| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
செவிப்பாம்பு
|
காண்க : செவிப்பூரான் ; மாட்டுக் குற்றவகை .
|
|
செவிப்புலன்
|
காதால் உணரும் ஓசையுணர்வு .
|
|
செவிப்புற்று
|
காதுநோய்வகை .
|
|
செவிப்பூரான்
|
காதுக்குள் சென்று துன்புறுத்தும் பூரான்வகை .
|
|
செவிபடுவாதம்
|
காது கேளாமற் செய்யும் நோய்வகை .
|
|
செவிமடல்
|
காதின் வெளியுறுப்பு ; காண்க : செவிமலர் .
|
|
செவிமடுத்தல்
|
கேட்டல் .
|
|
செவிமந்தம்
|
செவிடு .
|
|
செவிமலர்
|
ஒரு காதணிவகை ; மகளிர் காதணிவகை ; தெய்வத் திருமேனிகளிற் சாத்தும் காதோலை ; காதுநோய் நீங்கியமைக்காகச் செலுத்தும் செவியுருவம் ; உட்செவி .
|
|
செவிமறை
|
செவியில் மறுவுள்ள எருது .
|
|
செவிமாட்டுதல்
|
பிறர் காதில் வலிய நுழைத்தல் .
|
|
செவியடி
|
காதின் அடிப்பகுதி ; களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டறை வைத்திருந்த இடம் .
|
|
செவியடித்தல்
|
காதாட்டுதல் .
|
|
செவியம்
|
காண்க : செவ்வியம் .
|
|
செவியறிவு
|
காண்க : செவியறிவுறூஉ .
|
|
செவியறிவுறுத்தல்
|
நல்லறிவு புகட்டுதல் .
|
|
செவியறிவுறூஉ
|
அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக் கூறும் நீதி ; அரசர்க்கு நல்லறிவு புகட்டுதலைக் கூறும் புறத்துறை ; ஒரு நூல்வகை .
|
|
செவியறை
|
காண்க : காதறை .
|
|
செவியன்
|
முயல் .
|
|
செவியான்
|
காண்க : செவிப்பூரான் .
|
|
செவியிலி
|
காண்க : செவியறை .
|
|
செவியுறை
|
காதுக்கிடும் மருந்து ; செவிக்கண் நிற்கக் கூறும் நீதி .
|
|
செவியுறையங்கதம்
|
அரசர்க்கு உறுதிகூறும் நோக்குடன் அறிஞர் கூறும் வசைச்செய்யுள் .
|
|
செவியேறு
|
கேள்வி .
|
|
செவிரம்
|
ஒரு பாசிவகை .
|
|
செவிலி
|
வளர்ப்புத்தாய் ; முன்பிறந்தவள் .
|
|
செவிலித்தாய்
|
வளர்ப்புத்தாய் .
|
|
செவிள்
|
காதின் மேற்புறத்து உறுப்பு .
|
|
செவுள்
|
மீனின் மூச்சு உறுப்பு .
|
|
செவேரெனல்
|
சிவந்திருத்தற் குறிப்பு .
|
|
செவை
|
காண்க : செவ்வை .
|
|
செழிச்சி
|
செழிப்பு ; வளம் .
|
|
செழித்த கல்
|
சுக்கான் கல் .
|
|
செழித்தல்
|
தழைத்தல் ; வளம் பெருகுதல் ; சிறப்பு நிலையில் இருத்தல் ; அளவுக்கு மிஞ்சியிருத்தல் ; முகமலர்ச்சியுறுதல் .
|
|
செழிதல்
|
வளர்தல் .
|
|
செழிப்பம்
|
வளம் ; நிறைவு ; பொலிவு .
|
|
செழிப்பு
|
வளம் ; நிறைவு ; பொலிவு .
|
|
செழியன்
|
பாண்டியன் .
|
|
செழுகம்
|
அட்டை .
|
|
செழுகை
|
சாணளப்பான் புழு .
|
|
செழுசெழுத்தல்
|
மிகு வளப்பமாதல் ; தழைத்தல் .
|
|
செழுஞ்சோறு
|
கொழுத்த உணவு .
|
|
செழுத்து
|
வளம் .
|
|
செழுந்து
|
நிறைவு .
|
|
செழுப்பம்
|
வளம் ; நிறைவு .
|
|
செழும்பல்
|
வளம் ; நிறைவு .
|
|
செழுமறை
|
நெருப்பு .
|
|
செழுமை
|
செழிப்பு ; மாட்சிமை ; தழைவு ; அழகு .
|
|
செழுவிதின்
|
செம்மையாக .
|
|
செள்ளு
|
தெள்ளுப்பூச்சி ; உண்ணிவகை .
|
|
செளிம்பன்
|
குணக்கேடன் .
|
|
செளிம்பு
|
களிம்பு ; பிடிவாதம் .
|
|
செளிம்பூறல்
|
களிம்புப் பற்று .
|
|
செளுகம்
|
அட்டை .
|
|
செளுகை
|
அட்டை .
|
|
செளைப்பு
|
சோர்வு .
|
|
செற்றம்
|
மனவயிரம் ; நெடுங்காலம் நிகழ்வதாகிய பகைமை ; வெறுப்பு ; தணியாக்கோபம் ; ஊடற்சினம் .
|
|
செற்றல்
|
கொல்லுதல் ; அழித்தல் ; கேடு ; செறிவு ; ஈமுட்டை .
|
|
செற்றலர்
|
பகைவர் .
|
|
செற்றார்
|
பகைவர் .
|
|
செற்று
|
நெருக்கம் .
|
|
செற்றுதல்
|
கொல்லுதல் ; செதுக்குதல் ; பதித்தல் ; அழுந்துதல் ; செறிதல் ; அழித்தல் .
|
|
செற்றை
|
சிறு தூறு ; கூட்டம் ; நன்னீர்மீன் .
|
|
செற்றோர்
|
பகைவர் .
|
|
செறல்
|
கோபம் ; கொல்லுகை .
|
|
செறி
|
நெருக்கம் .
|
|
செறிஞர்
|
உறவினர் .
|
|
செறித்தல்
|
சேர்த்தல் ; இறுக்குதல் ; அடைதல் ; அடக்குதல் ; வைத்தல் ; திணித்தல் ; பதித்தல் ; அணியாக இடுதல் ; அடைவித்தல் ; ஏற்காத பொருளைச் செய்யுளிற் புகவிட்டு உரைகூறுதல் ; கொல்லுதல் ; அழித்தல் ; மூழ்குதல் ; திரட்டுதல் ; நெரித்தல் ; மூடுதல் .
|
|
செறிதல்
|
நெருங்குதல் ; திண்ணிதாதல் ; இறுகுதல் ; அடங்குதல் ; பொருந்துதல் ; எல்லை கடவாதிருத்தல் ; மறைதல் ; மிகுதல் ; திரளுதல் ; கலத்தல் ; குளித்தல் ; புணர்தல் .
|