர் ஒலிக் குறிப்பு .
|
|
ஐயை
|
தலைவி ; காளி ; தவப்பெண் ; குருபத்தினி ; மகள் ; பார்வதி ; துர்க்கை ; இடைச்சி .
|
|
ஐயோ
|
வியப்பிரக்கச் சொல ; துன்பக்குறிப்பு .
|
|
ஐயோன்
|
நுண்ணியன் .
|
|
ஐராவணம்
|
இந்திரன் யானை , கீழ்த்திசை யானை ; சிவன் யானை ; பட்டத்து யானை .
|
|
ஐராவணன்
|
இந்திரன் .
|
|
ஐராவதம்
|
இந்திரனுடைய யானை , கீழ்த்திசை யானை .
|
|
ஐவகைச்சயனம்
|
ஐந்துவகைப் படுக்கைகள் : அன்னத்தூவி , இலவம் பஞ்சு , செம்பஞ்சு , மயில்தூவி , வெண்பஞ்சு ஆகியவற்றால் அமைவது .
|
|
ஐவகைச்சிறுபொழுது
|
மாலை , யாமம் , வைகறை , காலை , நண்பகல் என்பன .
|
|
ஐவகைச்சுற்றம்
|
அரசர்க்குரிய ஐவகைச் சுற்றத்தார் : நண்பர் , போர்வீரர் , சகுனம் சொல்லுவோர் , ஆயுர்வேதர் , பார்ப்பனர் ,
|
|
ஐவகைத்தற்கிழமை
|
தன்னோடு ஒற்றுமையுடைய பொருளின் ஐவகை இயைபு : பண்புத்தற்கிழமை , ஒன்றன்கூட்டத் தற்கிழமை , பலவினீட்டத் தற்கிழமை , ஒன்று திரிந்துபட்டு ஒன்றாய தற்கிழமை .
|
|
ஐவகைத்தாயர்
|
ஐந்துவகைத் தாய்மார் : ஈன்றதாய் , ஊட்டுந்தாய் , முலைத்தாய் , கைந்தாய் , செவிலித்தாய் .
|
|
ஐவகைத்திரவியம்
|
ஐந்திடங்களில் கிட்டும் செல்வங்கள் ; அவை : மலைபடுபொருள் , நாடுபடுபொருள் , காடுபடுபொருள் , நகர்படுபொருள் , கடல்படுபொருள் .
|
|
ஐவகைத்தெய்வமணி
|
சிந்தாமணி , சூளாமணி , சிமந்தகமணி , சூடாமணி , கௌத்துவமணி .
|
|
ஐவகைத்தொழில்
|
எண்ணல் , எழுதல் , இலைகிள்ளல் , மலர்தொடுத்தல் , யாழ்மீட்டல் .
|
|
ஐவகைமயிர்முடி
|
காண்க : ஐம்பால்முடி .
|
|
ஐயநாடி
|
சிலேட்டும நாடி .
|
|
ஐயப்படுதல்
|
சந்தேகப்படுதல் .
|
|
ஐயப்பாடு
|
ஐயம் , சந்தேகம் .
|