| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
திரோபவம்
|
ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல் .
|
|
திரோபாவம்
|
ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல் .
|
|
திரோபவித்தல்
|
மறைத்தல் ; ஆன்மாவை மயக்கமுறச் செய்தல் .
|
|
திரௌபதர்
|
திரௌபதியின் புதல்வர் .
|
|
திரௌபதீயர்
|
திரௌபதியின் புதல்வர் .
|
|
தில்
|
விழைவு , காலம் , ஒழியிசை என்னும் பொருளில் வரும் ஒர் இடைச்சொல் .
|
|
தில்ல
|
விழைவு , காலம் , ஒழியிசை என்னும் பொருளில் வரும் ஒர் இடைச்சொல் .
|
|
தில்லம்
|
காடு .
|
|
தில்லானா
|
தாளக்குறிப்பு ; ஒரு சந்தக்குழிப்பு ; தில்லா அல்லது தில்லானா என்று முடியும் இசைப்பாட்டுவகை .
|
|
தில்லி
|
டில்லிப்பட்டணம் ; மிகச் சிறிய நிலப்பகுதி .
|
|
தில்லியம்
|
நல்லெண்ணெய் ; புதிதாகத்திருத்தப்பட்ட விளைபுலம் .
|
|
தில்லுப்பில்லு
|
பொய்புரட்டு .
|
|
தில்லுமுல்லு
|
பொய்புரட்டு .
|
|
தில்லை
|
ஒரு மரவகை ; சிதம்பரம் ; தில் என்னும் இடைச்சொல் ; சம்பாநெல்வகை .
|
|
தில்லைநாயகம்
|
ஒரு சம்பாநெல்வகை .
|
|
தில்லைமூவாயிரவர்
|
சிதம்பரம் திருக்கோயிலின் உரிமைக்குருக்கள் , தில்லைவாழ் அந்தணர் .
|
|
தில்லையம்பலம்
|
கனகசபை , சிதம்பரத்தில் நடராசர் கோயில்கொண்டுள்ள பொன்னம்பலம் .
|
|
தில்லைவனம்
|
தில்லைமரக் காடாகிய சிதம்பரம் .
|
|
திலகடம்
|
எள்ளுப்பிண்ணாக்கு .
|
|
திலகம்
|
நெற்றிப்பொட்டு ; சிறந்தது ; கட்டளைக் கலித்துறைவகை ; மஞ்சாடிமரம் .
|
|
திலகலம்
|
செக்கு .
|
|
திலகன்
|
சிறந்தவன் .
|
|
திலகாதுகன்
|
எண்ணெய் வாணியன் .
|
|
திலகை
|
எள்ளுப்போலக் கருநிறமுற்ற கத்தூரி வகை .
|
|
திலதண்டகன்
|
காண்க : திலகாதுகன் .
|
|
திலதண்டுலம்
|
எள்ளுடன் கலந்த அரிசி ; புணர்ச்சிக் காலத்துச் செய்யும் எண்வகை ஆலிங்கனத்துள் ஒன்று .
|
|
திலதம்
|
காண்க : திலகம் .
|
|
திலதர்ப்பணம்
|
பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும் இறைத்தல் .
|
|
திலதைலம்
|
நல்லெண்ணெய் .
|
|
திலப்பொறி
|
எள் இட்டு ஆட்டும் செக்கு .
|
|
திலம்
|
எள்ளு ; மஞ்சாடிமரம் .
|
|
திலவகம்
|
விளாம்பட்டை .
|
|
திலு
|
மூன்றனைக் குறிக்க வழங்கும் குழூஉக்குறி .
|
|
திலுப்புலு
|
முப்பது என்பதனைக் குறிக்கும் குழூஉக்குறி .
|
|
திலோத்தமை
|
தெய்வலோக ஆடல் மகளிருள் ஒருத்தி .
|
|
திலோதகம்
|
காண்க : திலதர்ப்பணம் .
|
|
திவ்வியகவி
|
தெய்வப்புலவன் .
|
|
திவ்வியசட்சு
|
காண்க : திவ்வியதிருட்டி .
|
|
திவ்வியத்தொனி
|
தேவர்கள் அருகக்கடவுள் முன்பு செய்யும் ஆரவார ஒலி .
|
|
திவ்வியதிருட்டி
|
முக்கால உணர்வு , தீர்க்க தரிசனம் ; தீர்க்கதரிசி .
|
|
திவ்வியதீர்த்தம்
|
வெயில் காயும்போது பெய்யும் மழையில் நீராடல் .
|
|
திவ்வியதேசம்
|
ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருப்பதிகள் .
|
|
திவ்வியப்பிரபந்தம்
|
பன்னிரு ஆழ்வார்களின் அருளிச் செயல்களாகிய நாலாயிரம் பாடல் கொண்ட தொகுதி .
|
|
திவ்வியபோதனை
|
ஞானோபதேசம் .
|
|
திவ்வியம்
|
தெய்வத்தன்மையுள்ளது ; மேன்மையானது ; ஒரு சந்தனவகை .
|
|
திவ்வியமங்களவிக்கிரகம்
|
அருச்சனை செய்து வழபடற்குரிய தெய்வத்திருமேனி .
|
|
திவ்வியமாக
|
நன்றாக .
|
|
திவ்வியமுத்திரை
|
கட்டைவிரலும் மோதிரவிரலும் சேர்ந்த முத்திரை .
|
|
திவ்வியரத்தினம்
|
சிந்தாமணி முதலிய தெய்வமணி .
|
|
திவ்வியவராடி
|
குறிஞ்சிப்பண்வகை .
|
|
திவ்வியவருடம்
|
தேவஆண்டு ; அது மானுட ஆண்டு முந்நூற்றறுபத்தைந்து கொண்டது என்பர் .
|
|
திவ்வியாத்திரம்
|
தெய்வப்படைகள் .
|
|
திவ்வியாதிவ்வியம்
|
தெய்வத்தன்மையும் மானுடத்தன்மையும் சேர்ந்துள்ளது .
|
|
திவ்வியாபரணம்
|
அரசர் முதலியோர் அணியும் சிறந்த அணிகலன் .
|
|
திவசம்
|
பகல் ; நாள் ; சிராத்தம் ; ஒருவர் இறந்த திதி .
|
|
திவம்
|
பகல் ; பரமபதம் ; வானம் .
|
|
திவரம்
|
நாடு .
|
|
திவலை
|
சிதறுந் துளி ; மழைத்துளி ; மழை .
|
|
திவவு
|
யாழின் தண்டில் நரம்புகளை வலிபெறக்கட்டும் வார்க்கட்டு ; மலைமேல் ஏறும் படிக்கட்டு .
|
|
திவள்தல்
|
துவளுதல் ; வாடுதல் ; திளைத்தல் ; அசைதல் ; விளங்குதல் ; தொடுதல் ; தீண்டி யின்புறுத்துதல் .
|
|
திவளுதல்
|
துவளுதல் ; வாடுதல் ; திளைத்தல் ; அசைதல் ; விளங்குதல் ; தொடுதல் ; தீண்டி யின்புறுத்துதல் .
|