முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 216. அவனுக்கும் இடம் செய்க!
புறநானூறு - 216. அவனுக்கும் இடம் செய்க!

பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண்
துறை: இயன்மொழி
குறிப்பு : வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது.
| கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் காண்டல் இல்லாது யாண்டுபல கழிய, வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும், அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல் என்று ஐயம் கொள்ளன்மின், ஆரறி வாளிர்! |
5 |
| இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே; புன்பெயர் கிளக்கும் காலை, என் பெயர் பேதைச் சோழன் என்னும், சிறந்த காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை, |
10 |
| இன்னதோர் காலை நில்லலன்; இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே! |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 214 | 215 | 216 | 217 | 218 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 216. அவனுக்கும் இடம் செய்க!, இடம், அவனுக்கும், இலக்கியங்கள், சோழன், அவன், செய்க, புறநானூறு, நேரில், வடக்கிருக்க, உண்டு, என்னுடன், உரிமை, பழகிய, சங்க, எட்டுத்தொகை, ஒழிக்க, ஐயம், காலை, சிறந்த

