முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 400. உலகு காக்கும் உயர் கொள்கை!
புறநானூறு - 400. உலகு காக்கும் உயர் கொள்கை!

பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
|
மாசு விசும்பின் வெண் திங்கள் |
5 |
| பலர் துஞ்சவும் தான் துஞ்சான், உலகு காக்கும் உயர் கொள்கை, கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே; கேட்டற் கொண்டும், வேட்கை தண்டாது: தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி, |
10 |
| மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம் . . . . . . . . . . லவான கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி, நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து; போ தறியேன், பதிப் பழகவும், |
15 |
| தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ; மறவர் மலிந்ததன் . . . . . கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து, இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம் |
20 |
| தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத், துறைதொறும் பிணிக்கும் நல்லூர், உறைவின் யாணர் , நாடுகிழ வோனே! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 400. உலகு காக்கும் உயர் கொள்கை!, அவன், உலகு, இலக்கியங்கள், கொள்கை, காக்கும், உயர், வேள்வித், கட்டி, நலங்கிள்ளி, புறநானூறு, கடமை, வேள்வித்தூண், நிறுத்துவான், மகிழ்ந்தான், பிறரது, நான், புத்தாடை, பசிப்பகையையும், தூண்களில், கேள்வி, வேட்கை, சோழன், சங்க, எட்டுத்தொகை, தண்டாது, பழகவும், மகிழ்ச்சி, மலிந்த, மறவர், கப்பல்களை

