| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
துமிதம்
|
மழைத்துளி .
|
|
துமிதல்
|
வெட்டுண்ணல் ; உமிதல் ; அழிதல் ; விலக்குதல் .
|
|
துமுக்கி
|
துப்பாக்கி .
|
|
துமிலம்
|
பேராரவாரம் .
|
|
துமுலம்
|
குழப்பம் .
|
|
துய்
|
உணவு ; பஞ்சு ; பஞ்சின் நுனி ; புளியம் பழத்தின் ஆர்க்கு ; மென்மை ; கதிர் ; பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி ; சிம்பு ; கூர்மை .
|
|
துய்த்தல்
|
புலன்களால் நுகர்தல் ; உண்ணுதல் ; நூல்நூற்றல் ; நாடகச் சந்தி ஐந்தனுள் இறுதியானது .
|
|
துய்ப்பு
|
நுகர்ச்சி .
|
|
துய்ய
|
தூய்மையுள்ள ; கலப்பற்ற ; உறுதியான .
|
|
துய்யம்
|
தூய்மை .
|
|
துய்யமல்லி
|
நான்கு முதல் ஆறுமாதங்களில் விளையக்கூடிய சம்பாநெல்வகை .
|
|
துய்யன்
|
தூயன் ; வெள்ளிமணல் .
|
|
துய்யா
|
திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் ; நெசவுப் பின்னல் கயிறு .
|
|
துய்யாள்
|
தூய்மையுடையாள் ; நாமகள் .
|
|
துயக்கம்
|
சோர்வு ; தடை .
|
|
துயக்கன்
|
மனத்திரிவை உண்டாக்குபவன் .
|
|
துயக்கு
|
சோர்வு ; துயரம் ; மனமயக்கம் ; ஆசை ; பந்தம் ; தடை ; மனத்திரிவு .
|
|
துயக்குதல்
|
தளரச் செய்தல் .
|
|
துயங்குதல்
|
சோர்தல் .
|
|
துயம்
|
இரண்டு ; திருமாலைத் தேவதையாகக் கொண்டதும் இரண்டு வாக்கியங்கள் உடையதுமான மந்திரம் ; கொடி .
|
|
துயர்
|
துன்பம் ; அரசர்க்கு உரிய சூது முதலாகிய விதனம் .
|
|
துயர்தல்
|
வருந்துதல் ; தொடர்தல் .
|
|
துயரடி
|
துன்பம் ; சோர்வு .
|
|
துயரம்
|
துன்பம் ; மனத்துக்கம் ; இரக்கம் ; மழை .
|
|
துயரி
|
யாழ்நரம்பு .
|
|
துயல்வருதல்
|
அசைதல் .
|
|
துயல்தல்
|
அசைதல் ; தொங்குதல் ; பறத்தல் .
|
|
துயலுதல்
|
அசைதல் ; தொங்குதல் ; பறத்தல் .
|
|
துயவு
|
அறிவின் திரிபு .
|
|
துயில்
|
உறக்கம் ; கனா ; தங்குகை ; இறப்பு ; புணர்ச்சி ; ஆடை .
|
|
துயில்கூர்தல்
|
உறங்குதல் .
|
|
துயில்மடிதல்
|
உறங்குதல் .
|
|
துயில்வு
|
உறக்கம் .
|
|
துயிலார்
|
உறக்கமில்லாத தேவர் .
|
|
துயிலார்தல்
|
உறங்குதல் .
|
|
துயிலி
|
ஒரு கீரைவகை ; ஓர் ஆடைவகை .
|
|
துயிலிடம்
|
உறங்கும் இடம் ; மக்கட்படுக்கை .
|
|
துயிலுணர்தல்
|
விழித்தல் .
|
|
துயிலுதல்
|
உறங்குதல் ; தங்குதல் ; இறத்தல் ; மறைதல் .
|
|
துயிலெடுத்தல்
|
தூக்கத்திலிருந்து எழுப்புதல் .
|
|
துயிலெடுப்பு
|
தூக்கத்திலிருந்து எழுப்புதல் .
|
|
துயிலெடை
|
துயிலெழுப்பல் .
|
|
துயிலெடைநிலை
|
பாசறையில் வேந்தர் புகழ்கூறி அவரைத் துயிலெழுப்புவதாகக் கூறும் புறத்துறை ; அரசர் முதலியோர் துயில் நீங்குதல்பற்றிப் பாடப்படும் நூல்வகை .
|
|
துயிலெடைமாக்கள்
|
அரசரைத் துயிலெழுப்பும் சூதர் .
|
|
துயிலெழுதல்
|
உறக்கம்விட்டு எழுதல் .
|
|
துயிலெழுமங்கலம்
|
பாணர் முதலியோர் அரசரைத் துயிலெழப் பாடும் மங்கலப்பாடல் .
|
|
துயிலேற்றல்
|
உறக்கம்விட்டு எழுதல் .
|
|
துயற்சி
|
தூக்கம் .
|
|
துயிற்றுதல்
|
உறங்கச்செய்தல் ; தங்கப்பண்ணுதல் .
|
|
துயினடை
|
தூக்கத்திடையே எழுந்து செல்லச் செய்யும் நோய் .
|
|
துயுலி
|
கீரைவகை .
|
|
துர்
|
தீதுப்பொருள் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு .
|
|
துர்க்கடம்
|
இடர்ப்பாடு .
|
|
துர்க்கதன்
|
வறுமையுற்றவன் .
|
|
துர்க்கதி
|
கெட்ட நடத்தை ; வறுமை ; நரகம் .
|
|
துர்க்கந்தம்
|
தீநாற்றம் .
|
|
துர்க்கம்
|
அரண் ; மலைக்கோட்டை .
|
|
துர்க்கருமம்
|
தீச்செயல் .
|
|
துர்க்காதேவி
|
கொற்றவை ; பார்வதி .
|
|
துர்க்காபூசை
|
நவராத்திரியில் துர்க்காதேவியைக் குறித்துச் செய்யும் மூன்றுநாள் பூசை .
|
|
துர்க்குணம்
|
தீக்குணம் .
|
|
துர்க்குணன்
|
தீயவன் .
|
|
துர்க்குறி
|
தீச்சகுனம் , தீநிமித்தம் , கேட்டைக் குறிக்கும் அடையாளம் ; சென்றவிடங்களில் தீமை விளைவிக்கக்கூடிய தீயூழினர் .
|
|
துர்க்கை
|
சிவபிரான் தேவியும் பாலைநிலத் தேவியுமாகிய பெண்தெய்வம் ; பூரநாள் .
|
|
துர்ச்சரிதம்
|
கெட்ட நடத்தை .
|
|
துர்ச்சனன்
|
தீயவன் .
|
|
துர்த்தினம்
|
தீய நாள் ; சூரிய கிரணமின்றி மேக மூட்டமுள்ள நாள் .
|
|
துர்த்தூரம்
|
ஊமத்தஞ்செடி .
|
|
துர்த்தேவதை
|
சிறுதெய்வம் .
|
|
துர்நடத்தை
|
தீயொழுக்கம் .
|
|
துர்ப்பரிசம்
|
காண்க : சிறுகாஞ்சொறி .
|