| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
அறுபகை
|
ஆறுவகை உட்பகை ; அவை : காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் .
|
|
அறுபடுதல்
|
அறுக்கப்படுதல் .
|
|
அறுபத்துநாலுகலை
|
அறுபத்து நான்கு வகையான பயிற்சியுடைமை .
|
|
அறுபத்துமூவர்
|
பெரியபுராணத்தில் கூறப்பட்ட தனியடியார் .
|
|
அறுபத்தை
|
கையாந்தகரை .
|
|
அறுபதம்
|
வண்டு , கையாந்தகரைப் பூண்டு .
|
|
அறுபதாங்கலியாணம்
|
அறுபதாம் ஆண்டு நிறைவுவிழா , மணிவிழா .
|
|
அறுபதாங்கேழ்வரகு
|
அறுபது நாளில் விளையும் கேழ்வரகுவகை .
|
|
அறுபதாங்கொட்டை
|
பேராமணக்கு .
|
|
அறுபான்
|
அறுபது .
|
|
அறுபொருள்
|
பரம்பொருள் ; ஐயமற்ற பொருள் .
|
|
அறுபொழுது
|
ஒரு நாளில் ஆறு பகுப்பான காலம் ; அவை : மாலை , யாமம் , வைகறை , விடியல் , நண்பகல் , எற்பாடு .
|
|
அறும்பன்
|
தீம்பு செய்வோன் .
|
|
அறும்பு
|
பஞ்சம் ; குறும்புத்தனம் ; தீம்பு .
|
|
அறுமணை
|
அரிவாள்மணை , அழகற்றவள் , சீர்கேடி .
|
|
அறுமான்
|
புழுவகை .
|
|
அறுமீன்
|
ஆறுமீன் தொகுதியாகிய கார்த்திகை .
|
|
அறுமீன்காதலன்
|
முருகக்கடவுள் .
|
|
அறுமுகன்
|
ஆறுமுகங்களை உடையவன் ,முருகக் கடவுள் .
|
|
அறுமுறி
|
உடன்படிக்கைப் பத்திரம் .
|
|
அறுமுறைவாழ்த்து
|
முனிவர் , பார்ப்பார் , ஆனிரை , மழை , முடியுடைவேந்தர் , உலகு என்னும் ஆறனையும்பற்றிக் கூறும் வாழ்த்து .
|
|
அறுமை
|
நிலையின்மை ; ஆறு .
|
|
அறுவகைச் சக்கரவர்த்திகள்
|
அரிச்சந்திரன் , நளன் , முசுகுந்தன் , புரூரவன் , சகரன் , கார்த்தவீரியன் .
|
|
அறுவகைத் தானை
|
வேற்றானை , வாட்டானை , விற்றானை , தேர்த்தானை , பரித்தானை , களிற்றுத்தானை .
|
|
அறுவகைப் படை
|
மூலப்படை , கூலிப்படை , நாட்டுப்படை , காட்டுப்படை , துணைப்படை , பகைப்படை .
|
|
அறுவகைப் பருவம்
|
கார் , கூதிர் , முன்பனி , பின்பனி , இளவேனில் , முதுவேனில் இவை முறையே ஆவணி முதல் இரண்டிரண்டு மாதங்களில் அமைவன .
|
|
அறுவகையரிசி
|
அருணாவரிசி , உலூவாவரிசி , ஏலவரிசி , கார்போகரிசி , விளவரிசி , வெட்பாலையரிசி .
|
|
அறுவகையுயிர்
|
மக்கள் , தேவர் , பிரமர் , நரகர் , விலங்கு , பேய் ; ஓரறிவுயிர் முதலாக உள்ள ஆறுவகை உயிர் .
|
|
அறுவடை
|
கதிரறுப்பு .
|
|
அறுவடைமேரை
|
கிராம ஊழிய சுதந்தரம் .
|
|
அறுவரி
|
தவணையில் செலுத்தும் வரி .
|
|
அறுவாக்குதல்
|
முடித்தல் ; சேகரித்தல் .
|
|
அறுவாதல்
|
செலவழிந்துபோதல் ; முடிதல் ; சேகரிக்கப்படுதல் .
|
|
அறுவாய்
|
வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம் ; குறைவிடம் ; கார்த்திகை நாள் .
|
|
அறுவாய்போதல்
|
முற்றுஞ் செலவாதல் .
|
|
அறுவிடுதல்
|
வசூலித்துவிடுதல் .
|
|
அறுவிதி
|
தீர்ப்பு .
|
|
அறுவு
|
முழுமை ; நீர்வற்றிய கால் ; கடைசிப்பகுதி .
|
|
அறுவை
|
ஆடை ; சித்திரை நாள் ; தோளிலிடும் உறி .
|
|
அறுவையர்
|
ஆடை நெய்வோர் .
|
|
அறை
|
அடி ; மோதுகை ; வெட்டுகை ; ஓசை ; சொல் ; விடை ; அலை ; உள்வீடு ; வீடு ; பெட்டியின் உட்பகுதி ; வகுத்த இடம் ; பிள்ளைபெறும் அறை ; சதுரங்கம் முதலியவற்றின் கட்டம் ; மலைக்குகை ; சுரங்கம் ; பாத்தி ; வஞ்சனை ; பாறை ; அம்மி ; சல்லி ; துண்டம் ; பாசறை ; அறுகை .
|
|
அறைக்கட்டளை
|
கோயிலில் நித்தியப் படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம் ; சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலி நிலம் .
|
|
அறைக்கட்டு
|
வீட்டின் உட்பகுதி ; விழாப்பந்தல் .
|
|
அறுப்பு
|
கதிரறுக்கை ; தாலியறுக்கை ; புண்ணை அறுத்த இடம் ; மரத்தின் அறுத்த பக்கம் ; கண்டனம் .
|
|
அறுப்புக்காலம்
|
கதிர் அறுக்கும் பருவம் .
|
|
அறுப்புக்கூலி
|
கதிர் அறுக்கும் கூலி ; மரம் முதலியன அறுக்கும் கூலி ; வாழ்க்கை உதவி ; கைம்பெண் பெறும் வாழ்க்கைப் பணம் .
|
|
அறுப்புக்கோடி
|
தாலி அறுத்தவளுக்குச் சுற்றத்தார் இடும் புதுத்துணி .
|
|
அறுப்புச்சீட்டு
|
கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை .
|
|
அறுப்புச்சுகம்
|
கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கை உதவி .
|
|
அறுப்புச்சொம்மு
|
பிள்ளையில்லாத கைம்பெண்ணுக்குப் புக்ககத்தார் வாழ்க்கைக்காக மொத்தமாய்க் கொடுக்கும் தொகை .
|