| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
ஆதம்
|
அன்பு ; ஆதரவு ; கூந்தற்பனை .
|
|
ஆதம்பேதி
|
செப்புநெருஞ்சில் பூண்டு .
|
|
ஆதமிலி
|
ஆதரவற்றவன் , திக்கற்றவன் .
|
|
ஆதர்
|
அறிவில்லாதவர் ; குருடர் .
|
|
ஆதரணை
|
ஆதரவு .
|
|
ஆத்திகம்
|
கடவுள் உண்டென்னும் கொள்கை ; யானைக்கூட்டம் .
|
|
ஆத்திகன்
|
கடவுள் உண்டென்னும் கொள்கை உடையவன் .
|
|
ஆத்திசூடி
|
ஆத்திமாலை சூடிய சிவபெருமான் ; ஔவையார் செய்த நீதிநூல்களுள் ஒன்று .
|
|
ஆத்திசூலை
|
குதிரை நோய்வகை .
|
|
ஆத்திட்டி
|
நீர்முள்ளி .
|
|
ஆத்தியந்தம்
|
காண்க : ஆதியந்தம் .
|
|
ஆத்தியந்திகபிரளயம்
|
பிரளயத்தால் உலகம் முடியும் காலம் .
|
|
ஆத்தியாத்துமிகம்
|
தன்னைப்பற்றி வரும் துன்பம் .
|
|
ஆத்தியான்மிகம்
|
தன்னைப்பற்றி வரும் துன்பம் .
|
|
ஆத்தியை
|
துர்க்கை .
|
|
ஆத்திரக்காரன்
|
அவசரப்படுபவன் .
|
|
ஆத்திரகம்
|
இஞ்சி .
|
|
ஆத்திரம்
|
பரபரப்பு ; சினம் .
|
|
ஆத்திரேயன்
|
சந்திரன் ; அத்திரி குலத்தில் பிறந்தவன் .
|
|
ஆத்திரேயி
|
பூப்புள்ளவள் ; ஓர் ஆறு .
|
|
ஆத்திரை
|
காண்க : யாத்திரை ; சுற்றுலா .
|
|
ஆத்திரையன்
|
அத்திரி குலத்தில் பிறந்தவன் .
|
|
ஆத்திறைப்பாட்டம்
|
கால்நடை வரி .
|
|
ஆத்தின்னி
|
பாணன் .
|
|
ஆத்துமகத்தியை
|
தற்கொலை .
|
|
ஆத்துமகுப்தா
|
காண்க : பூனைக்காலி .
|
|
ஆத்துமசக்தி
|
ஆன்மாவுக்குரிய ஆற்றல் .
|
|
ஆத்துமசன்
|
மகன் .
|
|
ஆத்துமசிநேகிதன்
|
உயிர்த்தோழன் .
|
|
ஆத்துமசுத்தி
|
ஆத்துமாவின் தூய்மை ; காண்க : ஆன்மசுத்தி .
|
|
ஆத்துமஞானம்
|
தன்னையறியும் அறிவு .
|
|
ஆத்துமஞானி
|
தன்னையறிந்தவன் .
|
|
ஆத்துமதரிசனம்
|
ஆன்மாவின் நிலையை அறிகை ; காண்க : ஆன்மதரிசனம் .
|
|
ஆத்துமநாசம்
|
தன்னைக் கெடுத்துக்கொள்ளுகை .
|
|
ஆத்துமநிவேதனம்
|
உயிர்ப்பலி ; தன்னை அர்ப்பணஞ் செய்கை .
|
|
ஆத்துமபந்து
|
ஆன்மாவின் உறுதிச் சுற்றம் ; அத்தை மகன் , அம்மான் மகன் முதலிய உறவுகள் .
|
|
ஆத்துமபுத்தி
|
தன் அறிவு .
|
|
ஆத்துமபோதம்
|
காண்க : ஆத்துமஞானம் .
|
|
ஆத்துமம்
|
உயிர் ; உயிரி ; அரத்தை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
|
|
ஆத்துமராமன்
|
ஆத்ம திருப்தியுடையவன் .
|
|
ஆத்துமரூபம்
|
ஆன்மலாபம் ; காண்க : ஆன்மரூபம் .
|
|
ஆத்துமலாபம்
|
உயிர் உய்கை ; சொந்த இலாபம் ; தன்னையறிகை .
|
|
ஆத்துமவதம்
|
காண்க : ஆத்துமகத்தியை .
|
|
ஆத்துமவதிகாசனம்
|
நல்லிருக்கை என்னும் யோகாசனம் .
|
|
ஆத்துமவிசாரம்
|
ஆத்துமாவை அறியும் சிந்தனை .
|
|
ஆத்துமவிரக்கங்காட்டுதல்
|
மனப்பூர்த்தியாக அன்பும் அருளும் காட்டுதல் .
|
|
ஆத்துமா
|
உயிர் ; சீவான்மா ; உயிரி .
|
|
ஆத்துமாபகாரம்
|
ஆத்துமாவின் இயல்பினை வேறாக நினைக்கை ; பரதந்திரனான சீவனைச் சுதந்திரனாக நினைக்கை .
|
|
ஆத்துமார்த்தம்
|
ஆத்தும இலாபத்திற்குரியது ; தன்பொருட்டு ; மிக்க நட்பு .
|
|
ஆத்துமானந்தம்
|
தனக்குள் மகிழ்கை ; தற்போதத்தால் நிகழும் மகிழ்ச்சி .
|
|
ஆத்துமானுபவம்
|
தன்னைத் தான் அனுபவிக்கை .
|
|
ஆத்துமிகம்
|
காண்க : ஆத்தியாத்துமிகம் ; ஆன்மா சம்பந்தமுடையது .
|
|
ஆத்தை
|
தாய் ; வியப்பு அச்ச இரக்கங்களைக் குறிக்கும் சொல் .
|
|
ஆத்மா
|
காண்க : ஆத்துமா .
|
|
ஆதங்கம்
|
நோய் ; அச்சம் ; துன்பம் ; முரசின் ஓசை .
|
|
ஆதண்
|
நோய் ; வருத்தம் .
|
|
ஆதண்டை
|
காண்க : ஆதொண்டை .
|
|
ஆததாயிகள்
|
கொடியோர் ; அவராவார் ; தீக்கொளுவுவார் , நஞ்சிடுவார் , கருவியிற் கொல்வார் , கள்வர் , ஆறலைப்பார் , சூறைகொள்வார் , பிறனில் விழைவார் .
|
|
ஆதபத்திரம்
|
குடை ; வெண்குடை .
|
|
ஆதபம்
|
வெயில் ; பிரகிருதிகளுள் ஒன்று .
|
|
ஆதபயோகம்
|
வெயிற்கடுமை தாங்கும் யோகநிலை .
|
|
ஆதபன்
|
சூரியன் .
|
|
ஆத்தாடி
|
வியப்புக் குறிப்பு ; இளைப்பாறற் குறிப்பு .
|
|
ஆத்தாரமூத்தாள்
|
பூனைக்காலிக்கொடி .
|
|
ஆத்தா
|
தாய் ; பார்வதி .
|
|
ஆத்தாள்
|
தாய் ; பார்வதி .
|
|
ஆத்தானம்
|
அரசவை ; கோபுரவாயில் .
|
|
ஆத்தி
|
மரவகை ; திருவாத்தி ; செல்வம் ; அடைகை ; சம்பந்தம் ; இலாபம் ; பெண்பால் விகுதி ; அச்ச வியப்புக்குறிப்பு .
|