திருப்புகழ் - பாடல் 639 - கதிர்காமம்
ராகம் -
சக்ரவாஹம்; தாளம் - திஸ்ர்ருபகம் - திஸ்ரநடை - 7 1/2
- எடுப்பு - /3 0
- எடுப்பு - /3 0
|
தனன தான தத்த ...... தனதான தனன தான தத்த ...... தனதான |
|
எதிரி லாத பத்தி ...... தனைமேவி இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும் இதய வாரி திக்கு ...... ளுறவாகி எனது ளேசி றக்க ...... அருள்வாயே கதிர காம வெற்பி ...... லுறைவோனே கனக மேரு வொத்த ...... புயவீரா மதுர வாணி யுற்ற ...... கழலோனே வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே. |
சமானம் இல்லாத அன்புடையவனாகி இனிமையைத் தரும் உன் திருவடிகளின் தியானத்தை இரவும் பகலும் இதயமாகிற கடலுக்குள்ளே பதியவைத்து என் உள்ளத்திலே உன் நினைப்பு சிறக்குமாறு அருள்வாயாக. கதிர்காமம் என்ற திருமலையில் எழுந்தருளி வாழ்பவனே, பொன் மேரு மலையை ஒத்த தோள்களை உடைய வீரனே, இனிய மொழிகள் உள்ள ஸரஸ்வதி வந்து போற்றும் பாதனே, பாண்டியனது கூனை சம்பந்தராக வந்து நிமிர்த்திய பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 637 | 638 | 639 | 640 | 641 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெருமாளே, வந்து, மேரு, இனிய, தத்த, தனதான, கதிர்காமம்

