| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
எச்சிற்கல்லை
|
உண்ட தையல் இலைக்கலம் , எச்சிலிலை .
|
|
எச்சிற்கலப்பு
|
கணவன் எச்சிலை மனைவி உண்ணும் சடங்கு ; மணமக்கள் ஒருவர்பின் ஒருவர் ஒரு கலத்தில் பாலுண்ணுகை
|
|
எச்சிற்கிதம் பாடுதல்
|
இழிந்த பொருளுக்காக ஒருவரைப் புகழ்ந்து கூறுதல் ; தகாத நோக்கத்தோடு குற்றத்திற்கு இணங்குதல் .
|
|
எச்சிற்படுத்தல்
|
எச்சிலாக்குதல் ; புண்படுத்துதல் ; கன்னிமை கெடுத்தல் .
|
|
எச்சிற்படுதல்
|
உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடுதல் .
|
|
எச்சிற் புரட்டுதல்
|
எச்சிலிடுதல் .
|
|
எச்சிற்பேய்
|
ஒருவகைப் பேய் ; கொடுமையான சிறுதெய்வம் ; பெருந்தீனிக்காரன் .
|
|
எச்சிற்றழுதணை
|
எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய் .
|
|
எச்சிற்றழும்பு
|
எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய் .
|
|
எச்சிற்றேமல்
|
எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய் .
|
|
எச்சு
|
உயர்வு ; மிகுதி ; உயர்ந்த ஓசை ; குறைவு ; இசையில் நீண்ட ஓசை ; ஓரு வாத்தியக் கருவி .
|
|
எசகுபிசகு
|
முறைகேடு , தவறான வழி .
|
|
எசப்புச் செலவு
|
தரகு கொடுத்தற்குப் பிடிக்குஞ் செலவு .
|
|
எசம்
|
நரம்பு , நாடி .
|
|
எசமாட்டி
|
தலைவி , குடும்பத் தலைவி .
|
|
எசமான்
|
தலைவன் ; கணவன் ; வேள்வித் தலைவன் .
|
|
எசமானன்
|
தலைவன் ; கணவன் ; வேள்வித் தலைவன் .
|
|
எசமானி
|
காண்க : எசமாட்டி .
|
|
எசமானிக்கை
|
தலைமை .
|
|
எசர்
|
உலைநீர் .
|
|
எசர்கட்டுதல்
|
உலைநீர் வைத்தல் .
|
|
எசு
|
எசுர் , நான்மறைகளுள் ஒன்று , இரண்டாம் மறை .
|
|
எசுர்வேதம்
|
எசுர் , நான்மறைகளுள் ஒன்று , இரண்டாம் மறை .
|
|
எஞ்சணி
|
சொல்லலங்கார வகையுள் ஒன்று , சொல் வெளிப்படாமல் எஞ்சி நிற்பது ; எஞ்சி நிற்கும் சொல் .
|
|
எஞ்சலார்
|
புதியவர் .
|
|
எஞ்சலித்தல்
|
குறைவு செய்தல் .
|
|
எஞ்சாமை
|
குறையாமை , ஒழியாமை , முழுமை .
|
|
எஞ்சிநிற்றல்
|
குறைந்த நிற்றல் , தொக்கு நிற்றல் , ஒழிந்து நிற்றல் .
|
|
எஞ்சியசொல்லி னெய்தக் கூறல்
|
நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று , சொன்னவற்றால் சொல்லாதவற்றையும் உய்த்தறியுமாறு கூறுகை .
|
|
எஞ்சுதல்
|
குறைதல் ; கெடுதல் ; இறத்தல் , சாதல் , ஒழிதல் ; மிஞ்சுதல் ; தொக்கு நிற்றல் ; கடத்தல் ; செய்யாதொழிதல் ; தனக்குப்பின் உரிமையாக வைத்தல் .
|
|
எஞ்ஞம்
|
எக்கியம் , ஓமம் , வேள்வி .
|
|
எஞ்ஞான்றும்
|
எகக்காலமும் , எப்பொழுதும் , எப்போதும் .
|
|
எட்கசி
|
எள்ளால் செய்யப்பட்ட உணவு , எள்ளுருண்டை .
|
|
எட்கசிவு
|
எள்ளால் செய்யப்பட்ட உணவு , எள்ளுருண்டை .
|
|
எட்கிடை
|
எள்ளுக்கிடத்தற்கு வேண்டிய இடம் , எள்ளளவு .
|
|
எட்கை
|
தென்னை .
|
|
எட்கோது
|
எள்ளுக்காய்த் தோல் .
|
|
எட்சத்து
|
நல்லெண்ணெய் .
|
|
எட்சிணி
|
காண்க : யட்சினி .
|
|
எட்சி
|
எழுச்சி , உதயம் .
|
|
எச்சமிடுதல்
|
பறவைகள் மலங்கழித்தல் .
|
|
எச்சரிக்கை
|
சாக்கிரதை ; விழிப்பாய் இருக்குமாறு குறிப்பிடுதல் ; முன்னறிவிப்பு ; அமைதியாயிருக்கச் சொல்லுகை ; எச்சரிக்கை கூறுகை ; எச்சரிக்கைப் பாட்டு ;
|
|
எச்சரித்தல்
|
முன்னறிவித்தல் ; விழிக்கப் பண்ணுதல் ; தூண்டுதல் ; கண்டித்தல் ; புத்தி சொல்லுதல் .
|
|
எச்சரிப்பு
|
எச்சரித்தல் ; முன்னறிவிப்பு .
|
|
எச்சவனுமானம்
|
காரியங் கொண்டு காரணமறிதல் , ஆற்றில் நீர்வரக் கண்டவன் மலைக் கண் மழையுண்டென அறிதல் போல்வது .
|
|
எச்சவாய்
|
குதம் , எருவாய் , மலவாய் .
|
|
எச்சவும்மை
|
மறைந்து நிற்கும் தொடர்புடைய பொருளை விளக்கும் உம்மை , 'சாத்தனும் வந்தான்' என்றாற்போல வரும் உரை .
|
|
எச்சன்
|
வேள்வி செய்வோன் ; வேள்வித் தலைவன் ; அக்கினி , தீக்கடவுள் ; யாக தேவதை ; வேள்வியின் அதிதேவதையான திருமால் .
|
|
எச்சில்
|
உமிழ்நீர் ; உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடும் பொருள் ; உண்டு கழிந்த மிச்சில் ; மிச்சம் ; மலசலம் முதலியன ; வேள்வித் தீயிலிடும் அரிசி மாவாலாகிய ஓமப் பொருள் ; உச்சிட்டம்
|
|
எச்சில் மாற்றுதல்
|
எச்சிலிலையை எடுத்தெறிந்துவிட்டு இடத்தைத் துப்பரவு செய்தல் .
|
|
எச்சிலன்
|
கடும்பற்றுள்ளன் , பிசுனன்
|
|
எச்சிலாக்குதல்
|
ஒருபொருளின் மேல் வாயெச்சில் படுதல் ; ஒன்றன் தூய்மையைக் கெடுத்தல் .
|
|
எச்சிலார்
|
எச்சிலுடையவர் ; இழிந்தோர் .
|
|
எச்சிலிடுதல்
|
உண்ட இடத்தைச் சாணமிட்டு மெழுகுதல் .
|
|
எச்சிலிலை
|
உணவுண்டு எச்சிலான இலை .
|