ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்

3. மூன்றாவது பொருளதிகாரம்
| 143. |
மெய்ப்பொருள் பகாப்பொருள் வேத முதற்பொரு ளப்பொரு ளகத்தணிந் தறைகுவல் பொருளே. | 144. |
பொருணூ லென்பது புகல்பொரு ணுதலிய வுரிப்பயன் படுத்துமா றுணர்த்து நூலே. | 145. |
வழக்குத் தேற்றந் தோற்ற மெனவிம் மூவகைப் படுமா மொழியும் பொருளே. | 146. |
நீதி வழங்கலு நிலைபெறத் துணிதலுந் தீதென நன்றெனத் தெளிதலு மிவைவழக் காதி முப்பொருட் காகும் பயனே. |
3.1 முதலாமோத்து - பதிகம்
| 147. |
பதிகங் காரணம் பாவு தொகைதுணி வைந்து மெலாப்பொருட் காம்பொது வழியே. | 148. |
தெய்வ வணக்கமுஞ் செய்பொருட் டொகையுந் செப்புவ தாகுஞ் சிறப்புப் பாயிரம். | 149. |
பாயிரத் துப்பொருள் பகரிற் கேட்பார்க் கிணக்க மாசை யியையவும் பொருட்டெளி வுரிமை தோன்றவு முரைப்பது நெறியே. |
3.2 இரண்டாவது - காரணம்
| 150. |
காரண வழியெனக் காட்டுரைப் பொருட்குரி யகத்திணை புறத்திணை யாமிரு வகைத்தே. | 151. |
அகத்திணை யியல்பே யறைபடும் வகையே பொதுச்சிறப் புவமை புறநிலை யெதிர்நிலை கருவி காரியங் காரக முன்னவை பின்னவை யெனவாம் பிரிவீ ராறே. | 152. |
அவற்றுள், இயல்புரைத் தொப்ப வியம்புத லியல்பே, | 153. |
தொகைவிரித் துரைத்தல் சொற்பொருள் வகையே. | 154. |
பொதுவெனப் பலவை யடக்கு மொன்றே சிறப்பென வொன்றி னடங்கும் பலவே. | 155. |
உவமை யெனப்பிறி தொப்ப வுரைத்தலே. | 156. |
புறநிலை யொப்பிழி வாக்கமென மூன்றே. | 157. |
குறித்தவை காட்ட மறுத்தவை காட்டி யெதிரில் விளக்க லெதிர்நிலை யென்ப. | 158. |
காரண நான்குங் காரிய நான்கும் விரித்துத் தன்பொருள் விளக்க லுரித்தே. | 159. |
காரக மென்ப கருத்தா கருமங் கருவி கருத்திடங் காலந் திறனேழே. | 160. |
முன்னவை பின்னவை முன்பின் னடநதன பன்னித் தன்பொருள் பயன்படப் பகர்தலே. | 161. |
புறத்திணை யொழுக்கநூல் புறக்கரி மூன்றே. |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

