| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
திருமண்காப்பு
|
வைணவர் நெற்றியில் இடும் திருநாமம் .
|
|
திருமணம்
|
கலியாணம் .
|
|
திருமணம்பரிமாறுதல்
|
தாளித்தல் ; பொய் கலந்து பேசுதல் .
|
|
திருமணிகுயிற்றுநர்
|
முத்துக்கோப்போர் .
|
|
திருமதில்
|
கோயிலின் சுற்றுமதில் .
|
|
திருமதுரம்
|
பழம் , நெய் , சருக்கரை சேர்த்துச் செய்யப்படும் படையற்பொருள் .
|
|
திருமந்திரம்
|
சிவஐந்தெழுத்து ; திருமால் எட்டெழுத்து ; திருமூலர் இயற்றிய நூல் ; கோயில் .
|
|
திருமந்திரவோலைநாயகம்
|
அரசவை எழுத்தாளர் தலைவன் .
|
|
திருமரம்
|
அரசமரம் .
|
|
திருமலர்
|
திருமகள் வீற்றிருக்கும் தாமரைமலர் .
|
|
திருமலை
|
தூய்மையான மலை ; கயிலாயமலை ; திருவேங்கடமலை .
|
|
திருமறுமார்பன்
|
அருகன் ; மார்பில் அழகிய மறுவையுடைய திருமால் .
|
|
திருமாது
|
திருமகள் .
|
|
திருமாமகள்
|
திருமகள் .
|
|
திருமாமணிமண்டபம்
|
பரமபதத்துள்ள திருவோலக்க மண்டபம் .
|
|
திருமால்
|
விட்டுணு ; அரசன் .
|
|
திருமால்குன்றம்
|
அழகர்மலை .
|
|
திருமால்கொப்பூழ்
|
திருமாலின் கொப்பூழிலிருந்து உண்டான தாமரை .
|
|
திருமால்நிலை
|
திருமாலின் பரம் , வியூகம் , விபவம் , அந்தர்யாமித்துவம் , அர்ச்சை என்னும் ஐவகை வடிவங்கள் .
|
|
திருமால்புதல்வன்
|
திருமாலின் மகனான மன்மதன் ; பிரமன் .
|
|
திருமாலவதாரம்
|
மீன் , ஆமை , பன்றி , நரசிங்கம் , வாமனம் , பரசுராமன் , இராமன் , பலராமன் , கண்ணன் , கற்கி என்னும் திருமாலின் பத்துப் பிறப்புகள் ; சனகன் , சனந்தனன் , சனாதனன் , சனற்குமாரன் , நரநாராயணன் , கபிலன் , இடபன் , நாரதன் , அயக்கிரீவன் , தத்தாதிரேயன் , மோகினி , வேள்வியின்பதி , வியாதன் , தன்வந்திரி , புத்தன் எனப் பதினைந்து கூறுகளையுடைய பிறப்புகள் .
|
|
திருமாலாயுதம்
|
திருமாலின் ஐம்படைகளான பாஞ்சசன்னியம் என்னும் சங்கு , சுதரிசனம் என்னும் சக்கரம் , சார்ங்கம் என்னும் வில் , நாந்தகம் என்னும் வாள் கௌமோதகி என்னும் தண்டு .
|
|
திருமாலிருஞ்சோலை
|
காண்க : அழகர்மலை .
|
|
திருமாளிகை
|
கோயில்மதிலை ஒட்டி உட்புறத்து அமைத்துள்ள கட்டட வரிசை ; பெரியோர் வாழும் இல்லம் .
|
|
திருமானகரம்
|
காண்க : திருநாடு .
|
|
திருமுகம்
|
கடவுள் சன்னிதானம் ; பெரியோர் வரைந்து அனுப்பும் ஓலை ; அரசனது சாசனம் .
|
|
திருமுட்டு
|
பூசைத்தட்டு முதலியன .
|
|
திருமுடி
|
கோயில்மூர்த்தியின் தலைப்பகுதி ; மதிப்புவாய்ந்த மக்கள் ; கொத்துவேலை செய்வோர் .
|
|
திருமுடிச்சாத்து
|
தலைப்பாகை .
|
|
திருமுடிச்சேவகர்
|
ஐயனார் .
|
|
திருமுடித்திலகம்
|
திருமுடியில் சூட்டும் மணி .
|
|
திருமுடியோன்
|
முடிசூடிய அரசன் .
|
|
திருமுண்டம்
|
சைவர்கள் மூன்று வரியாக நெற்றியில் இடும் திருநீற்றுக்குறி .
|
|
திருமுதல்
|
திரும்புதல் ; நன்றாகத் தேய்த்தல் .
|
|
திருமுழுக்கு
|
காண்க : திருமஞ்சனம் ; மார்கழி மாதத்தில் பாவைநோன்புகொண்டு மகளிர் முழுகும் நீராட்டு .
|
|
திருமுளைப்பாலிகை
|
திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளில் தானிய முளை வளர்க்கப்பெறும் மண்குடுவை .
|
|
திருமுற்றத்தார்
|
கோயிற்பணி செய்வோர் .
|
|
திருமுற்றம்
|
கோயிற் சன்னிதானம் ; குதிரை வையாளிவீதி .
|
|
திருமுறை
|
இறைவனிடம் முறையிட்டுப் பாடும் தெய்வப்பாடல்கள் ; தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , திருப்பல்லாண்டு , திருமந்திரம் , பதினோராந் திருமுறை , பெரியபுராணம் என்னும் சைவத் திருநூல்கள் ; இராமலிங்க அடிகள் பாடிய நூல்கள் .
|
|
திருமுன்
|
சன்னிதி ; சன்னிதியில் .
|
|
திருமுன்பு
|
சன்னிதி ; சன்னிதியில் .
|
|
திருமுன்னர்
|
சன்னிதி ; சன்னிதியில் .
|
|
திருமெய்க்காப்பு
|
கோயில் காப்போன் .
|
|
திருமெய்ப்பூச்சு
|
கோயில்மூர்த்தங்களின்மேல் பூசப்படும் மணப்பூச்சு ; புனுகு , களபம் முதலியன .
|
|
திருமெழுக்கு
|
சாணம் ; கோயிலிடத்தை மெழுகுகை .
|
|
திருமேற்பூச்சு
|
காண்க : திருமெய்ப்பூச்சு .
|
|
திருமேனி
|
கடவுள் , முனிவர் முதலியோரது தெய்வ உடல் ; சிலை ; பெண்கள் காதணி ; காண்க : குப்பைமேனி .
|
|
திருமேனிகாவல்
|
கோயிற்காவல் .
|
|
திருமேனியழகி
|
காண்க : குப்பைமேனி .
|
|
திருமை
|
அழகு .
|