| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
சாவடி
|
வழிப்போக்கர் தங்குமிடம் , ஊர்ச் சாவடி , கச்சேரி , ஊர்ப் பொதுவிடம் , இறப்பு விளைக்கத்தக்க அடி
|
|
சாவணம்
|
கம்மியர் கருவியுள் ஒன்று , மூக்குமயிர் பிடுங்குங் கருவி , நாணல் , நாளம் .
|
|
சாவதானம்
|
எச்சரிக்கை , விரைவின்மை .
|
|
சாவம்
|
சாத்தீட்டு , சாபம் .
|
|
சாவயம்
|
உறுப்புகளோடு கூடியது .
|
|
சாவரம்
|
பாவம் , குற்றம் .
|
|
சாவல்
|
சேவல் .
|
|
சாவற்கட்டு
|
கோழிப்போர் .
|
|
சாவற்பண்ணை
|
படர்செடிவகை
|
|
சாவறுதி
|
இறக்குந்தறுவாய் , வலுவின்மை .
|
|
சாவாக்கிழங்கு
|
கருடன்கிழங்கு .
|
|
சாவாஞ்செத்தவன்
|
வலுவற்றவன் .
|
|
சாவாமூலி
|
மயிற்சிகைப்பூண்டு , வேப்பமரம் .
|
|
சாவாவரம்
|
இறவாதபடி கடவுளிடம் பெறும் வரம் .
|
|
சாவாவுடம்பு
|
புகழ் .
|
|
சாவி
|
மணிபிடிக்காமல் பதராய்ப்போன கதிர் , திறவுகோல் , அச்சாணி .
|
|
சாவிகொடுத்தல்
|
கடிகாரம் முதலியவை ஓடுவதற்காக அவற்றின் சாவியை முறுக்குதல் , தூண்டுதல் .
|
|
சாவித்தல்
|
திட்டுதல்
|
|
சாவித்திரம்
|
பூணூல்
|
|
சாவித்திரி
|
கலைமகள் , பிரமன் மனைவியருள் ஒருத்தி , சத்தியவானின் மனைவி , இரவு 15 முகூர்த்தத்துள் 13ஆவது , காயத்திரி மந்திரம் , நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
|
|
சாவிபோதல்
|
பயிர் பட்டுப்போதல் .
|
|
சாவிவைக்கோல்
|
சாவியாய்ப்போன பயிரின் வைக்கோல் .
|
|
சாவீடு
|
இழவுநேர்ந்த வீடு .
|
|
சாவு
|
இறப்பு , பிசாசம் .
|
|
சாவெடி
|
பிணநாற்றம் .
|
|
சாவெழுத்து
|
நச்செழுத்து
|
|
சாவேரி
|
ஒரு பண்வகை .
|
|
சாவோலை
|
இழவோலை .
|
|
சாழல்
|
மகளிர் விளையாட்டுவகை , ஒரு நூல்வகை , வரிக்கூத்துவகை , கரடி .
|
|
சாழை
|
குடிசை , மகளிர் கைகொட்டி ஆடும் விளையாட்டு .
|
|
சாழைகொட்டுதல்
|
கைகொட்டுதல் .
|
|
சாழையகத்தி
|
ஓர் அகத்திமரவகை .
|
|
சாளக்கிராமம்
|
திருமால் உருவமாகக்கொண்டு பூசித்தற்குரிய ஒருவகைச் சிலை , ஒரு திருமால் தலம் .
|
|
சாளகம்
|
இசைப்பாவுக்குரிய சாதியோசை மூன்றனுள் ஒன்று .
|
|
சாளம்
|
குங்கிலியம் , மணல் .
|
|
சாளர்
|
செவ்வழி யாழ்த்திறவகை .
|
|
சாளரம்
|
பலகணி , காண்க : சாலகராகம்
|
|
சாளா
|
ஒரு மீன்வகை .
|
|
சாளி
|
வண்டு ; குடைவேல் ; பணப்பை .
|
|
சாளிகம்
|
வண்டு .
|
|
சாளிகை
|
வண்டு , பணப்பை , சாடி .
|
|
சாளியல்
|
பணப்பை
|
|
சாளியா
|
ஒரு மருந்துவிதை .
|
|
சாளேசரம்
|
வெள்ளெழுத்து .
|
|
சாளேசுரம்
|
வெள்ளெழுத்து .
|
|
சாளை
|
ஒரு மீன்வகை , குடிசை , வழிந்துவிழும் வாய்நீர் .
|
|
சாளையிறக்குதல்
|
குடிசை கட்டுதல் .
|
|
சாளைவாய்
|
நீர்வடியும் வாய் .
|
|
சாற்சமந்தம்
|
மலையாத்திமரம் .
|
|
சாற்றமுது
|
இரசம்
|
|
சாற்று
|
விளம்பரப்படுத்துகை , ஓசை .
|
|
சாற்றுதல்
|
விளம்பரப்படுத்தல் , விரித்துரைத்தல் , சொல்லுதல் , நிறைத்தல் , அடித்தல் , புகழ்தல் , அமைத்தல் .
|
|
சாற்றுவாரி
|
காண்க : சாளைவாய்
|
|
சாற்றுவாய்
|
காண்க : சாளைவாய்
|
|
சாற்றோலை
|
ஆட்டுக்கிடையில் இடையர்கள் ஒதுங்கியிருக்கும் மறைவோலை .
|
|
சாறடை
|
காண்க : சாரணை .
|
|
சாறணை
|
காண்க : சாரணை .
|
|
சாறணத்தி
|
காண்க : சாரணை .
|
|
சாறயர்தல்
|
விழாக் கொண்டாடுதல் .
|
|
சாறிப்போதல்
|
பயனின்றிப் போதல் .
|
|
சாறு
|
இலை , பழம் முதலியவற்றின் சாறு , மணப்பண்டங்கள் ஊறின நீர் , இரசம் , திருவிழா , பூசை , திருமணம் , குலை .
|
|
சாறுதல்
|
நழுவுதல் , வழுக்குதல் , சரிதல் , பெருக்குதல் , கொத்துதல் .
|
|
சாறுதாரி
|
கரிசலாங்கண்ணி .
|
|
சாறுபிழிதல்
|
இரசமெடுத்தல் , வருத்துதல் , நன்றாய் அடித்தல் .
|
|
சாறுவேளை
|
பூண்டுவகை .
|
|
சான்மலி
|
இலவமரம் ; இலவந்தீவு ; ஒரு நரகம் .
|
|
சான்மலிசாரம்
|
இலவம்பிசின் .
|
|
சான்றவர்
|
அறிஞர் ; சாணார் .
|
|
சான்றவன்
|
சாட்சி கூறுவோன் .
|
|
சான்றாண்மை
|
கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந் தன்மை ; பெருந்தன்மை ; பொறுமை ; கள்ளிறக்குந் தொழில் .
|
|
சான்றார்
|
காண்க : சாண்றோர் .
|
|
சான்று
|
சாட்சி .
|
|
சான்றோர்
|
அறிவொழுக்கங்களால் நிறைந்தோர் ; சங்கப் புலவர் ; வீரர் .
|
|
சான்றோன்
|
சூரியன் ; அறிவொழுக்கங்களாற் சிறந்தவன் ; மிருகசீரிட நாள் .
|
|
சான்னித்தியம்
|
தெய்வம் முதலியவற்றின் வெளிப்பாடு .
|
|
சானகம்
|
வில் .
|
|
சானகி
|
சீராமன் மனைவியாகிய சீதை ; பொன்னாங்காணிக்கீரை ; கொற்றான் கொடி ; மூங்கில் .
|
|
சானம்
|
பெருங்காயம் ; சாதிலிங்கம் ; தியானம் ; அம்மி ; உரைகல் .
|
|
சானவி
|
கங்கையாறு .
|
|
சானி
|
மனைவி ; பொதுமகள் .
|
|
சானிகை
|
மண்ணாற் செய்த தட்டு .
|
|
சானித்தல்
|
தியானித்தல் .
|
|
சானித்தியம்
|
காண்க : சான்னித்தியம் .
|
|
சானினி
|
சிறுகீரை ; சேம்புச்செடி .
|
|
சானு
|
தாழ்வரை ; மலை ; முழந்தாள் .
|