முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 351
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 351

| சித்திரச் சோலைகளே - உமை நன்கு திருத்தஇப் பாரினிலே - முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர் ஓஉங்கள் வேரினிலே. நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு நெல்விளை நன்னிலமே - உனக்கு எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே. தாமரை பூத்த தடாகங் களேஉமைத் தந்தஅக் காலத்திலே - எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே. |
நீண்ட பெருஞ்சாலைகளை அமைக்க அந்திப்பொழுது வரையில் உழைத்தார்கள் எத்தனையோ தொழிலாளர்கள்! யந்திரப் பெருந்தொழிற்சாலைகளை அமைக்க அவர்கள் உடல் வருந்திப் பாடுபட்டார்கள்! அந்தப் பாதைகளையும் யந்திரங்களையும் விளித்துப் பாடுகிறார். கடைசியில் உலகைப் பார்த்தே கேட்கிறார்; “உலகமே! நீ சாட்சி அல்லவா! இப்போது செல்வர்கள் அதை உணராமல் வாழ்கிறார்கள். அது நீதியா?” என்று பாடுகிறார்.
| தாரணியே தொழிலாளர் உழைப்புக்குச் சாட்சியும் நீ அன்றோ? - பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ? |
இனிக் காலம் மாறிவிட்டதாம்; முன்போல் உழைப்பாளிகள் செல்வர்களிடம் கெஞ்சிக் கேட்கப்போவதில்லையாம்; பயம் நீங்கி விட்டதாம்.
| கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக் கெஞ்சும் உத்தேசம் இல்லை - சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த வார்த்தைக்கு மோசம் இல்லை. |
"புதிய உலகை அமைப்போம்! பழைய சீர்கெட்ட அமைப்பை அழிப்போம்" என்று எழுச்சியுடன் பாடுகிறார்.
| புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம். |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 349 | 350 | 351 | 352 | 353 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 351 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - பாடுகிறார்

