| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
தரித்தல்
|
நிலைபெற்று நிற்றல் ; இருப்புக் கொள்ளுதல் ; ஊன்றி நிற்றல் ; அணிதல் ; தாங்குதல் ; பொறுத்தல் ; அடக்கிக்கொள்ளுதல் ; மறவாது உள்ளத்தில் வைத்தல் ; தாம்பூலம் தின்னுதல் .
|
|
தரித்திரப்படுதல்
|
வறுமையடைதல் ; உலோப குணத்தையடைதல் .
|
|
தரித்திரம்
|
வறுமை .
|
|
தரித்திரம்பிடித்தல்
|
வறுமையடைதல் ; உலோபியாயிருத்தல் .
|
|
தரித்திரன்
|
வறியவன் .
|
|
தரித்திரி
|
வறியவள் ; பூமி .
|
|
தரிப்பு
|
தங்குகை ; நினைவு ; பொறுத்திருக்கை ; உறுதி ; இருப்பிடம் ; கையிருப்பு ; நிறுத்தும் இடம் ; காண்க : தருப்பு .
|
|
தரிப்புத்தட்டான்
|
செல்வன் .
|
|
தரிபடுதல்
|
நிலைபெறுதல் .
|
|
தரிபெறுதல்
|
நிலைபெறுதல் .
|
|
தரியலர்
|
பகைவர் .
|
|
தரியலார்
|
பகைவர் .
|
|
தரியாபத்து
|
விசாரணை ; கண்டுபிடிக்கை ; வழக்கு .
|
|
தரியார்
|
பகைவர் .
|
|
தரு
|
மரம் ; கற்பகமரம் ; இசைப்பாட்டுவகை ; ஒருவகைச் சந்தம் ; காண்க : தேவதாரு .
|
|
தருக்கம்
|
நியாயவாதம் ; மேம்பாடு ; வாக்கு வாதம் ; நியாயவாத நூல் .
|
|
தருக்கி
|
அகங்காரமுள்ளவர் ; நியாயவாத நூல் வல்லோன் .
|
|
தருக்கித்தல்
|
வாக்குவாதம் பண்ணல் .
|
|
தருக்கு
|
செருக்கு ; வலிமை ; களிப்பு ; தருக்கம் .
|
|
தருக்குதல்
|
அகங்கரித்தல் ; களித்தல் ; ஊக்கமிகுதல் ; பெருக்குதல் ; இடித்தல் ; வருத்துதல் ; உடைத்தல் ; மேற்கொள்ளுதல் .
|
|
தருக்கோட்டம்
|
காவிரிப்பூம்பட்டினத்தில் கற்பகத்தரு நின்று விளங்கிய கோயில் .
|
|
தருசாரம்
|
மரத்தின் சாரமாயுள்ள கருப்பூரம் .
|
|
தருசு
|
நெருங்கிய இழை .
|
|
தருணம்
|
இளமை ; தக்க சமயம் ; நல்ல எண்ணம் ; காண்க : பெருஞ்சீரகம் ; ஆமணக்கு .
|
|
தருணன்
|
இளைஞன் .
|
|
தருணி
|
காண்க : தருணை ; கற்றாழை .
|
|
தருணை
|
இளம்பெண் , பதினாறு முதல் முப்பது அகவைவரை யுள்ள பெண் .
|
|
தருதல்
|
கொடை .
|
|
தருநன்
|
கொடுப்பவன் .
|
|
தருநிலைக்கோட்டம்
|
காண்க : தருக்கோட்டம் .
|
|
தருநிறப்பஞ்சரம்
|
காந்தம் .
|
|
தருப்பகம்
|
தாழ்வு .
|
|
தருப்பகன்
|
மன்மதன் .
|
|
தருப்படன்
|
ஊர் காவற்காரன் .
|
|
தருப்பணம்
|
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிதிரருக்கும் செய்யும் நீர்க்கடன் ; உணவு ; அவல் ; கண்ணாடி .
|
|
தருப்பம்
|
அகங்காரம் ; புனுகுசட்டம் ; தருப்பைப்புல் .
|
|
தருப்பாக்கிரம்
|
தருப்பை நுனி .
|
|
தருப்பி
|
காண்க : தருவி .
|
|
தருப்பித்தல்
|
வழிபாடுகளால் கடவுளுக்குத் தன்னை ஒப்படைத்தல் .
|
|
தருப்பு
|
குறைந்த விலையுள்ள ஒரு வெள்ளைக் கல்வகை .
|
|
தருப்பை
|
குசைப்புல் .
|
|
தருமக்கட்டை
|
பிறர் தருமத்தால் வாழும் உடலான அநாதப்பிள்ளை ; ஆவுரிஞ்சு தறி .
|
|
தருமக்கல்
|
ஒருவன் செய்த அறங்கள் வரையப்பட்ட கல்வெட்டு .
|
|
தருமக்கிழவர்
|
தருமத்தைக் காப்பவர் ; அறச்செயல் புரிதற்குரிய வணிகர் .
|
|
தருமகர்த்தா
|
கோயில் அதிகாரி ; நீதி உரைக்கும் அதிகாரி .
|
|
தருமகாரியம்
|
அறச்செயல் .
|
|
தருமச்செல்வி
|
காண்க : தருமதேவதை ; பார்வதி .
|
|
தருமச்செலவு
|
அறத்திற்காகச் செய்யும் செலவு .
|
|
தருமச்சக்கரம்
|
அறவாழி .
|
|
தருமசங்கடம்
|
மாறுபட்ட இரு கடமைகளுள் எதைச் செய்வது என்று அறியாது துன்புறும் நிலை .
|
|
தருமசத்திரம்
|
அறக்கூழ்ச்சாலை , அன்னசத்திரம் .
|
|
தருமசபை
|
நீதிமன்றம் .
|
|
தருமசாசனம்
|
அறச்செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம் .
|
|
தருமசாதனம்
|
அறச்செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம் .
|
|
தருமசாலி
|
அறஞ்செய்வோன் .
|
|
தருமசாலை
|
தருமசத்திரம் ; முப்பத்திரண்டு அறங்களையும் புரிதற்குரிய இடம் .
|
|
தருமசிந்தை
|
அறம்புரியுங் கருத்து .
|
|
தருமசீலன்
|
அறஞ்செய்பவன் .
|
|
தருமசீலி
|
அறம்புரிபவள் .
|
|
தருமணல்
|
புதிதாகக் கொணர்ந்து பரப்பும் மணல் .
|
|
தருமத்தியானம்
|
ஆன்மா ஈடேறுவதைப்பற்றிய நினைவு .
|
|
தருமதலைவன்
|
தருமத்திற்குரிய தலைவனான புத்தன் .
|
|
தருமதாயம்
|
அறத்திற்காக விடும் இறையிலி நிலம் .
|
|
தருமதானம்
|
சமய தருமப்படி செய்யும் தானம் .
|