முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 340
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 340

| சாதி நூறு சொல்லுவாய் போ போ போ தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் கா சொன்று நீட்டினால் வணங்குவாய் போ போ போ. |
குறைகள் நீங்கிப் புதிய சமுதாயத்தை வா வா வா என்று வரவேற்று மகிழ்கிறார்:
| ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா தௌ¤வு பெற்ற மதியினாய் வா வா வா சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா. |
வறுமையும் ஆடம்பரமும் மாறிமாறிக் காணும் காட்சி மாறிப் பொருளாதார சமத்துவம் நிலைத்த நல்ல நிலை வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர் பாரதியார். அந்த ஆசைக்கு அழகான கவிதை வடிவம் கொடுத்து உணர்ச்சியோடு பாடியுள்ளார்:
| மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ - புவியில் வாழ்க்கை இனி உண்டோ - நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ? இனிஒரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம் தனிஒரு வனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓர்இனம் எல்லாரும் இந்தியா மக்கள் எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர். |
'விடுதலை' என்ற பாட்டிலும் இந்தக் கருத்தை வற்புறுத்தியுள்ளார். நாட்டு விடுதலை என்றால், நாட்டுமக்களின் பொருளாதார சமத்துவமாகவும் அதை அவர் காண விரும்பினார் என்பது அந்தப் பாட்டால் தௌ¤வாகிறது.
| ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே. |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 338 | 339 | 340 | 341 | 342 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 340 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - எல்லாரும், மனிதர், உண்டோ, மன்னர், வாழ்க்கை, இந்நாட்டு

