| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
பாடம்
|
படிக்கும் நூற்பகுதி ; படிப்பு ; மூலபாடம் ; வேதபாடம் ; பார்க்காமல் ஒப்பிக்கும்படி கைவந்தது ; தெரு ; இடையர் வீதி ; உடன்பாடு ; கடுமை ; மிகுதி ; பாரம் வைத்து அழுத்துகை ; பதப்படுத்துகை ; மணி முதலியவற்றின் ஒளி ; முடிமாலை ; வெற்றிலை ; சொல் .
|
|
பாடம்பண்ணுதல்
|
மனப்பாடமாக்கல் ; ஓலை முதலியவற்றை அடுக்கிவைத்தல் ; தோலைப்பதனிடுதல் ; புகையிலை முதலியவற்றைப் பக்குவப்படுத்துதல் .
|
|
பாடம்போற்றுதல்
|
படித்த பாடத்தைச் சிந்தித்தல் .
|
|
பாடல்
|
பாடுகை ; இசைப்பா ; இசை ; பாட்டு ; புகழ் ; படிக்கை ; பாகல் ; காண்க : பாடலிபுரம் .
|
|
பாடல்பெற்றதலம்
|
நாயன்மார்களாலேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற ஊர் .
|
|
பாடலம்
|
சிவப்பு ; வெண்சிவப்பு ; குங்குமம் ; குதிரை ; சேரன் குதிரை ; பாதிரிமரம் ; மழைக் காலத்தில் விளையும் நெல் ; சூளுரை .
|
|
பாடலி
|
பாதிரிமரம் ; பாடலிபுரம் என்னும் நகரம் ; கள் ; ஒரு நெல்வகை ; ஒரு கொடிவகை .
|
|
பாடலிபுரம்
|
கங்கை சோணையாறுகள் கலக்குமிடத்தில் இருந்த மகத நாட்டின் தலைநகர் .
|
|
பாடலை
|
ஒரு மரவகை ; துர்க்கை ; பாடலிபுரம் .
|
|
பாடவம்
|
வடவைத்தீ ; வல்லமை ; களிப்பு ; நலம் ; மகளிர் காலணி .
|
|
பாடவள்
|
பாடுபவள் ; மிதுனராசி .
|
|
பாடவன்
|
பாடுபவன் ; மிதுனராசி .
|
|
பாடவை
|
மிதுனராசி .
|
|
பாடற்பயன்
|
இன்பம் , தெளிவு , நிறைவு , ஒளி , வன்சொல் , இறுதி , மந்தம் , உச்சம் என்னும் எண்வகையான இசைப்பயன் .
|
|
பாடன்மகடூஉ
|
விறலி .
|
|
பாடன்மகள்
|
விறலி .
|
|
பாடனம்
|
பேசுகை ; போதிக்கை ; பாடுகை ; பிளக்கை .
|
|
பாடனுபவித்தல்
|
வருந்துதல் .
|
|
பாடாகுதல்
|
கெடுதியடைதல் ; அழுதல் .
|
|
பாடாண்
|
பாட்டுடைத் தலைவனது புகழ் , வலி , கொடை , அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை .
|
|
பாடாண்திணை
|
பாட்டுடைத் தலைவனது புகழ் , வலி , கொடை , அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை .
|
|
பாடாணம்
|
கல் ; மருந்துச் சரக்கு ; எண்வகை இன்பங்களுள் பாறைநிலமும் அவற்றில் உண்டாகும் பொருள்களும் .
|
|
பாடாந்தரம்
|
பாடவேறுபாடு ; வேற்றுமொழி .
|
|
பாடாய்முடிதல்
|
கெடுதியாய் முடிதல் .
|
|
பாடாயடித்தல்
|
கடுமையாகப் புடைத்தல் .
|
|
பாடாயழிதல்
|
மிகக் கேடுறுதல் .
|
|
பாடாவதி
|
துன்பம் ; பயனற்றது .
|
|
பாடாவறுதி
|
மிகுபாடு ; பேரிழப்பு ; அடிபட்டுப் படுக்கையாகக் கிடக்கை .
|
|
பாடாற்றுதல்
|
துன்பம் பொறுத்துக்கொள்ளுதல் .
|
|
பாடி
|
நகரம் ; சேரி ; முல்லைநிலத்தூர் ; காண்க : பாடிவீடு ; கவசம் ; படை ; உளவாளி ; பாடுபவர் ; பாடிப் பிச்சையெடுப்போன் ; ஒரு பண்வகை ; ஓர் ஊர் .
|
|
பாடிக்கதை
|
வீண்பேச்சு .
|
|
பாடிக்கொடுத்தல்
|
பிறனுக்காகப் பாடலியற்றித் தருதல் ; பாடல் இயற்றுதல் .
|
|
பாடிகாப்பார்
|
ஊர்காவலர் .
|
|
பாடிகாவல்
|
ஊர்காவல் ; தலையாரி ஊர் காவற்கு வாங்கும் வரி ; பாதுகாவல் ; வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யும் ஒறுப்பு .
|
|
பாடிசொல்லுதல்
|
உளவை வெளிப்படுத்துதல் .
|
|
பாடிதம்
|
உச்சரிக்கப்படுவது .
|
|
பாடிமாற்றம்
|
வழக்குச் சொற்கள் .
|
|
பாடிமிழ்தல்
|
ஒலித்தல் .
|
|
பாடியகாரர்
|
பேருரைகாரர் ; பதஞ்சலி ; பிரமசூத்திரத்திற்குப் பேருரை இயற்றிய இராமானுசாசாரியர் .
|
|
பாடியம்
|
பேருரை .
|
|
பாடிரம்
|
ஒரு கிழங்குவகை ; சந்தனம் ; துத்தநாகம் ; முகில் ; மூங்கிலரிசி ; கீல்வாதம் ; வயல் .
|
|
பாடிலம்
|
நாடு .
|
|
பாடிவீடு
|
பாசறை .
|
|
பாடிவீரர்
|
படைவீரர் .
|
|
பாடினி
|
பாணர்சாதிப் பெண் .
|
|
பாடீரம்
|
சந்தனம் ; முகில் ; கீல்வாதம் ; மூங்கிலரிசி ; கிழங்குவகை ; துத்தநாகம் ; வயல் .
|
|
பாடு
|
உண்டாகை ; நிகழ்ச்சி ; அனுபவம் ; முறைமை ; நிலைமை ; செவ்வி ; கடமை ; கூறு ; பயன் ; உலகவொழுக்கம் ; குணம் ; பெருமை ; அகலம் ; ஓசை ; உடல் ; உழைப்பு ; தொழில் ; வருத்தம் ; படுக்கைநிலை ; விழுகை ; தூக்கம் ; சாவு ; கேடு ; குறைவு ; பூசுகை ; மறைவு ; நீசராசி ; இடம் ; பக்கம் ; அருகு ; ஏழாம் வேற்றுமையுருபு .
|
|
பாடுகாட்டுதல்
|
சாய்ந்துவிழுதல் .
|
|
பாடுகாயம்
|
படுகாயம் .
|
|
பாடுகிடத்தல்
|
வரங்கிடத்தல் .
|
|
பாடுதல்
|
பண் இசைத்தல் ; வண்டு முதலியன இசைத்தல் ; பாட்டியற்றல் ; பாட்டு ஒப்பித்தல் ; பாராட்டுதல் ; துதித்தல் ; கூறுதல் ; வைதல் .
|
|
பாடுதாங்குதல்
|
துணைநிற்றல் .
|
|
பாடுதுறை
|
புலவர் பாடுதற்குரிய போர்த்துறை ; தத்துவராயர் செய்த ஒரு நூல் .
|
|
பாடுநர்
|
புலவர் ; இசைபாடுவோர் .
|