சிந்துப்பாவியல்

15.
- முடிகியல் நடையுடை இடமொழித் தெங்கும்
ஈருயிர் ஏற்றல் ஓரசைக் கில்லை.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் முடுகியல், நடையுடைய இடங்கள் உண்டு. அவ்விடங்களில் உள்ள சீர்களில் அமைந்திருக்கும் அசைகள் இரண்டு உயிர்களை ஏற்று வருதல் உண்டு.
காட்டு :
| கண் | ணா | . | யி | ரம் | ப | டைத் த | |
| விண் | ணூ | . | ரி | டந் | த | ரித் | த |
| கன | வயி | ரப் | படை | யவன் | மக ளைப் | புணர் | |
| கர்த் | த | னே | . | . | . | தி | ருக் |
| கழு | கும | லைப் | பதி | யனு | தின | முற் | றிடு |
| சுத் | த | னே . | . . | . | . |
மற்ற இடங்கலில் ஓரசை இரண்டு உயிர்களை ஏற்று வருவது வழக்கமில்லல. அப்படி எங்கேனும் வருமானால் அந்த அசை வழுவசையாகக் கொள்ளப்படும் என்று முன்னர் கூறப்பட்டது (நூ. 14).
16.
- ஏனை இடங்களில் இரண்டிறந் திசைப்பவும்
ஈருயிர் ஏற்பவும் வழுவசை ஆகும்.
கருத்து : சிந்துப் பாடல்களில் அரையடி இறுதி, அடியிறுதி ஒழிந்த ஏனைய இடங்களில் இரண்டசை நீளத்திற்கு மேல் ஒலிக்கும் அசைகள் வழுவசைகளாகக் கொள்ளப்படும். அதே போன்று முடுகிய இடமல்லாத மற்ற இடங்களில் உள்ள அசைகள் இரண்டு உயிர்களை ஏற்று வருமானால் அந்த அசைகளும் வழுவசைகளாகக் கொள்ளப்படும் (எ.கா - நூ. 14 - இரட்டைக் கும்மி. காண்க)
விளக்கம் : சிந்துப் பாடல்களில் முடுகியல் நடையுடைய இடங்களில் ஓரசை இரண்டு உயிர்களை ஏற்றுவரும் என்று முன்பு காட்டப்படது (நூ.15). முடுகியல் அல்லாத இடங்களில் ஓரசை இரண்டு உயிர்களை ஏற்றுவரின் அது வழுவசையாகக் கொள்ளப்படும்.
சிந்துப் பாடல்களில் ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசை மதிப்பு பெறும் (நூ. 6)
இவ்வசைகள் அரையடி இறுதி, அடியிறுதிகளில் ஓசை நீட்டம் பெற்று அளபெடைகளாக ஒலித்து வரலாம். அவ்விடங்களில் அவ்வசை எழுத்துகள் 12 மாத்திரை அளவுகூட ஒலித்தல் உண்டு. மற்ற இடங்களில் இரண்டு அசை நீளத்திற்கு ஒலிக்கலாம். ; இரண்டு அசை நீளத்திற்கு மேல் எங்கேனும் ஓசை நீண்டு ஒலித்து வருமானால் அவ்வசை வழுவசையாகக் கொள்ளப்படும்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

