முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 339
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 339
லும் ஐக்கியப்பட்டு, பிரஷ்யாவின் தலைமையிலே தன்னை ஒரு ஐக்கிய நாடாக ஆக்கிக் கொண்டது. 1866ம் வருடம் ஏற்பட்ட அந்த மாற்றம் உலகத்திலே பெரிய மாற்றம் என்று சொல்ல வேண்டும். அதனால் தான், பிரான்ஸைப் போன்ற மகத்தான சக்தியை 1870ம் வருடத்தில் ஜெர்மனி தோற்கடிக்க முடிந்தது. பாரிஸிலும் வார்ஸாவிலும், ஜெர்மனியின் வெற்றிக் கொடி பறப்பதைக் கண்ட இங்கிலாந்தும், ருஷ்யாவும் பயமடைந்து பெர்லினை நோக்கத் தொடங்கின. இந்த வெளிப் பயம் ஒரு புறமிருக்க 1871ம் வருடம் ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து மே 21ம் தேதிவரை ஒன்றரை மாதங்களுக்கு அதிகமாக ஆட்சி செலுத்திய பாரிஸ் தொழிலாளர்களின் ‘பாரிஸ் கம்யூன்’ ராஜ்யத்தைக்கண்டு தான் அதிகமாகப் பயப்பட்டார்கள். அந்தச் சில நாள் ஆட்சி உலகில் ராஜ்யம் நடத்தக் கூடியவர்கள் பிரபுக்களும் வியாபாரிகளும் மட்டுமல்ல, தொழிலாளர்களாலும் அதை நடத்த முடியும் என்று நிரூபித்து விட்டது.”
“இந்த நிகழ்ச்சிகளோடு இந்தியாவின் அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கருதுகிறீர்களா?”
“அரசியல் நிகழ்ச்சிகளல்ல. ஆனால், நம்முடைய எஜமானர்களான ஆங்கிலேயர்கள் இந்தியா விஷயமாகக் கொள்கைகளை நிச்சயிப்பதற்கு, இச்சம்பவங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. ஐரோப்பாவிலே ஜெர்மனியைப் போன்ற ஜெயிக்க முடியாத ஒரு சக்தி தோன்றியதும், பிரான்ஸும், இங்கிலாந்தும் தங்களுக்குள்ளேயிருந்த போட்டியை மறந்து விட்டன.
இப்பொழுது அவர்களுக்கு ஜெர்மனியைப் பற்றின பயம் ஏற்பட்டுவிட்டது. இறந்து போன பாரிஸ் கம்யூனும், 1871ல் ஆஸ்டிரியாவைத் தவிர்த்த மற்ற எல்லா ஜெர்மானிய நாடுகளும் ஐக்கியப்பட்டுள்ள ஜெர்மன் ஐக்கிய ராஜ்யமும் நம்மை ஆளும் முதலாளிகளின் தூக்கத்தைப் பாழாக்கி விட்டன என்று சொல்ல வேண்டுவதில்லை. இப்பொழுது மேலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1670ல் ஆங்கில வியாபாரிகள் முதலாளிகளாக மாறினார்கள். மூலப்பொருள்களை வாங்குவதிலிருந்து, அதைச் செயற்கைப் பொருள்களாகத் தயாரித்து விற்பது வரை, ஒவ்வொரு கட்டத்திலும் லாபம் சம்பாதிக்கும் முதலாளித்துவக் கொள்கையை அவர்கள் கடைப்பிடித்தார்கள். வியாபாரத்தில், தொழிலாளர்கள் தயார் செய்யும் பொருள்களை இங்கிருந்து வாங்கிப் போய் அங்கே விற்பதில் ஏற்படும் சிறிய லாபம்தான் கிடைக்க முடியும். ஆனால், முதலாளித்துவத்தில் ஒவ்வொரு படியிலும் லாபம் இருக்கிறது. பஞ்சு வாங்குவதிலே லாபம், அதைச் சுத்தம் செய்து பட்டை போடுவதிலே லாபம்; ரயில்களிலே ஏற்றிச் செல்வதிலே லாபம்; கப்பல்களிலே அன்னிய நாட்டிற்கு அனுப்பும் கப்பல் கூலி லாபம்; மான்செஸ்டர் மில்களிலே நூற்பது, நெய்வதில் கிடைக்கும் லாபம், மறுபடியும் கப்பலிலே கொண்டு வந்து ரயில் மூலம் பல இடங்களுக்கும் அனுப்புவதால் கிடைக்கும் ரயில் கூலி, கப்பல் கூலி லாபம்; இவ்விதம் ஒவ்வொரு படியிலும் கிடைக்கும் லாபத்தையும், தொழிலாளிகளிடம் சாமான்களை வாங்கி விற்பதில் கிடைக்கக்கூடிய சாதாரண லாபத்தையும், நீயே ஒப்பிட்டுப் பார்.”
“வியாபாரத்தைவிட முதலாளித்துவத்தின் லாபம் அதிகம் என்பதில் சந்தேகமில்லை.”
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 337 | 338 | 339 | 340 | 341 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
லாபம், என்று, கிடைக்கும், கூலி, ஒவ்வொரு - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

