| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
நயங்காட்டுதல்
|
இன்சொல் முதலியவற்றால் வயப்படுத்துதல் .
|
|
நயச்சொல்
|
இனியசொல் ; முகமன்வார்த்தை ; இச்சகம் ; அசதியாடல் .
|
|
நயத்தகுதல்
|
விரும்பல் ; நன்மையாதல் .
|
|
நயத்தல்
|
விரும்புதல் ; பாராட்டுதல் ; சிறப்பித்தல் ; பிரியப்படுத்தல் ; தட்டிக்கொடுத்தல் ; கெஞ்சுதல் ; அன்புசெய்தல் ; பின்செல்லுதல் ; மகிழ்தல் ; இன்பமுறல் ; இனிமையுறுதல் ; இணங்கிப்போதல் ; பயன்படுதல் ; மலிதல் ; மேம்படுதல் ; ஈரம் ஏறுதல் ; நட்பாடல் ; தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை .
|
|
நயத்தவிலை
|
மலிந்த விலை .
|
|
நயந்துசொல்லுதல்
|
பயன்படச் சொல்லுதல் ; வேண்டிக்கொள்ளுதல் .
|
|
நயத்தோர்
|
நண்பர் ; கணவர் .
|
|
நயநயவார்த்தை
|
உறுதியில்லாச் சொல் .
|
|
நயநிலைப்படலம்
|
நாடகம் .
|
|
நயப்பாடு
|
பயன் ; மேம்பாடு .
|
|
நயப்பித்தல்
|
விரும்பும்படி செய்தல் ; மகிழ்வித்தல் ; உடன்படுதல் ; பயன்படுத்தல் ; மலிவாக்குதல் .
|
|
நயப்பு
|
அன்பு ; விருப்பம் ; இன்பம் ; தலைவி எழிலைப் புகழ்கை ; மலிவு ; இலாபம் ; மேம்பாடு ; நன்மை .
|
|
நயப்புணர்வு
|
கண்ணோட்டம் .
|
|
நயபயம்
|
அன்பும் கண்டிப்பும் .
|
|
நயம்
|
இன்பம் ; அருள் ; மகிழ்ச்சி ; விருப்பம் ; தன்மை ; மேன்மை ; போற்றுகை ; அன்பு ; பக்தி ; நற்பயன் ; மலிவு ; மிகுதி ; பயன் ; நுண்மை ; இனிமை ; நீதி ; கொடையாளி ; கனமும் தேசிகமும் கலந்து பாடும்வகை .
|
|
நயம்பண்ணுதல்
|
உதவிசெய்தல் .
|
|
நயம்பாடு
|
காண்க : நயப்பாடு ; அழகுபடுகை .
|
|
நயம்பாடுதல்
|
இனிமையாய்ப் பாடுதல் ; முகமன் கூறுதல் .
|
|
நயம்பேசுதல்
|
மகிழப் பேசுதல் ; இனிமையாய் ஒலித்தல் .
|
|
நயமாலி
|
மனோசிலை என்னும் மருந்து .
|
|
நயமொழி
|
இன்மொழி ; நலம்பயக்கும் சொல் .
|
|
நயர்
|
அறிவுடையார் .
|
|
நயவசனம்
|
இனிய சொல் ; பணிவான சொல் .
|
|
நயவஞ்சகம்
|
இனிமைகாட்டி ஏமாற்றுகை .
|
|
நயவர்
|
காதலர் ; நண்பர் ; நீதியுடையோர் .
|
|
நயவருதல்
|
விரும்புதல் ; நன்மையுண்டாதல் .
|
|
நயவன்
|
சுவைஞன் .
|
|
நயவார்
|
பகைவர் .
|
|
நயவார்த்தை
|
காண்க : நயவசனம் .
|
|
நயவான்
|
நயப்புள்ளோன் ; ஆதாயக்காரன் ; உபகாரி ; விரும்பாதவன் .
|
|
நயவுரை
|
இனிய சொல் .
|
|
நயன்
|
காண்க : நயம் ; நயவான் ; பசை ; உறவு ; கொடையாளி ; விரகு ; உபாயம் , நீதி .
|
|
நயன்மை
|
நீதி .
|
|
நயனகாசம்
|
கண்மேற் படர்சதை .
|
|
நயனத்தானம்
|
துயிலணை .
|
|
நயனதீட்சை
|
அருட்பார்வையால் சீடனுக்கு ஞானம் உண்டாக்குதல் .
|
|
நயனப்பார்வை
|
கண்ணோக்கு ; காதல் நோக்கம் .
|
|
நயனம்
|
கண் .
|
|
நயனமாலை
|
உருத்திராக்கமாலை .
|
|
நயனமோக்கம்
|
சிற்பிகள் சிலை முதலியவற்றிற்குக் கண்ணைத் திறந்துவிடுகை .
|
|
நயனமோட்சம்
|
சிற்பிகள் சிலை முதலியவற்றிற்குக் கண்ணைத்திறந்துவிடுகை .
|
|
நயனரோகம்
|
கண்ணோய் .
|
|
நயனவாரி
|
கண்ணீர் .
|
|
நயனை
|
கண்மணி .
|
|
நயனோற்சவம்
|
கண்காட்சி ; காட்சிக்கு விருந்தான அழகுமிக்க பொருள் ; விளக்கு .
|
|
நயாசலன்
|
நீதிநெறி வழுவாதவன் .
|
|
நயிச்சியஞ்செய்தல்
|
தன்வயப்படுத்துதல் .
|
|
நயிட்டிகப்பிரமசாரி
|
வாழ்நாள் முழுதும் பிரமசாரியாய்க் கழிப்போன் ; மாணவன் .
|
|
நயிட்டிகர்
|
நிட்டை தவறாதோர் .
|
|
நயிந்தை
|
தலைவன் ; ஒரு பட்டப்பெயர் .
|
|
நயினார்
|
ஆண்டவன் ; தலைவன் ; காண்க : ஐயனார் ; சித்திரகுப்தன் ; சமணர்க்குரிய பட்டப்பெயர் .
|
|
நர்த்தகன்
|
கூத்தாடுவோன் .
|
|
நர்த்தகி
|
கூத்தாடுபவள் .
|
|
நர்த்தனம்
|
கூத்து .
|
|
நரகபாதாளம்
|
ஆழ்நரகம் .
|
|
நரகம்
|
உயிர்கள் தீவினையின் பயனை நுகரும் இடம் , பாதாள உலகம் .
|
|
நரகர்
|
நரகத்தில் வாழ்பவர் .
|
|
நரகரி
|
நரசிம்மமூர்த்தியாகிய திருமால் .
|
|
நரகல்
|
மலம் ; தூய்மையின்மை .
|
|
நரகலித்தல்
|
அருவருத்தல் ; அழுக்குடைத்தாதல் .
|
|
நரகவாய்
|
நிரயவாய் நரகம் .
|
|
நரகவேதனை
|
நரகத்தில் நுகரும் துன்பம் .
|
|
நரகன்
|
நரகத்திலுள்ளோன் ; மாபாவி ; கண்ணபிரனால் கொல்லப்பட்ட ஓர் அசுரன் .
|
|
நரகாரி
|
நரகாசுரனைக் கொன்றவனான திருமால் .
|
|
நரகாந்தகன்
|
நரகாசுரனைக் கொன்றவனான திருமால் .
|
|
நரகாலி
|
கால்நடைகளுக்கு வரும் ஒரு நோய் வகை .
|
|
நரகி
|
நரகலோகத்துள்ளவள் .
|