| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
தான்மிகன்
|
அறச்சிந்தையாளன் .
|
|
தான்றி
|
தான்றிமரம் ; மருதோன்றி ; திரிபலையுள் ஒன்று ; எல்லை .
|
|
தான்றோன்றி
|
தானாகத் தோன்றியது ; சுதந்தரன் ; கடவுள் .
|
|
தானக்கணக்கு
|
கோயில் உத்தியோகங்களுள் ஒன்று .
|
|
தானக்காரர்
|
கோயிற் சொத்துகளை மேற்பார்வையிடுபவர் .
|
|
தானக்கை
|
தகுந்த இடம் ; உடம்பின் உயிர் நிலைப் பகுதி .
|
|
தானகம்
|
ஒரு கூத்துவகை ; பண்ணினை விவரித்தல் .
|
|
தானசாசனம்
|
தானம் கொடுத்தற்குரிய பத்திரம் .
|
|
தானசீலம்
|
கொடைக்குணம் .
|
|
தானசீலன்
|
ஈகையாளன் .
|
|
தானசூரன்
|
காண்க : தானவீரன் .
|
|
தானத்தார்
|
கோயில் அதிகாரிகள் .
|
|
தானத்தான்
|
சிவாலயத்தில் பூசை செய்யும் குருக்கள் ; பரம்பரையாக வந்த தலைவன் .
|
|
தானதருமம்
|
ஈகை .
|
|
தானநிலை
|
இசைக் கூறுபாடு .
|
|
தானப்பிரமாணம்
|
காண்க : தானசாசனம் .
|
|
தானப்பெருக்கம்
|
பத்து , நூறு , ஆயிரம் முதலிய எண்களால் பெருக்குகை ; மனக்கோட்டை கட்டுகை .
|
|
தானப்பொருத்தம்
|
நூலைத் தொடங்கும் செய்யுளிலுள்ள முதன்மொழிப் பொருத்தம் .
|
|
தானபத்திரம்
|
காண்க : தானசாசனம் .
|
|
தானபத்திரிகை
|
காண்க : தானசாசனம் .
|
|
தானம்
|
இடம் ; இருப்பிடம் ; பதவி ; கோயில் ; இருக்கை ; சக்தி ; துறக்கம் ; செய்யுட் பொருத்தத்தில் வரும் நிலைகள் ; எழுத்துப் பிறக்குமிடம் ; எண்ணின் தானம் ; நன்கொடை ; யானை மதம் ; நால்வகை உபாயத்துள் ஒன்றாகிய கொடை ; குளித்தல் ; இசைச்சுரம் ; சாதக சக்கரத்திலுள்ள வீடு ; ஆற்றலில் சமமாயிருக்கை ; இல்லறம் ; மகரவாழை .
|
|
தானம்பாடுதல்
|
ஒரு பண்ணினைச் சுரமுறையால் விவரித்துப் பாடுதல் .
|
|
தானாமானம்
|
இருக்கும் பதவியால் ஏற்படும் பொருமை .
|
|
தானவண்ணம்
|
ஓர் இசைப்பாட்டுவகை .
|
|
தானவர்
|
தனு என்பவளின் வழிவந்த அசுரர் ; வித்தியாதரர் .
|
|
தானவள்
|
அசுரப்பெண் .
|
|
தானவன்
|
சந்திரன் ; அசுரன் .
|
|
தானவாரி
|
ஆசுரர்களுக்குப் பகைவனான திருமால் ; இந்திரன் .
|
|
தானவிச்சை
|
வித்தையின் துறைகள் .
|
|
தானவீரன்
|
பெருங்கொடையாளி .
|
|
தானாக
|
தனியாக ; தன் விருப்பம்போல் .
|
|
தானாகரன்
|
தானத்திற்கு இருப்பிடமான பெருங்கொடையாளி .
|
|
தாஅனாட்டித் தனாதுநிறுப்பு
|
தானாக ஒன்றனைக் கூறி அதனை நிலைநிறுத்துதல் .
|
|
தானாதல்
|
சுதந்தரனாதல் ; ஒன்றுபடுதல் .
|
|
தானாதிகாரி
|
கொடைக்குரிய அதிகாரி .
|
|
தானாதிபதி
|
படைத்தலைவன் ; தூதன் ; நடு நிலையாளன் .
|
|
தானாபத்தியம்
|
தூது ; நடுவுநிலைமை ; ஆசாரியபதவி .
|
|
தானாபதி
|
படைத்தலைவன் ; தூதன் ; அந்தப்புரத் தூதி .
|
|
தானி
|
தானத்திலுள்ளது ; இடத்திலிருப்பது ; இருப்பிடம் ; பண்டசாலை ; கொடுப்போன் .
|
|
தானிகம்
|
கோயிலுக்குப் பரம்பரையாயுள்ள உரிமை ; கோயில் செயல்களைக் கண்காணிக்கும் உத்தியோகம் ; கொத்துமல்லி .
|
|
தானிகன்
|
கோயில் செயல்களைக் கண்காணிப்பவன் .
|
|
தானிகை
|
கொத்துமல்லி .
|
|
தானியகோட்டகம்
|
தானியக் களஞ்சியம் .
|
|
தானியசாரம்
|
தூற்றின நெற்பொலி .
|
|
தானியதவசம்
|
தானியமாகிய செல்வம் .
|
|
தானிப்பொட்டு
|
பதர் ; அந்துப்பூச்சி ; பயிர் நோய்வகை .
|
|
தானியம்
|
நெல் முதலியன ; கொத்துமல்லி .
|
|
தானியராசன்
|
கோதுமை ; கொத்துமல்லி .
|
|
தானியலட்சுமி
|
தானியமாகிய செல்வத்துக்குரிய திருமகள் .
|
|
தானியாகுபெயர்
|
இடத்தில் உள்ள பொருளின் பெயர் இடத்திற்கு ஆவது .
|
|
தானீகம்
|
கோயில் ; செயல்களைக் கண்காணிக்கும் உத்தியோகம் .
|
|
தானு
|
காற்று ; கொடையாளன் ; வெற்றியாளன் .
|
|
தானூரம்
|
சுழல்காற்று .
|
|
தானெடுத்துமொழிதல்
|
முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றாகிய முன்னோர் மொழியை எடுத்தாளுதல் .
|
|
தானை
|
படை ; ஆயுதப்பொது ; ஆடை ; மேடைத் திரைச்சீலை ; முசுண்டி என்னும் ஆயுதம் .
|
|
தானைநிலை
|
பகைவர் அஞ்சுதற்குரிய காலாட்படையின் நிலைமை கூறும் புறத்துறை ; இருபக்கத்துப் படையும் புகழும்படி போர் செய்த வீரனது திறத்தைக் கூறும் புறத்துறை .
|
|
தானைமறம்
|
போர் செய்யவந்த இருவகைப் படையும் போர் செய்து அழியாதபடி காத்த வீரன் ஒருவனது உயர்ச்சி கூறும் புறத்துறை ; சேனையின் அஞ்சாமையைப் புகழ்ந்து பகைவர் அழிந்ததற்கு இரங்குதலைக் கூறும் புறத்துறை ; உயிர்க்கேடுகட்கு அஞ்சாது பூசலுக்கு முற்படும் வேந்தனது சிறப்புக்கூறும் புறத்துறை .
|
|
தானைமாலை
|
அரசனுடைய முன்னணிப்படையை ஆசிரியப்பாவால் புகழ்ந்து பாடும் இலக்கியவகை .
|
|
தானையம்
|
காண்க : தாணையம் ; கால்நடைகளின் மந்தை .
|