முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 165. இழத்தலினும் இன்னாது!
புறநானூறு - 165. இழத்தலினும் இன்னாது!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை. குறிப்பு: காடு பற்றியிருந்த குமணன், புலவர் பரிசில் வேண்டிப் பாடத், தன் தலையைக் கொய்து கொண்டு தம்பியின் கையிற் கொடுத்துப் பொருள் பெற்றுப் போகுமாறு சொல்லித் தன் வாளைக் கொடுக்கப், பெற்றுப் புலவர் பாடியது.
| மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர், இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின், தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; |
5 |
| தாள்தாழ் படுமணி இரட்டும், பூனுதல், ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றெனன் ஆகக்,`கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் |
10 |
| நாடுஇழந் ததனினும் நனிஇன் னாது` என, வாள்தந் தனனே, தலை எனக்கு ஈயத், தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்; ஆடுமலி உவகையோடு வருவல், ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே. |
15 |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 163 | 164 | 165 | 166 | 167 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 165. இழத்தலினும் இன்னாது!, இலக்கியங்கள், இழத்தலினும், இன்னாது, எனக்கு, புறநானூறு, காட்டில், அப்போது, வழங்குவதற்கு, என்ன, கொடுத்தான், அவன், பெற்றுப், சங்க, எட்டுத்தொகை, குமணன், பரிசில், வாளைக், புலவர், இன்மையின்

