| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
பாலிசம்
|
அறியாமை .
|
|
பாலிசன்
|
மூடன் .
|
|
பாலித்தல்
|
காத்தல் ; கொடுத்தல் ; விரித்தல் ; அருளுதல் .
|
|
பாலியம்
|
குழந்தைப்பருவம் ; இளம்பருவம் .
|
|
பாலியன்
|
ஆண்குழந்தை ; இளைஞன் .
|
|
பாலிறங்குதல்
|
பால் தொண்டைவழிச் செல்லுகை ; அம்மைப்பால் வற்றுகை .
|
|
பாலிறுவி
|
முருங்கைமரம் .
|
|
பாலுகம்
|
கருப்பூரம் .
|
|
பாலுண்ணி
|
உடம்பில் உண்டாகும் ஒருவகைச் சதைவளர்ச்சி .
|
|
பாலேடு
|
காய்ச்சிய பாலின்மேற் படியும் ஆடை .
|
|
பாலேயம்
|
கழுதை ; சிறுமுள்ளங்கி ; மென்மை .
|
|
பாலை
|
முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம் ; பாலைத்தன்மை ; புறங்காடு ; பாலைநிலத்து உரிப்பொருளாகிய பிரிவு ; காண்க : இருள்மரம் ; முள்மகிழ் ; மரவகை ; பெரும்பண்வகை ; ஒரு யாழ்வகை ; பாலையாழிற் பிறக்கும் எழுவகைப் பண்வகை ; புனர்பூசம் ; மிருகசீரிடநாள் ; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி ; பெண் ; குழந்தை ; பதினாறு அகவைக் குட்பட்ட பெண் ; சிவசத்தி ; மீன்வகை .
|
|
பாலைக்கிழத்தி
|
பாலைக்கு உரியவளான கொற்றவை .
|
|
பாலைத்திறம்
|
காண்க : பாலையாழ்த்திறம் .
|
|
பாலைநிலப்பூ
|
கள்ளி ; பாலை ; பூளை .
|
|
பாலைநிலம்
|
முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம் .
|
|
பாலைநிலவிலங்கு
|
செந்நாய் .
|
|
பாலைப்பண்
|
பெரும்பண்வகை .
|
|
பாலைமணி
|
அக்குமணி .
|
|
பாலையாழ்
|
பெரும்பண்வகை .
|
|
பாலையாழ்த்திறம்
|
பாலைப்பண்ணைச் சார்ந்த சிறு பண்கள் .
|
|
பாலைவனம்
|
பரந்த மணல்வெளி .
|
|
பாலொடுவை
|
காண்க : கொடிப்பாலை .
|
|
பாவகம்
|
அக்கினி ; சேங்கொட்டை ; கொலை ; கருத்து ; தியானம் ; இயல்பு ; உருவம் ; காதலை வெளியிடும் குறிப்பு ; பாசாங்கு .
|
|
பாவகன்
|
தூய்மையானவன் ; தூய்மைசெய்வோன் ; அக்கினி ; நஞ்சுதீர்க்கும் மருத்துவன் .
|
|
பாவகாரி
|
பாவம் செய்வோன் .
|
|
பாவகி
|
தீயில் பிறந்தோனாகிய முருகன் .
|
|
பாவச்சுமை
|
நுகர்ந்து கழித்தற்குரிய பாவத்திரள் .
|
|
பாவசுத்தி
|
பாவம் நீங்குகை ; மனத்தூய்மை .
|
|
பாவசேடம்
|
நுகர்ந்து கழிக்கவேண்டிய வினைப்பயன் ; தூயவரிடத்து எஞ்சியிருக்கும் தீவினை .
|
|
பாவட்டை
|
செடிவகை ; சிறு மரவகை ; ஆடாதோடை .
|
|
பாவடி
|
அங்கவடி ; பாட்டிலடங்கிய அடி .
|
|
பாவண்ணம்
|
நூற்பாச் சந்தம் .
|
|
பாவநாசம்
|
பாவநீக்குகை ; பாவம் போக்கும் இடம் அல்லது தீர்த்தம் .
|
|
பாவநிவாரணம்
|
பாவம் நீக்குதல் .
|
|
பாவபாணம்
|
மனோபாவங்களாகிய நல்வினை தீவினைகள் .
|
|
பாவம்
|
தீவினைப் பயன் ; தீச்செயல் ; நரகம் ; இரக்கக்குறிப்பு ; உளதாந்தன்மை ; முறைமை ; தியானம் ; எண்ணம் ; அபிநயம் ; விளையாட்டு ; நிலைதடுமாற்றம் ; ஆத்துமாவிடம் உண்டாகும் பரிணாம விசேடம் ; இயக்கம் .
|
|
பாவம்பழி
|
கொடுந்தீச்செயல் .
|
|
பாவமன்னிப்பு
|
பாவத்தைப் பொறுக்கை .
|
|
பாவமூர்த்தி
|
வேடன் .
|
|
பாவர்
|
பாவிகள் .
|
|
பாவரசம்
|
கருத்துநயம் ; அபிநயச்சுவை .
|
|
பாவல்
|
மிதியடி ; மரக்கல வுறுப்புகளுள் ஒன்று ; பாகற்கொடி .
|
|
பாவலர்
|
கவிஞர் ; புலவர் .
|
|
பாவறை
|
கூடாரம் .
|
|
பாவனத்துவனி
|
சங்கு .
|
|
பாவனம்
|
துப்புரவுசெய்கை ; தூய்மை ; மருந்து குழைக்கை .
|
|
பாவனன்
|
துப்புரவாளன் ; அனுமன் ; வீமன் .
|
|
பாவனாதீதம்
|
எண்ணுதற்கு அரியது .
|
|
பாவனி
|
கங்கை ; பசு ; துளசி ; மேளகர்த்தாக்களுள் ஒன்று .
|
|
பாவனை
|
நினைப்பு ; தெளிகை ; ஐம்புலனுள் ஒன்று ; தியானம் ; தியானிக்கப்படுவது ; ஒப்பு ; அடையாளம் ; போலி ; நடத்தை ; நடிப்பு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
|
|
பாவனைகாட்டுதல்
|
ஒன்றன் செயல்போலச் செய்தல் ; அபிநயித்தல் ; வேடங்கொள்ளுதல் ; வரைந்துகாட்டுதல் .
|
|
பாவாடம்
|
நாக்கறுத்துக்கொள்ளும் வேண்டுதல் .
|
|
பாவாடை
|
பெண்களின் உடைவகை ; பெரியோர் முதலியவர் நடந்துசெல்லத் தரைமீது விரிக்குஞ் சீலை ; கடவுள் முதலியோர்க்கு முன் ஆடையிற் படைக்கும் அன்னம் ; மேலெழ வீசும் ஒருவகை விருதுச்சீலை ; மேசைவிரிப்பு ; வேலைநாள் .
|
|
பாவாணர்
|
பாவலர் .
|
|
பாவாத்துமா
|
தீச்செயல் புரிவோன் .
|
|
பாவாபாவம்
|
உண்மையும் இன்மையும் .
|
|
பாவார்த்தம்
|
கருத்துரை ; சொற்பொருள் .
|
|
பாவாற்றி
|
நெய்வார் குச்சு .
|