புறநானூறு - 151. அடைத்த கதவினை!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
குறிப்பு: இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன.அவண் சென்ற புலவர் இளங்கண்டீரக் கோவைபப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லராயினர். 'என்னை என் செயப் புல்லீராயினர்' என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும் கூறிப் பாடுதலால்
இயன்மொழி ஆயிற்று.)
| பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன் கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து, புன்தலை மடப்பிடி பரிசிலாகப், பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க் |
5 |
| கண்டீ ரக்கோன் ஆகலின், நன்றும் முயங்கல் ஆன்றிசின், யானே: பொலந்தேர் நன்னன் மருகன் அன்றியும், நீயும் முயங்கற்கு ஒத்தனை மன்னே: வயங்கு மொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை |
10 |
| அணங்குசால் அடுக்கம் பொழியும் நும் மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே. |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 149 | 150 | 151 | 152 | 153 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 151. அடைத்த கதவினை! , இலக்கியங்கள், அடைத்த, புலவர், நீயும், அவன், நாட்டின், தம்பி, கதவினை, புறநானூறு, பொலந்தேர், அரசன், பரிசில், பெண்டிரும், இளவிச்சிக்கோவும், சங்க, எட்டுத்தொகை, பெருந்தலைச், சாத்தனார், இயன்மொழி, பண்டும்

