| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
எழுமுனிவர்
|
இருடிகள் எழுவர் ; அகத்தியன் , புலத்தியன் , அங்கிரசு , கௌதமன் , வசிட்டன் , காசிபன் , மார்க்கண்டன் , எனப் பிங்கல நிகண்டு கூறும் ; வடமொழி நூல்களுள் அத்திரி , பிருகு , குச்சன் , வசிட்டன் , கௌதமன் , காசிபன் , அங்கிரசு என்றும் மரீசி , அத்திரி , அங்கிரசு , புலத்தியன் , புலகன் , சிரது , வசிட்டன் என்றும் வெவ்வேறாக உரைப்பர் .
|
|
எழுமை
|
உயர்ச்சி ; ஏழ்வகை ; ஏழுவகைப் பிறப்பு ; ஏழுமுறை பிறக்கும் பிறப்பு .
|
|
எழுவகை அளவை
|
நிறுத்தளத்தல் ,பெய்தளத்தல் , சார்த்தியளத்தல் , நீட்டியளத்தல் , தெறித்தளத்தல் , தேங்க முகந்தளத்தல் , எண்ணியளத்தல் என்பன .
|
|
எழுவகைத் தாது
|
உடம்பில் உள்ள எழுவகைப் பொருள்கள் ; இரதம் , குருதி , எலும்பு , தோல் , இறைச்சி , மூளை , சுக்கிலம் .
|
|
எழுவகை நதி
|
ஏழு புண்ணிய ஆறுகள் ; கங்கை , குமரி , யமுனை , நருமதை , காவிரி , சரசுவதி , கோதாவரி .
|
|
எழுவகைப் பிறப்பு
|
காண்க : எழுபிறப்பு .
|
|
எழுவகைப் பெண்பருவம்
|
பெண்களின் வளர்சசியில் உள்ள ஏழு நிலைகள் ; பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அரிவை , தெரிவை , பேரிளம்பெண் . இவற்றின் அகவை முறையை 7 ,11 ,13 ,19 ,25 ,31 ,40 ஆகும் .
|
|
எழுவகை மேகம்
|
சம்வர்த்தம் , ஆவர்த்தம் , துரோணம் , புட்கலாவர்த்தம் , காளமுகி , சங்காரித்தம் , நீலவருணம் என்பன . இவை பொழிவன முறையே மணி , நீர் , பொன் , பூ , மண் , கல் , தீ .
|
|
எழுவரைக் கூடி
|
ஒருவகைப் பாடாணம் , சவ்வீரம் என்னும் நஞ்சு .
|
|
எழுவாய்
|
தொடக்கம் , உற்பத்தி ; முதல் ; முதல் வேற்றுமை ; கருத்தா .
|
|
எழுவாய் வேற்றுமை
|
முதலாம் வேற்றுமை , பெயர் வேற்றுமை , பெயர் தோன்றிய துணையால் உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனொடு தொகாது நிற்கும் நிலைமை .
|
|
எழுவாயெழுஞ்சனி
|
மகநாள் .
|
|
எழுவான்
|
கிழக்குத் திசை .
|
|
எழுவுதல்
|
எழுப்புதல் , எழச்செய்தல் ; ஓசையுண்டாக்குதல் .
|
|
எள்
|
ஒருவகைச் செடி , ஒரு தவசம் ; ஒரு சிறிய அளவு ; நிந்தை .
|
|
எள்
|
(வி) எள்என் ஏவல் , நிந்தி , இகழ் .
|
|
எள்குதல்
|
இகழ்தல் , அஞ்சுதல் ; ஏய்த்தல் ; கூசுதல் ; வருந்துதல் .
|
|
எள்ள
|
ஓர் உவமவுருபு .
|
|
எள்ளல்
|
இகழ்தல் ; நிந்தித்தல் ; இழிவாகப் பேசல் ; தள்ளல் ; சிரித்தல் .
|
|
எள்ளளவும்
|
சிறிதளவும் .
|
|
எள்ளற்பாடு
|
இகழ்ச்சி , நிந்தை , நகைப்பு .
|
|
எள்ளிடை
|
எள்ளளவு .
|
|
எள்ளு
|
எள் .
|
|
எள்ளுக்கடை
|
எள்ளுத்தாள் .
|
|
எள்ளுச்செவி
|
ஒரு பூண்டுவகை .
|
|
எள்ளுண்டை
|
எள்ளுருண்டை , எள்ளும் வெல்லமும் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி .
|
|
எள்ளுதல்
|
இகழ்தல் , இழிவாகப் பேசுதல் ; தள்ளுதல் ; ஒப்பாதல் .
|
|
எள்ளுநர்
|
இகழ்பவர் .
|
|
எள்ளுப்பிண்ணாக்கு
|
எண்ணெய் ஆட்டி எடுத்த எள்ளின் சக்கை .
|
|
எள்ளுருண்டை
|
காண்க : எள்ளுண்டை .
|
|
எள்ளுரை
|
இகழ்ச்சியுரை .
|
|
எள்ளோரை
|
எள்ளுச்சோறு , எள்ளோதனம் .
|
|
எளிஞர்
|
எளியவர் ; செல்வம் முதலியன குறைந்தவர் ; வறிஞர் ; நல்லூழில்லாதவர் .
|
|
எளித்தல்
|
தாழ்த்திக் கூறுதல் .
|
|
எழுபவம்
|
உயர்பிறப்பு ; எழுவகைப் பிறவி .
|
|
எழுபிறப்பு
|
எழுவகைப் பிறப்பு ; தேவர் , மனிதர் , விலங்கு , பறப்பன , ஊர்வன , நீர்வாழ்வன , தாவரம் ; மேல்வரும் பிறப்பு .
|
|
எழுபோது
|
விடியற்காலம் ; உதயகாலம் .
|
|
எழும்பல்
|
நில விவரம்பற்றிய கைக்குறிப்புப் புத்தகம் .
|
|
எழும்புதல்
|
உயர்தல் ; உறக்கம்விட்டெழுதல் .
|
|
எழுமதம்
|
நூலாசிரியருக்குரிய எழுவகைக் கொள்கைகள் ; அவை , உடன்படல் , மறுத்தல் , பிறர்தம் மதம் மேற்கொண்டு களைதல் , தான் ஒன்றனை நாட்டி அதனை நிலைநிறுத்தல் , இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு , பிறர்நூற் குற்றங் காட்டல் , பிறர் மதத்தைக் கொள்ளல் என்பன , யானைமதம் , கன்னம் இரண்டு , கண் இரண்டு , கைத்துளை இரண்டு , குறி ஒன்று ஆகிய ஏழிடத்திலிருந்து தோன்றும் மதநீர் .
|
|
எழுமலை
|
கதிரவன் தோன்றும் மலை , உதயகிரி ; ஏழு பெருமலைகள் ; கயிலை , இமயம் , மந்தரம் , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலகிரி .
|
|
எழுமான்
|
எழுமான் பூண்டு .
|
|
எழுமான்புலி
|
எழுமான் பூண்டு .
|
|
எழுமீன்
|
ஏழு நட்சத்திரங்கள் , சப்தரிஷி மண்டலம் .
|
|
எழுமுகனை
|
தொடக்கம் .
|
|
எழுமுடி
|
வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன் மாலை .
|
|
எழுமுரசு
|
எழுச்சி முரசு , அரசன் பயணத்தை அறிவிக்கும் முரசு .
|