முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 343
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 343
தேங்கிக் கிடக்கும். அதன் விளைவாக மந்தம் ஏற்படும். உற்பத்தியைக் குறைக்க வேண்டும். தொழிற்சாலைகள் மூடப்படும். தொழிலாளர்கள் வேலையற்றவர்களாவார்கள். வாங்கும் சக்தி இன்னும் குறையும். மறுபடியும் அந்த விஷச்சக்கரம்தான். அதற்காகத்தான் இந்தப் புதிய பொது உடைமைக் கொள்கை. லாபத்தின் ஆசையைவிட்டு விடுங்கள்; தங்கள் நாட்டை மட்டுமோ அல்லது அகில உலகத்தையுமோ ஒரே குடும்பமாகக் கருதி அதன் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யுங்கள்; ஒவ்வொரு மனிதனிடமும் அவன் சக்திக்கேற்ப வேலை வாங்குங்கள்; அவனுடைய வேலைக்கேற்ப அவசியமான பொருள்களைக் கொடுங்கள்; எல்லோருடைய தேவையையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவு உற்பத்தி பெருகாதவரை உழைப்பிற்கேற்பக் கூலி கொடுங்கள் என்று உபதேசிக்கிறது. நிலமும் தொழிற்சாலைகளும் தனி மனிதனுக்குச் சொந்மாய் இருக்காமல், தேசத்தின் பொதுச் சொத்தாக ஆகும்பொழுதுதான் இது நிறைவேறும்.”
“கற்பனை மிக அழகாகத்தான் இருக்கிறது.”
“இது வெறும் கற்பனையல்ல சங்கர்! உலகத்தின் ஆறிலொரு பாகமான
ருஷ்யாவிலே, 1917ம் வருடம் நவம்பர் மாதம் 7ம் தேதி பொது உடைமை அரசாங்கம் ஏற்பட்டு விட்டது. இன்றும்கூட முதலாளித்துவ உலகம் மனித சமுதாயத்திற்கு ஒரே ஒரு நம்பிக்கையான அந்தப் பொது உடைமை அரசாங்கத்தை அழித்து விட விரும்புகிறது. ஆனால் முதலில் ஏற்பட்ட பலமான பரீட்சையிலேயே சோவியத் அரசாங்கம் தேறி விட்டது. ஹங்கேரியில் ஏற்பட்ட பொது உடைமை அரசாங்கத்தை, ஆறு மாத காலத்திற்குள் பிரான்ஸ்-அமெரிக்க முதலாளிகள் கொன்று விட்டார்கள். ஆயினும் ருஷ்ய சோவியத் அரசாங்கம், உலகத் தொழிலாளர்கள்- விவசாயிகளுக்குத் தூண்டுதலும் நம்பிக்கையுமாகும். ருஷ்யாவிலே சோவியத் ஆட்சியை ஸ்தாபித்து இந்த சக்தி உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்து கொண்டிருக்கிறது. யுத்தம் முடிந்ததும், அவசர அவசரமாக ரௌலட் சட்டத்தை ஏன் நமது அரசாங்கம் பாஸ் செய்தது? உலகத்தின் புரட்சிகரமான அந்த சக்தியை ஒடுக்குவதற்காகத் தான். அந்த புரட்சிகரமான சக்தி உலகத்தை மாற்றுவதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பரவ முயலாவிட்டால் ஆங்கிலேயர்கள் இந்த ரௌலட் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க மாட்டார்கள். காந்திஜியும் அதற்கு விரோதமாகக் கிளர்ந்தெழும் படி ஜனங்களைத் தூண்டியிருக்கமாட்டார். ஜனங்களும் விழித்தெழுந்திருக்கமாட்டார்கள். 1857க்குப் பிறகு சாம்பல் மூடிக் கிடந்த தணல் மறுபடியும் சுடர் விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி இருக்காது. ஆகையால் தான் நாம் இப்பொழுது புரட்சி யுகத்திலே நுழைந்து கொண்டிருக்கிறோம். என்று நான் சொன்னேன்.”
“காந்திஜி புரட்சிகரமான தலைவர் என்று நீங்கள் கருதுகிறீர்களா? கோகலே போன்ற மிதவாதத் தலைவரைத் தனது குருவென்று சொல்லும் காந்திஜி, புரட்சிக் காரராய் இருக்க முடியுமா?”
“காந்திஜியின் எல்லாக் கருத்துக்களும் எல்லா செயல்களும் புரட்சிகரமானது என்று நான் ஒப்புக் கொள்ளவில்லை, சங்கர்! புரட்சிச் சக்தியின் மூலா
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 341 | 342 | 343 | 344 | 345 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசாங்கம், பொது, என்று, சோவியத், புரட்சிகரமான, அந்த, உடைமை, சக்தி, உலகத்தின், ஒவ்வொரு - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

