முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 153
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 153
ரும், ராஜவம்சத்துப் பாயாசியும் தங்களுடைய சுயசிந்தனையால் ஜனங்களிடையே நல்ல செல்வாக்கும் உயர்ந்த அந்தஸ்தும் பெற்றிருந்தார்கள். ஆனால், அவர்களுடைய பௌதிகவாதம் சமூகத்திற்கு அவ்வளவு ஆபத்தாய் இருக்கவில்லை.
பௌதிகவாதத்தின் பிரசாரம் இருந்தாலும்கூட அரசர்கள், சேனைத் தலைவர்கள், பெரிய தனம் படைத்த வியாபாரிகள் முதலியவர்களை கௌதம புத்தருடைய அநாத்மவாதமே மிகவும் ஆகர்ஷித்தது. அதுவும் முக்கியமாக,
கோசல தேசத்தில் மிகவும் பிரபலம். கௌதம புத்தர், கோசல தேசத்துக்குட்பட்ட சாக்கிய சமூகத்திலே பிறந்தவர் என்பதும் ஒரு காரணமாகும். பௌதிக வாதிகளைப் போலவே கௌதம புத்தரும், ஆத்மா, கடவுள் முதலிய எந்த ஒரு நித்திய வஸ்துவும், அதாவது அழியாத பொருள்கள் உலகத்தில் இல்லையென்றும், உலகத்தில் தோன்றும் பொருள்கள் யாவும் மறையவே செய்யும் என்றும் கூறினார். உலகம் பொருள்களின் சேர்க்கையல்ல; சம்பவங்களின் பிரவாகமே (நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியே) என்பது அவர் உபதேசம்* ஆனால், இந்த மாதிரி கூறும் அநித்யவாதத்தால் உலக சம்பிரதாயம், ஏழை-தனவான், அடிமை எஜமான் என்ற பேதங்கள் ஆச்சல் எடுத்து விடக்கூடும். இதனாலேயே, அஜித்தனுடைய பௌதிகவாதத்திற்கு, அரசர்கள், சேனைத்தலைவர்கள், வியாபாரிகள் முதலியவர்களுடைய ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் கௌதம புத்தர், தன்னுடைய அநாத்மவாதத்தோடு, அதாவது பௌதிகவாதத்தோடு இன்னும் சில விஷயங்களையும் சேர்த்துப் பௌதிகவாதத்தினுடைய கசப்பைப் போக்கிவிட்டார். அதாவது, அழிவற்ற ஆத்மா என்பதாக எதுவும் இல்லையானாலும்கூட எண்ணம்-சைதன்யம் பிரவாகமானது. சுவர்க்கம் - நரகம் முதலிய உலகங்களுக்குள்ளும், ஒரு சரீரத்திலிருந்து மற்றொரு சரீரத்திற்கும் மாறிக் கொண்டே இருக்கிறது என்றும் கௌதமபுத்தர் கூறினார். அவருடைய இந்தக் கொள்கையால், அரசன் பிரவாஹனுடைய பழைய பிர்மவாத ஆயுதம் மறுபடியும் தோன்றுவதற்கு அஸ்திவாரம் ஏற்பட்டுவிடுகிறது. கௌதமபுத்தர் கலப்பில்லாத பௌதிக வாதத்தை மாத்திரம் பிரச்சாரம் செய்திருப்பாரானால், ஸிராவஸ்தி, சாகேதம்
முதலிய நகரங்களிலிருக்கும் தனவந்த வியாபாரிகளின் பணப்பைகள் அவருக்காகத் திறந்திருக்கமாட்டாது; பிராமணப் பண்டிதர்களும், க்ஷத்திரியச் சேனைத் தலைவர்களும், அரசர்களும் கௌதமபுத்தருடைய பாதகமலங்களிலே தங்களுடைய சிரத்தைத் தாழ்த்தியிருக்கமாட்டார்கள்.
கௌதம புத்தருடைய இந்தக் கொள்கைகள் ஸிராவஸ்தத்தின் உயர்ந்த குலப் பெண்களின் இதயத்தை மிகவும் ஆகர்ஷித்து விட்டது; அரசன் பிரசேனஜித்தனின் பட்டத்து அரசி மல்லிகா தேவி, புத்த தர்மத்திலே மிகவும் ஈடுபட்டு விட்டாள். அந்த நகரத்துத் தனவணிகனுடைய மருமகளும் ராணிக்குச் சிநேகிதியுமான விஸாகா, தன்னுடைய பக்தியின் சின்னமாக, பூர்வாராம் மிருகார் மாதா மடம் என்ற பெயருடைய ஒரு விசாலமான மடத்தைக் கட்டுவித்து, அதைப் புத்தருக்குத் தானமாகக் கொடுத்தாள். சேனாதிபதி பந்துல மல்லனுடைய
____________________________________________________
* அறிவாளிகளுக்கு இக்கருத்துக்கள் மிகவும் சரியெனவும், அறிவுக்கும் யுக்தி வாதத்திற்கும் பொருந்தக்கூடியதாயும் படுகிறது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 151 | 152 | 153 | 154 | 155 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கௌதம, மிகவும், அதாவது, முதலிய, ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

