| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
ஐந்தை
|
சிறுகடுகு .
|
|
ஐந்தொகை
|
விடுமுதல் , வரவு , செலவு , ஆதாயம் , இருப்பு இவற்றின் விவரமடங்கிய கணக்கு .
|
|
ஐந்தொகைவினா
|
ஒருவகைக் கணக்கு .
|
|
ஐந்தொழில்
|
இறைவனின் ஐந்து தொழில்கள் : படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் .
|
|
ஐந்தொழிலன்
|
ஐந்து தொழில்களையுடைய சிவன் .
|
|
ஐந்நூறு
|
ஐந்து நூறு .
|
|
ஐப்பசி
|
ஏழாம் மாதம் ; அசுவினி நாள் .
|
|
ஐப்பசி முழுக்கு
|
துலாக்காவேரி முழுக்கு .
|
|
ஐம்படை
|
பஞ்சாயுதம் , திருமால் தரிக்கும் ஐந்தாயுதங்கள் : சங்கு , சக்கரம் , வில் , வாள் , தண்டு , இவை முறையே பாஞ்ச சன்னியம் , சுதரிசனம் , சார்ங்கம் , நாந்தகம் , கௌமோதகி எனப் பெயர் பெறும் ; காண்க : ஐம்படைத்தாலி .
|
|
ஐம்படைத்தாலி
|
கழுத்திலே பிள்ளைகள் அணியும் திருமாலின் ஐம்படை உருவமைந்த அணி .
|
|
ஐம்படைப்பருவம்
|
ஐம்படைத்தாலி அணிவதற்குரிய குழந்தைப்பருவம் .
|
|
ஐம்பது
|
ஓரெண் , ஐந்து பத்துக்கொண்டது .
|
|
ஐம்பால்
|
இலக்கண நூல் கூறும் ஐந்து பகுப்பு : ஆண்பால் , பெண்பால் , பலர்பால் , ஒன்றன்பால் , பலவின்பால் ; பெண் கூந்தல் , காண்க : ஐங்கூந்தல் .
|
|
ஐம்பால்முடி
|
காண்க : ஐங்கூந்தல் .
|
|
ஐம்புலத்தவர்
|
தென்புலத்தாராம் பிதிரர் , தெய்வம் , விருந்து , சுற்றத்தவர் , தான் .
|
|
ஐம்புலம்
|
ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் : சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் .
|
|
ஐம்புலன்
|
ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் : சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் .
|
|
ஐம்புலம்வென்றோன்
|
ஐம்புல உணர்ச்சிகட்கு ஆட்படாத முனிவன் ; அருகன் .
|
|
ஐம்பூதம்
|
ஐந்து மூலப்பொள்கள் : நிலம் , நீர் , தீ , வளி , வான் .
|
|
ஐம்பெருங்காப்பியம்
|
சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவகசிந்தாமணி , வளையாபதி , குண்டலகேசி .
|
|
ஐம்பெருங்குழு
|
அரசர்க்குரிய ஐந்து கூட்டத்தார் ; அமைச்சர் , புரோகிதர் , படைத்தலைவர் , தூதுவர் , சாரணர் .
|
|
ஐம்பெரும்பாதகம்
|
பஞ்சமாபாதகம் : பொய் , கொலை , களவு , கள்ளூண் , குருநிந்தை .
|
|
ஐம்பெரும்பூதம்
|
காண்க : ஐம்பூதம் .
|
|
ஐம்பெருவேள்வி
|
காண்க : ஐவகை கேள்வி .
|
|
ஐம்பொறி
|
ஐந்துவகை முக்கிய இந்திரியங்கள் ; மெய் , வாய் , கண் , மூக்கு , செவி .
|
|
ஐம்பொன்
|
ஐந்துவகை முக்கிய மாழைகள் : பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , ஈயம் .
|
|
ஐம்மீன்
|
அத்த நாள் ; உரோகிணி .
|
|
ஐம்முகம்
|
சிவனது ஐந்து முகங்கள் : ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் .
|
|
ஐம்முகன்
|
ஐந்து முகங்களையுடைய சிவன் .
|
|
ஐம்முகி
|
ஆமணக்கு .
|
|
ஐம்மை
|
தகட்டு வடிவம் ; நொய்ம்மை ; நெருக்கம் .
|
|
ஐமவதி
|
பார்வதி .
|
|
ஐமிச்சம்
|
ஐயம் கலந்த அச்சம் .
|
|
ஐய
|
வியக்கத்தக்க ; நொய்ய ; அழகிய ; நுண்ணிய ; இரக்கக் குறிப்பு ; வியப்புக் குறிப்பு ; விளிச்சொல் .
|
|
ஐயக்கடிஞை
|
பிச்சை வாங்கும் கலம் , பிச்சைப் பாத்திரம் .
|
|
ஐயக்கணச்சூலை
|
சூலைநோய்வகை .
|
|
ஐயக்காட்சி
|
தோன்றின ஒரு பொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை .
|
|
ஐயகோ
|
ஐயோ ; இரக்கக் குறிப்பு ; அவலக் குறிப்பு .
|
|
ஐயங்கவீனம்
|
வெண்ணெய் .
|
|
ஐயங்கன்
|
பேய் , ஒரு பெண்பேய் .
|
|
ஐயங்காய்ச்சி
|
பேய் , ஒரு பெண்பேய் .
|
|
ஐயங்கார்
|
வைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர் .
|
|
ஐயஞ்சு
|
நிலப்பனை , நிலப்பனங்கிழங்கு : இருபத்தைந்து .
|
|
ஐந்திரி
|
கிழக்கு .
|
|
ஐந்து
|
மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறிகள் ; ஐந்தென்னும் எண் ; பஞ்சாங்கம் .
|
|
ஐந்துகில்போர்ப்போர்
|
ஐந்து துணிகொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர் .
|
|
ஐந்துண்டி
|
ஐந்து வகை உணவு ; கடித்தல் , நக்கல் ,பருகல் , மெல்லல் , விழுங்கல் .
|
|
ஐந்துப்பு
|
பஞ்ச லவணம் ; இந்துப்பு ; கல்லுப்பு , கறியுப்பு ; வளையலுப்பு ; வெடியுப்பு .
|
|
ஐந்துபா
|
ஐந்து வகையான செய்யுள் ; வெண்பா , ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா , மருட்பா .
|
|
ஐந்துமுகத்தோன்
|
ஐந்து முகங்களுடைய சிவன் .
|
|
ஐந்துருவாணி
|
தேரகத்துச் செறிகதிர் , தேரின் அச்சாணி .
|
|
ஐந்துவிரை
|
ஐவகை மணப்பொருள்கள் ; கோட்டம் துருக்கம் , தகரம் , அகில் , சந்தனம் .
|
|
ஐந்துறுப்படக்கி
|
நான்கு கால்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளும் இயல்புள்ள ஆமை .
|
|
ஐந்தெழுத்து
|
பஞ்சாக்கர மந்திரம் , 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் ; தமிழின் சிறப்பெழுத்துகளான எ , ஒ ழ , ற , ன என்னும் ஐந்தெழுத்துகள் .
|