முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 345
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 345
வெற்றி பெற்ற செய்தியை அறிந்தது முதல், நான் பொதுஉடைமை நூல்களைத் தேடித்தேடிப் படிக்கத் தொடங்கினேன். அதைவிட அதிகமாக நமது நாட்டுப் பிரச்னைகளைப் பற்றிப் பொது உடைமை நோக்கோடு சிந்திக்கத் தொடங்கினேன். இந்தியாவிற்கும் உலகத்திற்கும் நன்மை பயக்கக்கூடியது அந்தப் பொது உடைமைக் கொள்கைதான். காந்திஜியின் இந்த ஒத்துழையாமை இயக்கம், இந்த மகத்தான லட்சியத்திற்குச் சாதகமாக இருக்குமா அல்லது இல்லையா என்ற சந்தேகந்தான் எனக்குக் கொஞ்ச நாளாக இருந்தது. ஆனால் புரட்சிச் சக்தியின் மூலாதாரமான பொது ஜனங்களைத் தட்டி எழுப்புவதைப் பற்றி நீ ஞாபகப்படுத்தியதும் எனது சந்தேகம் தீர்ந்தது. நான் காந்திஜியைப் புரட்சியை நடத்தும் கருவி என்று ஒப்புக்கொள்கிறேன். 1857ல் கொழுப்புத் தடவிய தோட்டாவால் மதத்திற்கு ஆபத்து என்று கதை கட்டி மக்களைப் புரட்சியிலே இழுத்தார்கள். ஆனால்? இன்று உணவுப் பிரச்னை அவர்களைப் புரட்சிக்கு இழுத்துக் கொண்டு வருகிறது. கோஷம் சரியானது; புரட்சியின் குரல் சரியானது. ஆகவே காந்திஜி, பின்னால் தனது சுய உருவத்தில் வெளியே வந்தாலும், புரட்சியின் சக்கரத்தைத் திருப்ப முடியாது என்று நான் கருதுகிறேன்.”
“இப்பொழுது நான் புரட்சி சேனையிலே சேர்வதற்கு-ஒத்துழையாமை
இயக்கத்திலே ஈடுபடுவதற்கு விரும்புகிறேன்.”
“இவ்வளவு சீக்கிரமாகவா?”
“ஆம், சீக்கிரமாகத்தான். நான் இதற்கு முன்னாலேயே மைதானத்தில் இறங்கியிருக்க வேண்டும். ரொம்ப தூரம் யோசித்து, சிந்தித்த பிறகு, இன்று உன்னுடைய அபிப்பிராயத்தையும் கேட்டுக் கொண்டுதான் எனது முடிவை வெளியிடுகிறேன்.”
சபதரின் கம்பீரமான முகத்திலிருந்து இந்தச் சொற்கள் வெளிவந்த பிறகு, சங்கர் எங்கேயோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அவர் மௌனமாயிருப்பதைப் பார்த்த சபதர்,
“என்ன, உனது மன்னியின் லிப்ஸ்டிக்கைப் பற்றியும், பட்டுச் சேலையைப் பற்றியும், பஞ்சு மெத்தையைப் பற்றியும் இந்தப் பங்களாவைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறாயா? நான் சகீனாவை ஒன்றும் கட்டாயப்படுத்த மாட்டேன். அவள் எவ்வித வாழ்க்கையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவளிடம் அவளுடைய சொந்தச் சொத்தும் இருக்கிறது. மேலும் இந்தப் பங்களாவும் என் தந்தையார் விட்டுச் சென்ற பல கிராமங்களும் கொஞ்சம் ரொக்கமும் இருக்கின்றன. இவை எதுவும் என்னைக் கவரவில்லை. இவைகளைக் கொண்டு இவள் இஷ்டம் போல தனது வாழ்க்கையை நடத்தலாம்.”
“நான் மன்னியைப் பற்றியோ அல்லது உன்னைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருக்கவில்லை. என்னைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
என் பாதையிலே இருந்த சில சந்தேகத் தடைகளும் இப்பொழுது நீங்கிவிட்டன. வா! சகோதரர்களாகிய நாம் இருவரும் ஒன்றாகவே புரட்சிப்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 343 | 344 | 345 | 346 | 347 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், பற்றியும், யோசித்துக், என்று, பொது - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

