திருப்புகழ் - பாடல் 703 - கோடைநகர்
ராகம் - மாயா மாளவ
கெளளை
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
|
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான |
|
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி யி ருந்து ஆகமல மாகி நின்று ...... புவிமீதில் ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து ஆளழக னாகி நின்று ...... விளையாடிப் பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப் போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன் பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற தீரனரி நார ணன்றன் ...... மருகோனே. தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று தேடஅரி தான வன்றன் ...... முருகோனே கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற கோமளிய நாதி தந்த ...... குமரேசா கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே. |
முதல் முதலாக எனது தாயின் உடலில் இருந்து பல அழுக்குகள் நிறைந்த உருவுடன், இந்தப் பூமியிலே பிறக்கும்போதே ஆசையுடன் பிறந்து, பெற்றோர் சுற்றத்தார் ஆகியோரின் அன்புடன் வளர்ந்து, ஆள் அழகன் என்னும்படியாக விளங்கி, விளையாடி, பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து பெண்களுடன் மருவிக் கலந்து, பூமியில் அவசியத்தின் காரணமாகப் பொருள்களைத் தேடி சுகபோகங்களில் ஈடுபட்டுத் திரிந்து பாழான நரகத்தை நான் அடையாமல், உனது மலர்ப்பாதங்களை அடைய அன்பைத் தந்தருள்வாயாக. சீதையைக் கவர்ந்து சென்ற அந்த ராவணனை கொன்று வென்ற தீரனாம் ஹரி, நாராயணனின் மருகனே, தேவர்கள், முநிவர்கள், மேகவண்ணன் திருமால், பிரம்மா இவர்களெல்லாம் நின்று தேடியும் காணுதற்கு அரிதாக விளங்கிய சிவனின் குழந்தையாம் முருகனே, தேவியும், கயிலைநாதனாம் சிவபிரானின் இடப்பக்கம் மேவிய அழகியும், தொடக்கமே இல்லாதவளுமான பார்வதி தந்த குமரேசனே, ஒன்றுகூடி வந்த சூரரின் மார்பை இருகூறாகக் கண்டவனே, கோடை நகரில்* வாழ்ந்திருக்கும் பெருமாளே.
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 701 | 702 | 703 | 704 | 705 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தந்த, நின்று, தானதன, கோடைநகர், பெருமாளே, பூமியில், வந்த, ராவணனை, தகிட, வென்ற

