| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
நூனம்
|
உறுதி ; குறைபாடு ; தோல்வித்தான வகை .
|
|
நூனயம்
|
நூலின் அழகு ; கல்விநயம் .
|
|
நூனாதிக்கம்
|
குறைசொல்லும் குணம் .
|
|
நூனாதிகம்
|
குறைசொல்லும் குணம் .
|
|
நூனாயம்
|
சூது .
|
|
நூனாழி
|
நெசவுநாடா .
|
|
நூனாழிகை
|
நெசவுநாடா .
|
|
நூனுட்பம்
|
நூலினது நுண்மை ; நூற்கருத்து .
|
|
நெ
|
ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+ எ) .
|
|
நெக்கல்
|
தளர்ந்தது ; அறக்கனிந்தது ; அழுகல் .
|
|
நெக்கு
|
தள்ளு ; நெகிழ்ச்சி ; உடைபடல் .
|
|
நெக்குடைதல்
|
காண்க : நெக்குருகுதல் .
|
|
நெக்குதல்
|
கிளப்புதல் ; துரத்தியடித்தல் ; கூட்டம் நெருக்குதல் ; கோலிக்கொட்டுதல் .
|
|
நெக்குருகுதல்
|
இளகுதல் .
|
|
நெக்குரோதம்
|
ஆலமரம் .
|
|
நெக்குவிடுதல்
|
பிளவுபடுதல் ; பொருத்துவாய் விடுதல் .
|
|
நெகல்
|
நெகிழ்தல் , தளர்தல் ; கனிதல் .
|
|
நெகிடி
|
நெருப்புக்குவை .
|
|
நெகிழ்ச்சி
|
காதில்வரும் புண்கட்டி , எழுச்சி ; தளர்ச்சி ; மனமிரங்குகை .
|
|
நெகிழ்த்தல்
|
தளர்த்துதல் ; மலர்த்துதல் ; பிரித்தல் ; நசுக்குதல் ; எய்தல் .
|
|
நெகிழ்தல்
|
குழைதல் ; மெலிதல் ; பொசிதல் ; பொடியாதல் ; மலர்தல் ; இளகல் ; கட்டுத் தளர்தல் ; மனமிரங்குதல் ; நிலைகுலைதல் ; நழுவல் ; விட்டுநீங்குதல் .
|
|
நெகிழ்ப்பு
|
குழைவு .
|
|
நெகிழ்வு
|
பிரிவு ; தளர்வு ; மலர்தல் .
|
|
நெகிழம்
|
பாதச்சிலம்பு .
|
|
நெகிழி
|
பாதச்சிலம்பு ; கொள்ளிக்கட்டை .
|
|
நெகுதல்
|
கரைதல் ; உருகுதல் ; மனமிரங்குதல் ; வருந்துதல் ; கழலுதல் ; கெடுதல் ; பொடியாதல் .
|
|
நெச்சி
|
காண்க : கடுக்காய் .
|
|
நெசவு
|
நெசவுத்தொழில் ; நெசவின் இழையமைப்பு .
|
|
நெஞ்சகம்
|
மனம் .
|
|
நெஞ்சடித்தல்
|
அச்சம் முதலியவற்றால் இதயம் படபடக்கை .
|
|
நெஞ்சடைத்தல்
|
மார்படைப்பு .
|
|
நெஞ்சடைப்பான்
|
மாட்டுநோய்வகை .
|
|
நெஞ்சடைப்பு
|
மார்படைப்பு ; பொதி பறியாமற் செய்யும் பயிர்நோய் .
|
|
நெஞ்சம்
|
காண்க : நெஞ்சு ; அன்பு .
|
|
நெஞ்சழிதல்
|
மதிமயங்கல் ; மனம்குலைதல் ; தன்னடக்கங் கெடுதல் .
|
|
நெஞ்சறிசுட்டு
|
சொல்லாற் குறியாது மனத்திலுள்ள பொருளைக் குறிக்கவருஞ் சுட்டு .
|
|
நெஞ்சறிவுறுத்தல்
|
மனத்துக்கறிவித்தல் .
|
|
நெஞ்சன்
|
துணிவுடையோன் ; செருக்குள்ளவன் .
|
|
நெஞ்சாங்கட்டை
|
மார்பெலும்பு , நெஞ்செலும்பு ; பிணஞ்சுடுவதற்கு நெஞ்சுப்பக்கமாக வைக்குங் கட்டை .
|
|
நெஞ்சாங்குலை
|
ஈரற்குலை ; மார்பு ; இதயம் ; மார்புக்குழி .
|
|
நெஞ்சாங்குழி
|
தொண்டைக்குழி .
|
|
நெஞ்சார
|
மனமார .
|
|
நெஞ்சாறல்
|
துன்பம் .
|
|
நெஞ்சிற்கல்
|
கவலை ; துன்பம் .
|
|
நெஞ்சிற்பாரம்
|
தாங்கமுடியாத பொறுப்பு ; துன்பம் .
|
|
நெஞ்சு
|
மனம் ; இதயம் ; மார்பு ; நடு ; திண்ணக்கம் ; தொண்டை ; துணிவு .
|
|
நெஞ்சுக்குத்து
|
மார்புவலி .
|
|
நெஞ்சுகரித்தல்
|
தொண்டை கரகரக்கை ; பொறாமைகொள்ளுகை .
|
|
நெஞ்சுகலத்தல்
|
ஒருவனோடு கலந்தாய்தல் ; மனமொன்றுபடுதல் .
|
|
நெஞ்சுகாய்தல்
|
நெஞ்சு வறளுகை ; மனஞ் சோர்கை .
|
|
நெஞ்சுச்சளி
|
நெஞ்சிற் கபமுண்டாக்கும் நோய்வகை .
|
|
நெஞ்சுத்தடுமன்
|
நெஞ்சிற் கபமுண்டாக்கும் நோய்வகை .
|
|
நெஞ்சுத்துடிப்பு
|
இதயமடிக்கை .
|
|
நெஞ்சுத்துணிகரம்
|
மனவுறுதி .
|
|
நெஞ்சுத்துணிவு
|
மனவுறுதி .
|
|
நெஞ்சுதுடித்தல்
|
இதயந்துடிக்கை ; மனமிரங்குதல் .
|
|
நெஞ்சுப்புண்
|
தொண்டைப்புண் .
|
|
நெஞ்சுபதறுதல்
|
மனநடுங்குதல் .
|
|
நெஞ்சுபுண்ணாதல்
|
மனநோதல் ; தொண்டை புண்ணாதல் .
|
|
நெஞ்சுரப்பு
|
மனக்கடுமை .
|
|
நெஞ்சுரம்
|
மனக்கடுமை ; மனவூக்கம் ; தடித்தனம் .
|
|
நெஞ்சுருகுதல்
|
மனமிளகுதல் .
|
|
நெஞ்சுவலி
|
மார்புவலி .
|
|
நெஞ்சுவிடுதூது
|
ஒரு நூல் ; மனத்தைக் காதலர்பால் தூதுவிடுவதாக அதனை முன்னிலைப்படுத்திக் கூறும் சிற்றிலக்கியவகை .
|
|
நெஞ்சுள்
|
மனம் .
|