முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 151
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 151
விட்டுப் பயணமாயினர். காவலர்கள் மூலம் விஷயம் தெரிந்ததும், ஐந்நூறு லிச்சவியர்கள் ரதா ரூடராய் பந்துலனின் ரதத்தைப் பின்பற்றினர். இதைக் கேட்ட மஹாலி தடுத்ததைக் கர்விகளான லிச்சவியர்கள் கேட்கவில்லை. பின்னே ரதச் சக்கரங்களின் தொனி கேட்ட மல்லிகா திரும்பிப் பார்த்தாள்.
“பந்துல்! அதோ நமக்குப் பின்னே அநேக ரதங்கள் வருகின்றன.”
“வந்தால் வரட்டும் மல்லிகா! அந்த ரதங்கள் யாவும் ஒரே தடத்துக்கு வந்தவுடன் எனக்குச் சொல்.”
பந்துலனுடைய ரதம் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. தொடர்ந்து வந்த ரதங்கள் யாவும் ஒரே தடத்திற்கு வந்ததும் மல்லிகா தெரிவித்தாள். உடனே பந்துலன் தன்னுடைய வில்லில் நாண் ஏற்றி ஓர் அம்பு தொடுத்ததாகவும், அது ஐந்நூறு லிச்சவியர்களுடைய இடைக் கச்சைகளுக்குள்ளும் நுழைந்து மறுபுறம் போய்விட்டதாகவும் புராதன சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். அந்த லிச்சவியர்கள் நெருங்கி வந்து, பந்துலனை யுத்தத்திற்கு வரும்படி அறைகூவி அழைத்தனர்!
“உங்களைப்போல் பிணங்களோடு நான் யுத்தம் செய்வதில்லை.”
“நாங்கள் பிணமா இல்லையா என்பதை யுத்தத்தில் காட்டுவோம்.”
“நான் உங்களுக்காக இன்னும் ஓர் அம்பைச் செலவு செய்ய விரும்பவில்லை. திரும்பிப் போய் முதலில் உங்களுடைய பந்துமித்திரர்களைத் தரிசித்துக் கொண்டு. அப்பால் உங்களது இடைக் கச்சைகளைக் கழற்றுங்கள்” என்று சொல்லிக்கொண்டே பந்துலன், மல்லிகாவின் கையிலிருந்த குதிரைகளின் கயிற்றை வாங்கித்தான் பற்றிக்கொண்டு, குதிரைகளை வேகமாகச் செலுத்தி லிச்சவியர்களுடைய பார்வையிலிருந்து மறைந்து விட்டான்.
உண்மையிலே வீடு சென்று இடைக் கச்சைகளைக் கழற்றியவுடன் லிச்சவியர்கள் ஐந்நூறு பேரும் பிணமாயினர்.
5
அந்தக் காலத்தில், ஸிராவஸ்தி பாரதத்தின் மிகப் பெரிய நகரமாயிருந்தது. அரசன் பிரசேனஜித்தனுடைய ராஜ்யத்தில், ஸிராவஸ்தியைத்
தவிர சாகேதம் (அயோத்தியா) வாரணாசி (பனாரஸ்-காசி) என்ற இரண்டு பெரிய நகரங்களும் இருந்தன. ஸிராவஸ்தியின் சுதத்தன், மிருகாரன், சாகேதத்தின் அர்ச்சுனன் போன்ற பெரிய தனவந்தர்கள், பிரசேனஜித்தனுடைய காசி-கோசல ஐக்கிய ராஜ்யத்தில் வசித்து வந்தார்கள். இந்தத் தனவந்தர்களுடைய வியாபாரக் கூட்டங்கள் பாரததேச முழுவதும் மட்டுமல்ல, தாம்ரலிப்தத்தின் வழியாக வங்காளக்குடாக் கடலையும், பரூக்கச்சம் (படௌஞ்ச்), சுப்பாராக் (சோபாரா) வழியாக அரபிக் கடலையும் தாண்டி, தூர தூர தேசங்களுக்கும் போய் வந்தன. பிராமணப் பண்டிதர்கள் க்ஷத்திரிய சேனைத் தலைவர்கள், இவர்களுக்கிருக்கும் அந்தஸ்து அந்த தனவந்தர்களுக்கு இல்லையானாலுங்கூட, சமூகத்தில் இவர்களும் உயர்ந்த ஸ்தானத்தையே வகித்து வந்தார்கள். ஆனால் செல்வம் சம்பந்தப்பட்டமட்டில், இந்தத் தனவான்களுக்கு முன்னே
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 149 | 150 | 151 | 152 | 153 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
லிச்சவியர்கள், இடைக், பெரிய, அந்த, ரதங்கள், மல்லிகா, ஐந்நூறு - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

