மயில் விருத்தம் - மயில் விருத்தம் - 1
கம்சட்வனி - கண்ட சாபு
|
சந்தான புஷப பரிமள கிண்கிணீ முக சரண யுகளமிர்த்த ப்ரபா சன்ற சேகர முஷிகாருட வெகுமோக சத்ய ப்ரியாலிங்கன சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி யம்பக வினாயகன் முதற் சிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம் மந்தா கினிப் பிரபவ தரங்க விதரங்க வன சரோதய கிர்த்திகா வர புத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் இந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரண இகல்வேல் வினோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே (ரத்னக் கலாப மயிலே |
தேவ லோக விருட்சங்களில் ஒன்றான சந்தான மர புஷ்பத்தின், நறு மணம் வீசுவதும், சதங்கையை தன்னிடத்தில் கொண்டதும், அமிர்த ஒளியை வீசுவதும் ஆகிய, இரண்டு திரு அடிகளை உடையவரும் (யுகள இரண்டு), பிறைச் சந்திரனை அணிந்தவரும், மூஷிக வாகனரும், மிகப் பிரியத்துடன் சத்ய நெறியையே தழுவிக் கொண்டிருப்பவரும், தேவ லோகத்து மணியாகிய சிந்தாமணி போல் அடியார்களுக்கு நினைத்ததை அள்ளிக் கொடுப்பவரும், தனது தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக ரத்ன கலசத்தை திருக் கரத்தில் ஏந்தி இருப்பவரும், மத நீர் பெருகும் கன்னங்களை உடையவரும், முக் கண்ணை உடையவருமாகிய கணபதி, முன்னொரு காலத்தில், கனிக்காக போட்டி இட்டு சிவபெருமானைச் சுற்றி வரும் அதே நேரத்தில், சராசலங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் சுற்றி வந்த, அழகான தோகைகளை உடைய மயில் (அது யாருடையது என வினாவினால்) கங்கையில் உதித்தவரும், மனக் கவலைகளை பிளந்து எறிபவரும், சரவணத்தில் உதித்தவரும், கிருத்திகை மாதர்களின் சிறந்த புதல்வரும், தாமரை மலரைத் தனது கட்டிலாகக் கொண்டவரும், பாம்பு வடிவமான அந்த சீர்மிகு நாகாசல வேலவனும், வஜ்ராயுதத்தை உடைய இந்திரனின் மனைவியாகிய இந்திராணியின், மாங்கல்ய நூலை காப்பாற்றினவரும், போரிட வல்ல வேலாயுதத்தை ஏந்தி இருக்கும் பேரழகை உடையவனும், அருளைச் சுரக்கும், இமவான் மடந்தை பார்வதியின் திருக் குமாரனாகிய முருகக் கடவுள் வாகனமாக ஏறி வரும் நீல நிறமான கழுத்தையும் பச்சை நிறமாக ஒளி வீசும் தோகைகளை உடைய மயிலே அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
Mayil Virutham, மயில் விருத்தம், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மயிலே, கலாப, உடைய, ரத்னக், வரும், ஏந்தி, திருக், சுற்றி, உதித்தவரும், தனது, தோகைகளை, வீசுவதும், சத்ய, சந்தான, நொடியில், மயில், இரண்டு, உடையவரும்

