முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 133
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 133
“அதையும் நீ பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்? பிராமணர்களில் அறிவாளிகளான சிலர், இதன் ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவர்கள் எனது இந்த உபநிஷத ஆயுதம் தங்களுக்கும் மிக உபயோகரமானது என்று கருதுகிறார்கள். அவர்களுடைய குருபீடத்திலும் புரோகிதத் தொழிலிலுங்கூட ஜனங்களுக்கு அவநம்பிக்கை ஏற்படத் தொடங்கிவிட்டது. இதன் விளைவு என்ன ஆகும்? சவாரி செய்வதற்குக் குதிரைகள் பூட்டிய ரதமும், வசிப்பதற்குப் பெரிய மாளிகைகளும், நல்ல உணவும், அழகிய அடிமைப் பெண்களையும் பெற்றுச் சுகபோக வாழ்வு நடத்துவதற்கு ஆதாரமாயிருக்கும் தட்சிணையில் மண் விழுந்துவிடும்.”
“இது கேவலம், வியாபாரந்தானே?”
“ஆம். வியாபாரந்தான், நஷ்டத்தைப் பற்றிய பயமே இல்லா வியாபாரம். ஆகையால்தான், உத்தாலக் போன்ற பிராமண அறிஞர்கள் கையில் சமிதை ஏந்தி என்னிடம் சிஷ்யர்களாவதற்கு வருகிறார்கள். நான் உபநயனம் செய்துகொண்டு முறைப்படி குரு ஸ்தானத்தை அடையாமலேயே
பிராமணனாகாமலேயே, அவர்களுக்குப் பிர்மஞானத்தைப் போதிக்கிறேன்.”
“இது ரொம்ப நீசத்தனமான செயல், பிரவாஹன்!”
“நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நமது விருப்பம் நிறைவேறுவதற்கு இது ஒரு சிறந்த சாதனம். வசிட்டனும் விஸ்வாமித்திரனும் கட்டிய படகு ஆயிர வருட காலம் கூட வேலை செய்யவில்லை. ஆனால் இந்தப் பிரவாஹன் தயார் செய்யும் படகோ, இரண்டாயிரம் வருடங்களுக்கப்பாலும் அரசர்களையும், சேனாதிபதிகளையும், சுகபோகிகளையும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் தேவதைகள்-வேள்வி உருவிலே தயாரிக்கப்பட்ட அந்தப் படகு உறுதியற்றது என்று நான் உணர்ந்தேன். ஆகவே இந்த உறுதியான படகைத் தயாரித்தேன். லோபா! இந்த அகண்டவெளிப் பிர்மம், இதையும்விட மகத்தான மற்றொரு சிருஷ்டியையும் நான் செய்திருக்கிறேன்.”
“அது என்ன?”
“இறந்தவர்கள் மறுபடியும் இந்த உலகத்திற்கே வருவது; புனர் ஜென்மம்.”
“ஓ! இது பெரிய மோசடி.”
“ஆனால் ரொம்பக் காரிய சாத்தியமானது. எந்த விகிதத்தில் அரசர்களிடமும், பிராமணர்களிடமும் வியாபாரிகளிடமும் பொருள்கள் பெருகிக் கொண்டு போகின்றனவோ, அதே விகிதத்தில் சாதாரண ஜனங்கள் ஏழைகளாகிக் கொண்டு வருகின்றனர். இந்தத் தொழிலாளர், விவசாயி, அடிமைகள் முதலியவர்களைத் தூண்டி விடுகிறவர்களும் தோன்றிவிட்டார்கள். ‘நீங்கள்
வீணாக உங்கள் சம்பாத்தியத்தைப் பிறருக்குக் கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுகிறீர்கள். இந்தத் துன்பம், தியாகம், தானம், யாவும் நீங்கள் இறந்த பிறகு உங்களுக்கு மோட்சத்தைக் கொடுக்குமென்று பொய் சொல்லி உங்களை ஏமாற்றுகிறார்கள்’ என்று ஜனங்களுக்கு அவர்கள் கூறத் தொடங்கி விட்டார்கள். இதற்குப் பதிலாகத்தான் இந்த உலகில் காணப்படும் ஏழை பணக்காரன், உயர்வு-தாழ்வு முதலிய வேற்றுமைகள் யாவற்றிக்கும் முன் ஜன்மத்தின்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 131 | 132 | 133 | 134 | 135 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்த, நான், என்று, ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

