முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » திருப்புகழ் »
பாடல் 932 - திருப்பாண்டிக்கொடுமுடி
திருப்புகழ் - பாடல் 932 - திருப்பாண்டிக்கொடுமுடி
ராகம் - மாண்ட்
தாளம் - மி.ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
| தனதனத் தனனத் ...... தனதான |
|
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ அரியயற் கறிதற் ...... கரியானே அடியவர்க் கெளியற் ...... புதநேயா குருவெனச் சிவனுக் ...... கருள்போதா கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே. |
நல்வினை, தீவினை இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி, துயரங்கள் ஏற்பட்டு அலைந்து திரியப் புகாமல், உனது திருவருளாம் கருணையென்னும் ஒளியாலே உறுதியான வகையில் நான் நற்கதியைப் பெறமாட்டேனோ? திருமாலும் பிரம்மாவும் அறிவதற்கு அரியவனே, உன் அடியவர்க்கு எளிதாகக் கிட்டும் அற்புதமான நண்பனே, குருமூர்த்தியாக சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே, கொடுமுடித் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 930 | 931 | 932 | 933 | 934 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெருமாளே

