முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 245
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 245

புரட்டுகளும் பொய்களும் நிறைந்த நீதிமன்றத்தில் செய்த தொழில். அந்தத் தொழிலை விட்டு ஓய்வு பெற்றபோது அவர் பெற்ற மகிழ்ச்சியையும் உற்ற விடுதலை உணர்ச்சியையும் காண்போம். நல்ல எதுகைகள் இயைபுகள் நிரம்பிய எளிய இசைப் பாடலாக அமைந்தது இது:
| போதும் போதும் உத்தியோக கனமே - இதில் ஏது சுகம் நமக்கு மனமே.... எந்த நேரமும் ஓயாத வேலை - இல்லை என்ன பெற்றோம் முத்து மாலை? அந்த உத்தியோகமும் ஆலை - அதில் அகப்பட்ட நாம் கரும்பு போல - போதும் போதும்... சுப்பையரோ அபத்த மூட்டை - அந்தச் சுந்தரையர் வழக்கிலே தொள்ளாயிரம் ஓட்டை அப்பையர் கற்பிப்பார் பொய்ச்சீட்டை - அந்த அனந்தையர் கட்டுவார் ஆகாசக் கோட்டை அண்டப் புரட்டன் அந்த வாதி - அகி லாண்டப் புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி சண்டப் பிரசண்டன் நியாயவாதி நாளும் சாஸ்திரப் புளுகன் கட்சிக்காரன் என்னும் கியாதி.... போதும் போதும் ககனப்பூ வந்திமகன் கொய்தனாம் - அதைக் கண்டு குருடன் அம்பால் எய்தானாம் செகமிசை ஊமையனும் வைதானாம் - அதைச் செவிடன் கேட்டு நகை செய்தானாம். |
வழக்குகளில் உள்ள வன்புதுன்புகளை எளிய சொற்களால் எவ்வளவு தௌ¤வாகக் கூறிவிட்டார்! இப்படிப்பட்ட பொல்லாத உலகத்தில் சிக்குண்டிருந்தபோதும் கடமையை மிகச் செம்மையாகச் செய்த நேர்மைக்குப் பெயர்பெற்றவராய் விளங்கினார். தம் தொழிலை ஒழுங்காக, நீதியாகச் செய்ய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார் ஒரு பாட்டில். அதுவும் இசைப்பாட்டு.
| நானே பொதுநீதி தானே செலுத்திட நல்ல வரம் அருள் கோனே வரும் வழக்கர் மனத்தை வன்சொற்களால் கெடாமல் மற்றைக் கீழ் உத்தியோகஸ்தர் வம்புக்கு இடம்கொடாமல் |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 243 | 244 | 245 | 246 | 247 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 245 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - போதும், அந்த

