| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
செங்கயல்
|
ஒரு மீன்வகை .
|
|
செங்கரடு
|
செம்மண்குன்று .
|
|
செங்கரப்பான்
|
எயிற்றுப்புண் .
|
|
செங்கருங்காலி
|
ஒரு மரவகை .
|
|
செங்கரும்பு
|
செந்நிறமுள்ள கரும்புவகை .
|
|
செங்கல்
|
சுட்ட மண்கல் ; காவிக்கல் ; மாணிக்கம் .
|
|
செங்கல்வராயன்
|
செங்கல்வகிரி என்னும் திருத்தணிகைமலைத் தலைவனான முருகக் கடவுள் .
|
|
செங்கல்வரை
|
திருத்தணிகைமலை .
|
|
செங்கலங்கல்
|
செந்நிறமான கலங்கல் புது வெள்ளநீர் .
|
|
செங்கலம்
|
செந்தாமரை .
|
|
செங்கழுநீர்
|
கொடிவகை ; செங்குவளை ; செவ்வாம்பல் .
|
|
செங்களம்
|
இரத்தத்தால் சிவந்த இடம் ; போர்க்களம் .
|
|
செங்களி
|
செம்பஞ்சுக்குழம்பு ; பாக்கு ஊறவைக்குஞ் சாயக்குழம்பு .
|
|
செங்கற்கட்டளை
|
செங்கல் அறுத்தற்குரிய அச்சு .
|
|
செங்கற்றலை
|
ஒரு மீன்வகை .
|
|
செங்கனல்
|
கொழுந்துவிட்டெரியும் தீ ; கனிந்துகொண்டிருக்கும் அழல் .
|
|
செங்காகம்
|
செம்போத்துப் பறவை .
|
|
செங்காடு
|
திருச்செங்காட்டங்குடி என்னும் ஒரு சிவதலம் ; சிவந்த காட்டுநிலம் .
|
|
செங்காந்தள்
|
செந்நிறமுள்ள படர்கொடிவகை .
|
|
செங்காய்
|
பழுக்கும் பருவத்துள்ள காய் .
|
|
செங்காய்ப்புண்
|
பழுக்காத புண் .
|
|
செங்கார்
|
ஒரு கார்நெல்வகை .
|
|
செங்காரணி
|
கருஞ்சிவலையான பசு முதலிய விலங்கு .
|
|
செங்காரி
|
கருஞ்சிவலையான பசு முதலிய விலங்கு .
|
|
செங்காரித்தல்
|
கோபம் , வெயில் , கடுமை இவற்றால் முகஞ் சிவந்துகாட்டுதல் ; மழையின்றிப் பயிர்கள் கதிர்வாங்காது செந்நிறமாதல் .
|
|
செங்காலி
|
செங்கருங்காலிமரம் .
|
|
செங்காவி
|
செங்கழுநீர் ; குங்குமக்காவி .
|
|
செங்கானாரை
|
சிவந்த காலையுடைய நாரை வகை .
|
|
செங்கிடை
|
ஒரு முட்செடிவகை .
|
|
செங்கிரந்தி
|
ஒரு மேகக்கட்டிவகை ; செந்நிறப்புண்கட்டி .
|
|
செங்கிளுவை
|
கீச்சுத்தாராப் பறவை ; ஒரு மரவகை .
|
|
செங்கீரை
|
ஒரு கீரைவகை ; செங்கீரைப் பருவம் .
|
|
செங்கீரைப்பருவம்
|
இருகை ஊன்றி ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி ஐந்தாம் திங்களிற் பிள்ளைகள் தலைநிமிர்ந்தாடும் பருவம் .
|
|
செங்குங்குமம்
|
சந்தனமரவகை .
|
|
செங்குணக்கு
|
நேர்கிழக்கு .
|
|
செங்குத்தாய்விழுதல்
|
தலைகுப்புற விழுதல் .
|
|
செங்குத்து
|
நேரே நிமிர்ந்து நிற்கும் நிலை .
|
|
செங்குந்தம்
|
கண்ணோய்வகை ; இரத்தத்தால் சிவந்த ஈட்டி .
|
|
செங்குமிழ்
|
ஒரு மரவகை .
|
|
செங்குமுதம்
|
காண்க : செவ்வாம்பல் ; கண்ணோய்வகை .
|
|
செங்குலிகம்
|
சாதிலிங்கம் .
|
|
செங்குவளை
|
செங்கழுநீர்ப்பூ .
|
|
செங்குளவி
|
மஞ்சள் நிறமுள்ள ஒரு குளவிவகை .
|
|
செங்குறிஞ்சி
|
ஒரு மரவகை .
|
|
செங்குன்றி
|
ஒரு குன்றிக்கொடிவகை .
|
|
செங்கை
|
கொடுக்குந் தன்மையுள்ள கை ; அழகிய கை ; சிவந்த கை ; திருவாதிரைநாள் .
|
|
செங்கொடிவெலி
|
ரோசாநிறப் பூவுள்ள ஒரு கொடிவகை .
|
|
செங்கொல்
|
செம்பொன் .
|
|
செங்கொல்லர்
|
தட்டார் .
|
|
செங்கொள்
|
ஒரு கொள்ளுவகை .
|
|
செங்கோட்டியாழ்
|
நால்வகை யாழ்களுள் ஒன்று .
|
|
செங்கோடு
|
செங்குத்தான மலை ; செருந்திமரம் ; ஒரு சிவதலம் .
|
|
செங்கோல்
|
அரசச் சின்னமாகிய நேர்கோல் ; நல்லரசாட்சி ; நெருப்புச் சலாகை .
|
|
செங்கோல்கோடுதல்
|
அரசநீதி தவறுதல் .
|
|
செங்கோலம்
|
செம்புமணல் .
|
|
செங்கோலறுகு
|
அறுகம்புல்வகை .
|
|
செங்கோலோச்சுதல்
|
நீதி தவறாது அரசு புரிதல் .
|
|
செங்கோற்கடவுள்
|
யமன் .
|
|
செங்கோன்மை
|
அரசநீதி .
|
|
செச்சை
|
சந்தனக்குழம்பு ; நீறு ; சட்டை ; வெள்ளாட்டுக்கடா ; ஆடு ; மேடராசி ; தழைகள் ; குடில் ; செங்காடு ; உதயசந்திரன் ; இலிங்கப்பெட்டகம் ; இரட்டை ; சிவப்பு ; வெட்சி ; செந்துளசிச்செடி .
|
|
செஞ்ச
|
நிறைய ; சேர ; நேராக ; முழுதும் .
|
|
செஞ்சடையோன்
|
காஷ்மீரப் படிகம் ; சிவன் ; வயிரவன் ; வீரபத்திரன் .
|
|
செஞ்சந்தனம்
|
ஒரு சந்தனமரவகை .
|
|
செஞ்சம்
|
நேர்மை ; முழுமை .
|
|
செஞ்சாந்து
|
குங்குமம் ; சந்தனக்கலவை .
|
|
செஞ்சாலி
|
உயர்தரச் செந்நெல்வகை .
|
|
செஞ்சிலை
|
சிவந்தகல் ; செங்காவி ; அழகிய வில் .
|