முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 226
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 226
பட்டிருப்பதோடு மட்டுமல்ல, அவற்றிலே அழகிய பாலங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் குளங்களில் எங்கும் உல்லாசப் படகுகளும் காணப்பட்டன. மாளிகையின் உள்ளே இருந்த சாமான்கள் யாவும் யானைத் தந்தத்தாலும் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்டு இரத்தினங்கள் இழைக்கப்பட்டிருந்தன; பட்டுடையும், மெல்லிய பஞ்சாடைகளும் அங்கு அளவற்றுக் குவிந்து கிடந்தன. மாளிகையை அலங்கரிப்பதிலே, சைத்திரிகர்கள் தங்கள் கைத் திறமையையெல்லாம் காட்டியிருந்தார்கள். சிற்பிகளோ, கல்லையும், மண்ணையும் கலையாக்கி இருந்தார்கள். வெளிநாட்டு யாத்ரிகர்களும், அரசதூதர்களும், இந்தச் சித்திரங்களையும் சிலைகளையும் பார்த்து வாயாரப் புகழ்ந்ததை நான் கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம், என் தலை கர்வத்தால் நிமிரும். ஆனால் அந்த அரச மாளிகைகள் எழுந்ததின் காரணமாக, நாள்தோறும் தரித்திரத்திலே மூழ்கிக்கொண்டிருக்கும் கிராமங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் நெஞ்சம் பற்றி எரியும். நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும் சிற்பிகள் சிறந்த சிற்பங்களைச் செய்கிறார்கள். சேணியர்கள் அற்புதமான மெல்லிய ஆடைகளை நெய்கிறார்கள். தட்டார், கொல்லர், தச்சர்
முதலிய எல்லாத் தொழிலாளர்களும் தங்கள் தொழில் திறமையைக் காட்டத்தான் செய்கிறார்கள். அரச மாளிகையைக் கலையுணர்ச்சியோடு அலங்காரம் செய்த கைகள். இந்தக் கிராமத் தொழிலாளரின் கையோடு தொடர்புடையவையே. ஆனால் அவர்களின் உடம்பையும் வீடுகளையும் பார்த்தால் இவர்களின் தொழில் திறமையும் சிருஷ்டிகளும், வெறும் கனவுதானோ என்ற சந்தேகம் எழும். கிராமங்களிலிருந்து சிறிது சிறிதாக ஒன்றுசேர்ந்து, அந்தப் பொருள்கள் நகர மாளிகைகளுக்கும் வியாபாரச் சாலைகளுக்கும் போய்ச் சேருகின்றன. அதன் பெரும்பகுதி, அங்கிருந்துமேற்குச் சமுத்திரக்கரையிலுள்ள பரூகச்சத்தின் வழியாக ஈரான், ஆப்பிரிக்கா முதலிய தேசங்களுக்கும், கிழக்குக் கரையிலுள்ள தமலூக் வழியாக ஜாவா, சுமத்ரா முதலிய தேசங்களுக்கும் சென்றன. பாரத தேசத்தின் கடல் வியாபாரம் இதற்கு முன்னால் இவ்வளவு பிரபல மடைந்ததில்லை. குப்தர்கள் ஆட்சிக்கு முன்னால், பாரதத்தின் பொருள்களுக்காக வெளிநாட்டுச் செல்வம் இவ்வளவு வந்து குவிந்ததும் கிடையாது. ஆனால் இந்தப் பெரும் செல்வத்தால் லாபம் யாருக்கு? இந்தப் பொருள்களின் மீது பெரிய பெரிய வரிகளை விதித்து வசூல் செய்யும் குப்த அரசர்களுக்கு-அவர்களை அண்டி வாழும் குறுநில மன்னர்களுக்கு கடைசி வரிசையில் வந்தாலும் கடல் வியாபாரிகளும் நகர வியாபாரிகளும் இந்த லாபத்திலே குறைவான பங்கைப் பெறுகிறவர்களல்ல. இவைகளையெல்லாம் பார்த்த பிறகு, கிராமத்தின் தொழிலாளிகளும் விவசாயிகளும் ஏழையாய் இருப்பதின் காரணத்தைத் தெரிந்து கொண்டதோடு மட்டுமல்ல, அந்த ஏழ்மைச் சூழ்நிலையிலும், போக்குவரத்துப் பாதைகள் யாவும் திருடர் பயமின்றிப் பூரணப் பாதுகாப்போடு இருப்பதற்கு, குப்த அரசர்கள் செய்துள்ள ஏற்பாடுகளின் காரணத்தையும் தெரிந்து கொண்டேன்.
கிராமங்களில் ஏழ்மை நிறைந்திருக்கிறது என்றாலும், அந்த நெஞ்சிலே நெருப்பைக் கொட்டும் காட்சியை அங்கு காண முடியாது. மிருகங்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 224 | 225 | 226 | 227 | 228 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதலிய, அந்த, ஆனால், மட்டுமல்ல - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

