| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
சாம்பார்
|
பருப்புக்குழம்பு .
|
|
சாந்தி
|
அமைதி ; தணிவு ; கோளினால் ஏற்படும் கோளாறுகளைச் சாந்தப்படுத்தும் சடங்கு ; விழா ; பூசை ; சாந்திகலியாணம் ; சாந்திகலை ; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர் .
|
|
சாந்திக்கூத்து
|
தலைவன் முதலியோர் மனவமைதி அடைவதற்கு ஆடுங்கூத்து .
|
|
சாந்திகலியாணம்
|
திருமணமான பெண் முறைப்படி கணவனுடன் சேர்தற்குச் செய்யும் சடங்கு .
|
|
சாந்திகழித்தல்
|
சாந்தி கிரியைகளால் கோள் முதலியவற்றின் பீடையைப் போக்குதல் .
|
|
சாந்திமுகூர்த்தம்
|
காண்க : சாந்திகலியாணம்
|
|
சாந்திரம்
|
சந்திரன் சம்பந்தமானது ; சந்திரகாந்தக் கல் .
|
|
சாந்திரமானம்
|
சந்திரன் போக்கைக்கொண்டு மாத ஆண்டுகள் கணக்கிடும் முறை .
|
|
சாந்திராயனம்
|
ஒரு நோன்பு ; இஃது ஒரு மாதத்தில் வெள்ளுவா முதல் காருவாவரை ஒவ்வொரு பிடி சோறு குறைத்தும் காருவா(அமாவாசை) முதல் வெள்ளுவா (பௌர்ணமி) வரை ஒவ்வொரு பிடி கூட்டியும் சாப்பிட்டு இருப்பது .
|
|
சாந்து
|
சந்தனம் ; சந்தனமரம் ; கலவைச் சந்தனம் ; கருஞ்சாந்து ; திருநீறு ; விழுது ; சுண்ணாம்பு ; மலம் .
|
|
சாந்துக்காறை
|
மகளிர் கழுத்தணிவகை .
|
|
சாந்துக்கோய்
|
சாந்துச் செப்பு .
|
|
சாந்துகூட்டுதல்
|
நெற்றிக்கு இடுஞ்சாந்து உண்டாக்குதல் .
|
|
சாந்துப்பொட்டு
|
சாந்தினால் நெற்றியிலிடும் பொட்டு .
|
|
சாந்துப்பொடி
|
மணப்பொடி .
|
|
சாந்துபூசுதல்
|
சந்தனம் முதலியவை பூசுதல் ; சுண்ணாம்பு பூசுதல் .
|
|
சாந்தை
|
மனவமைதியுடையவள் ; பூமி .
|
|
சாப்பறை
|
சாவில் அடிக்கப்படும் பறை .
|
|
சாப்பாக்கொடுத்தல்
|
சுருதியோடு இசைய வேண்டி மத்தளத்தைத் தட்டிப் பார்த்தல் .
|
|
சாப்பாடு
|
உணவு ; நல்ல அடி
|
|
சாப்பிடுதல்
|
உண்ணுதல் ; கைப்பற்றுதல் .
|
|
சாப்பிள்ளை
|
செத்துப் பிறக்கும் பிள்ளை .
|
|
சாப்பை
|
புற்பாய் ; வலிமையில்லாதவன் .
|
|
சாபங்கொடுத்தல்
|
சபித்தல் .
|
|
சாபசரத்தி
|
தவப்பெண் .
|
|
சாபத்திரி
|
சாதிபத்தரி .
|
|
சாபம்
|
வில் ; தனுராசி ; விலங்கின் குட்டி ; தவத்தோர் சபித்துக் கூறும் மொழி .
|
|
சாபமோசனம்
|
சாபத்திலிருந்து விடுபடுதல் .
|
|
சாபல்லியம்
|
பயனுளதாதல் ; சபலபுத்தி .
|
|
சாபலம்
|
விடாப்பற்று ; வான கணித வாக்கிய எண் ; எளிமை .
|
|
சாபனை
|
சாபம் .
|
|
சாபாலன்
|
ஆட்டுவாணிகன் .
|
|
சாபித்தல்
|
சாபமிடுதல் .
|
|
சாபிதா
|
பண்டம் முதலியவற்றின் குறிப்பு .
|
|
சாம்பசிவன்
|
அம்பிகையுடன் கூடிய சிவன் .
|
|
சாம்பம்
|
காண்க : ஆனைநெருஞ்சி .
|
|
சாம்பர்
|
சாம்பல் , எரிந்த நீறு .
|
|
சாம்பல்
|
எரிபட்ட நீறு ; வாடற்பூ ; முதுமை ; நாவல்மரம் ; புகையிலை பருத்திப் பயிர்களைக் கெடுக்கும் பூச்சி .
|
|
சாம்பல்மொந்தன்
|
வாழைவகை .
|
|
சாம்பலச்சி
|
வெடியுப்பு .
|
|
சாம்பலாண்டி
|
உடல் முழுதும் சாம்பல் பூசிய பரதேசி ; கோமாளி .
|
|
சாம்பலொட்டி
|
எருக்கு .
|
|
சாம்பவம்
|
சிவசம்பந்தமானது ; சைவமதபேதம் ; ஒரு புராணம் .
|
|
சாம்பவன்
|
சிவனை வழிபடுவோன் ; இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன் .
|
|
சாம்பவான்
|
சிவனை வழிபடுவோன் ; இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன் .
|
|
சாம்பவி
|
பார்வதி ; ஒரு தீட்சைவகை ; நாவல் வகை .
|
|
சாம்பற்பூசணி
|
பூசணிவகை .
|
|
சாம்பற்பூத்தல்
|
நெருப்பில் நீறுபூத்தல் ; காய் , இலை முதலியவற்றில் சாம்பல்நிறம் படிதல் ; சாம்பல்போல் உடல்வெளுத்தல் .
|
|
சாம்பன்
|
சிவன் .
|
|
சாதுகை
|
காண்க : சாத்துவிகம் .
|
|
சாதுசங்கம்
|
பெரியோருடன் கூட்டுறவு .
|
|
சாதுசரணம்
|
சாதுக்களைச் சரண்புகுதல் .
|
|
சாதுயர்
|
இறப்புத் துன்பம் .
|
|
சாதுர்ப்பாகம்
|
நாலிலொரு பங்கு .
|
|
சாதுரங்கம்
|
நால்வகைப் படை ; மாணிக்கவகை .
|
|
சாதுரம்
|
தேர் .
|
|
சாதுரன்
|
தேர்ப்பாகன் ; அறிவுள்ளன் .
|
|
சாதுரிகன்
|
தேர்ப்பாகன் ; அறிவுள்ளன் .
|
|
சாதுரியம்
|
திறமை ; நாகரிகம் .
|
|
சாதுரியன்
|
திறமையுள்ளவன் .
|
|
சாதுவன்
|
நல்லவன் ; ஐம்புலன்களடக்கியவன் ; அருகன் ; ஆதிரை கணவன் .
|
|
சாதேவம்
|
குழிநாவல்மரம் ; சிறுநாவற்செடி .
|
|
சாந்தம்
|
அமைதி ; பொறுமை ; சந்தனம் ; குளிர்ச்சி ; சாணி ; ஒன்பான் சுவைகளுள் ஒன்று .
|
|
சாந்தம்பி
|
காண்க : சாத்தம்பி
|
|
சாந்தவாரி
|
காண்க : சாத்திரவேரி .
|
|
சாந்தன்
|
அமைதியுடையோன் ; அருகன் ; புத்தன் .
|
|
சாந்தாற்றி
|
சிற்றாலவட்டம் ; பீலிவிசிறி .
|