ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்

1.2 இரண்டாவதெழுத்தின் வகுப்பு
| 4. |
முதல்சார்புயிரே மூவினமெய்யே முதற்கண்ணெழுத்தே மொழியீற்றெழுத்தே யுயிர்மெய்குறி னெடிலோடுமாய்த மாறுகுறுக்க மளபெடையிரண்டு மாத்திரைப்புணர்பென வகைப்படுமெழுத்தே. | 5. |
முதலெழுத்துயி ரீராறுடன்மூவாறே சார்பெழுத் துயிர்மெய் தனியாய்தத்தோ டஃகிய இ, உ, ஐ, ஔ மவ்வாய்த முயிரளபொற்றள பொருபஃதென்ப. | 6. |
எ, ஒவ்வும் றனழவ்வுமென்றைம்முதலு முயிர்மெய்யுயிரள பொழியெண்சார்பு மந்தமிழ்க்குரிய வாரியமும்பிறவே. | 7. |
இடுகுறிகாரண மிவைபொதுச் சிறப்பென வீரிரண்டாகு மெழுத்தின்பெயரே. | 8. |
அம்முதலீராறுயிர் கம்முதன்மூவாறுடல் குறில் அ, இ, உ, எ, ஒவ்வைந்தேநெடில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ வேழே. | 9. |
வலி க ச ட த ப ற மெலி ங ஞ ண ந ம ன இடை ய ர ல வ ழ ள வெனமூவினமே. | 10. |
உயிர் க ச த ப ஞ ந ம வ ய முதற்கே எ, ஒ, ஔ வு மெல்லினஙவ்வு நீத்துயிர் ண ம ன விடையினமீறே. | 11. |
உயிரேமெய்யணைந் துயிர்மெய்யாகு மவையிரு நூற்றொருபத்தா றென்ப. | 12. |
நீட்டல் சுழித்தல் குறின்மெய்க் கிருபுள்ளி. | 13. |
ஆய்தங் குறில் வலிக்காகு நடுவே யஃ தீற்று ல ளத்திருந்துளி யஃகும். | 14. |
யம்முதலிய்யா மிருகுறளுக்கெடி லஃகுமற்றா மசைச்சொன்மியாவே. | 15. |
தனிக்குறிலல்லவற் றிருதிவன்மை யூர்ந்துளிக்குறுகு முகரமென்ப தொடருயிருக்குறடுடைத் துணும்யவ்வரின் உ, இ யாஞ்சில முற்றுகரமு மற்றே. | 16. |
ஐத்தனித்தள பெடுத்தன்றி மூவிடத்து மௌவு முதலிடத்தஃகுமென்ப | 17. |
மகரம் ல ளக்கீழ் வம்மேற் குறுகும். | 18. |
உயிர்நெடி லினக்குறி லுற்றள பெடுக்கு மொற்றள பெழும்வே றுற்றுக்குறிற்கீ ழியைந்து ர ழ வொழியிடை மெலியாய்தம். | 19. |
கண்ணிமை கைந்நொடி காட்டுமாத்திரையி லஃகிய்மவ்வு மாய்தமுங்காலே உ இக்குறளொற் றாய்தமரையே குறிலே ஐ ஔக்குற ளொற்றள பொன்றே நெடிலிரண் டுயிரளபொரு மூன்றென்ப. | 20. |
முதலீற்றுயிரிரு மொழியே சேர்புளி இ ஈ எ ஐயீறியையும் யவ்வே மற்றையுயிர்க்கீழ் வகரம்புணரும். |
இரண்டாவதெழுத்தின் வகுப்பு - முற்றிற்று
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

