திருப்புகழ் - பாடல் 473 - சிதம்பரம்
ராகம் -...; தாளம்
-
|
தந்ததன ...... தனதான தந்ததன ...... தனதான |
|
செங்கலச ...... முலையார்பால் சிந்தைபல ...... தடுமாறி அங்கமிக ...... மெலியாதே அன்புருக ...... அருள்வாயே செங்கைபிடி ...... கொடியோனே செஞ்சொல்தெரி ...... புலவோனே மங்கையுமை ...... தருசேயே மன்றுள்வளர் ...... பெருமாளே. |
செம்புக் குடம் போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர் மீது மையலால் மனம் பலவாகத் தடுமாறி என்னுடல் மிகவும் மெலிவு அடையாமல், உன் அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக. சிவந்த கையில் பிடித்துள்ள சேவல் கொடியோனே, சிறந்த சொற்களைத் தெரிந்த புலவனே, மங்கை பார்வதி ஈன்ற குழந்தையே, தில்லைப் பொன்னம்பலத்தினுள் விளங்கும் பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 471 | 472 | 473 | 474 | 475 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெருமாளே, கொடியோனே, தடுமாறி, தனதான, தந்ததன

